5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Bigg Boss Tamil Season 8: பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் இவரா?

பிக்பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சியை தற்போது நடிகர் விஜய் சேதுபதி தொகுத்துவரும் நிலையில், கடந்த அக்டோபர் 6ம் தேதி முதல் ஆரம்பமானது. இதனைத் தொடர்ந்து இந்த போட்டியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் முதல் வார ஏவிக்ஷ்சனில் ரவீந்தர், இரண்டாவது வாரம் அர்னவ் மற்றும் தற்போது மூன்றாவது வாரம் நிகழ்ச்சி நடந்து வரும் நிலையில், இந்தவாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு யார் வெளியேறப் போகிறார் என்று மக்கள் மத்தியில் பல குழப்பங்கள் ஏற்பட்ட நிலையில், மூன்றாவது வாரம் வெளியேறப் போகும் நபர் இவராகத்தான் இருக்கவேண்டும் என்ற தகவல்கள் வெளியாகிய வருகின்றனர்.

Bigg Boss Tamil Season 8: பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் இவரா?
பிக் பாஸ் சீசன் 8
barath-murugantv9-com
Barath Murugan | Updated On: 26 Oct 2024 18:44 PM

கடந்த 2017ல் இருந்து தமிழ் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் நிகழ்ச்சிதான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியானது தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், இந்தி , தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற பிற மொழிகளிலும் ஒளிபரப்பாகிவருகிறது. தமிழில் பிக் பாஸ் சீசன் ஆரம்பம் முதல் சீசன் 7 வரை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். தற்போது இவர் சில பல காரணங்களால் இந்த சீசனை தொகுக்க முடியாது என முன்னதாகவே அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்துவழங்கி வருகிறார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 18 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த சீசன் ஆரம்பித்து 20வது நாட்களான நிலையில் முதல் இருவாரா எளிமினேஷனில் ரவீந்தர் மற்றும் அர்னவ் வெளியேற்றப்பட்டனர். தற்போது மூன்றாவது வார நாமினேஷனில் சௌந்தர்யா, பவித்ரா,ஜாக்குலின்,முத்துக்குமரன், தர்ஷா குப்தா, சத்யா மற்றும் அருண் ஆகியோர் நாமினேஷனில் இருக்கின்றனர்.

இதையும் படிங்க :Cinema Rewind: ‘பிரச்சனையைக் கண்டால் ஒதுங்கிடுவாங்க’ – நயன்தாரா குறித்து ஆச்சரியப்பட்ட நடிகை சரண்யா

தமிழ் மக்களிடையே ஆர்வமாகப் பார்த்துவரும் நிகழ்ச்சியில் முக்கியமான தொடராக அமைவது இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சி தொடங்கி தற்போது முன்று வாரங்களைக் கடந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. டிஆர்பி ரேட்டிங்கை அள்ளிக்கொடுக்கும் இந்த நிகழ்ச்சி இந்தியில் 18 சீசன்களை கடந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புகள் பெற்றுவரும் நிலையில் அந்நிகழ்ச்சியை பாலிவுட் பிரபல நடிகர் சல்மான்கான் தொகுத்துவருகிறார். தற்போது நடந்துவரும் 18 சீசனில் தமிழ் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஸ்ருதிகா கலந்து கொண்டுள்ளார்.

இந்தி பிக் பாஸில் தமிழ் போட்டியாளர்களாக முதல் முதலில் கலந்து கொண்டவரும் இவர் தான். தனது குழந்தைத்தனமான பேச்சில் தமிழ் மக்களிடையே பிரபலமான ஸ்ருதிகா தற்போது இந்தி ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறார். இந்நிலையில்  பிக் பாஸ் சீசன் 8 சுமார் 18 போட்டியாளர்கள் சுனிதா, ரவீந்தர் சந்திரசேகர், ஆர்.ஜே.ஆனந்தி, அன்ஷிதா,வி.ஜே. விஷால், அர்னவ், ரஞ்சித், பவித்ரா ஜனனி, அருண் பிரசாத், தீபக்,தர்ஷா குப்தா, தர்ஷிகா, ஜாக்குலின், ஜெப்ரி, செளந்தர்யா, முத்துக்குமார்,சாச்சனா, சத்யா போன்றவர்கள் பங்கேற்றுள்ளனர்.

பல டாஸ்க் மூலமாகப் போட்டியாளர்களிடையே சண்டைகள் மற்றும் போட்டிகளை ஏற்படுத்தும் விதத்தில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் பல டாஸ்க் மற்றும் தலைவருக்கான போட்டிகள் நடந்தன. இதுவரை நடந்த எந்த சீசனிலும் இல்லாதவாறு புதுவிதமாக ஆண்கள் குழு மற்றும் பெண்கள் குழுக்கள் என தனித்தனி அணிகளாக ஒரே விட்டிலில் பிரிக்கப்பட்டு எந்த சீசனிலும் இல்லாதவாறு சற்று வித்தியாசமாக ஆரம்பமானது. இந்நிலையில் மூன்றாவது வாரம் நடந்துவரும் நிலையில் இந்தவார வீட்டின் தலைவராக தர்சிகா இருந்துவருகிறார் . இந்த வாரம் எலிமினேஷன் பிரீ டாஸ்க், ஹோட்டல் டாஸ்க் என வித்தியாச வித்தியாச போட்டிகளால் இந்த வரம் பிக் பாஸ் வீடு செமையாக இருந்தது.

இதையும் படிங்க :Bigg Boss Tamil Season 8: பிக்பாஸில் நாமினேஷன் ஃப்ரீ பாஸ் வென்றது ஆண்களா? பெண்களா? – வைரலாகும் வீடியோ

இதுவரை நடந்த இரு எவிக்சனில் ரவீந்தர் மற்றும் அர்னவ் வெளியான நிலையில் இரண்டாவது வாரம் வெளியேறிய அர்னவ் மிககுந்த சர்ச்சைக்கு உள்ளானார். இதனைதொடர்ந்து இந்த வார நாமினேஷனில் சௌந்தர்யா, பவித்ரா, ஜாக்குலின், முத்துக்குமரன், தர்ஷா குப்தா, சத்யா மற்றும் அருண் மொத்தம் 7 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதில் நேற்று நடந்த எவிக்ஷன் பிரீ டாஸ்கில் நாமினேஷலிலுள்ள போட்டியாளர்கள் கலந்துகொண்டனர் அதில் ஜாக்குலின், அன்ஸிதா மற்றும் பவித்ரா சேர்ந்து பெண் அணியிலிருந்தும் மற்றும் சத்யா, அருண் , முத்துக்குமரன் மற்றும் ரஞ்சித் என அங்க அணியிலிருந்து கலந்து கொண்டனர்.

கடுமையான போட்டியில் இந்த எவிக்ஷன் பிரீ டாஸ்கில் பெண்கள் அணி வெற்றியடைந்தனர். இதில் பவித்ரா கடுமையாக விளையாடியதால் பெண்கள் அனைவரும் கலந்து பேசி இந்த வார எவிக்ஷனிலிருந்து பவித்ராவை விடுதலை செய்துள்ளனர்.

இவரைத் தொடர்ந்து மீதம் 6 நபர்கள் இறுதியை எவிக்ஷனில் இருக்கும் நிலையில் ஆண்கள் அணியில் இருக்கும் சத்யா, ரஞ்சித் மற்றும் முத்துக்குமரன் ஆகியவர்களுக்கு வெளியே மக்களின் ஆதரவு அதிகமாக இருக்கும் காரணத்தால் மீதம் இருக்கும் “தர்ஷா, ஜாக்குலின், மற்றும் அன்ஷிதா” ஆகிய மூன்று பெரும் இறுதி போட்டியாளர்களாக இருப்பார்கள் என்றும் இந்த மூவரில் இன்று தர்ஷா குப்தா வெளியேற்றப்படுவார் எதிர்பார்க்கப்படுகிறது.

 

Latest News