Bigg Boss 8 Contestants: நான் அப்போ பார்த்த ஆள் இல்ல இது… நடிகர் ரஞ்சித்திடம் விஜய் சேதுபதி சரமாரி கேள்வி - Tamil News | Bigg Boss Tamil Season 8 actor ranjith enter the game vijay sethupathy questioned lot | TV9 Tamil

Bigg Boss 8 Contestants: நான் அப்போ பார்த்த ஆள் இல்ல இது… நடிகர் ரஞ்சித்திடம் விஜய் சேதுபதி சரமாரி கேள்வி

Published: 

06 Oct 2024 22:27 PM

ரஞ்சித் தனது அறிமுக வீடியோவில் சமீபத்தில் இணையத்தில் அதிகம் பிரபலமான விஜயகாந்தின் ‘நீ பொட்டு வச்ச தங்க கொடம்’ என்ற பாடலை போட்டு என்ட்ரி கொடுக்கிறார். பிறகு அவர் பேசுகையில், என்னை பல படத்தில் பல பல பெயரில் பார்த்து இருப்பீர்கள். ஆனால், முதன் முதலாக ரஞ்சித்ததாக என்னைப் பார்க்கலாம். இந்த நிகழ்ச்சிக்கு சிலர் பெயருக்காக வருவார்கள், பணத்திற்காக வருவார்கள் எனக்கு இவை அனைத்தும் இருக்கிறது. இருந்தாலும் நான் அன்பை விதைப்பதற்காக இங்கு வந்து இருக்கிறேன். நான் நானாக இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

Bigg Boss 8 Contestants: நான் அப்போ பார்த்த ஆள் இல்ல இது... நடிகர் ரஞ்சித்திடம் விஜய் சேதுபதி சரமாரி கேள்வி

ரஞ்சித், விஜய் சேதுபதி

Follow Us On

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக கலந்துகொண்ட நடிகர் ரஞ்சித்திடம் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான நடிகர் விஜய் சேதுபதி சரமாரியாக பல கேள்விகளை எழுப்பியுள்ளார். அது இணையத்தில் தற்போது வைர்லாகி வருகின்றது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி இன்று தொடங்கி ஒளிபரப்பாகி வருகின்றது. விஜய் டிவியின் பிக்பாஸ்  நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் பல முன்னணி நட்சத்திரங்கள் இதுவரை தொகுத்து வழங்கி வந்துள்ளனர். தமிழில் 7 சீசன்கள் முடிவடைந்த நிலையில் அடுத்ததாக 8-வது சீசன் இன்று முதல் ஒளிபரப்பாக உள்ளது. முன்னதாக 7 சீசனை உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார். அவர் நிகழ்ச்சியை விட்டு விலகிய நிலையில் தற்போது இந்த 8-வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிறார்.

பொன்விலங்கு திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரஞ்சித். சிந்து நதி பூ, மைனர் மாப்பிள்ளை, அவதார புருஷன், பாரதி கண்ணம்மா, மறுமலர்ச்சி, நினைத்தேன் வந்தாய், நட்புக்காக, தேசிய கீதம், புதுமைப்பித்தன், சேரன் சோழன் பாண்டியன், நினைவிருக்கும் வரை, சபாஷ், பாண்டவர் பூமி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். பின்னர் சில வருடங்களாக சினிமாவில் வாய்ப்புகள் குறைந்த நிலையில் சின்னத்திரையில் நடிக்கத் தொடங்கினார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலிலும் நடித்து வந்தார்.

இந்த நிலையில் அவர் சமீபத்தில் இயக்கிய கவுண்டம்பாளையம் படம் பல சர்ச்சைகளை சந்தித்தது. படம் குறித்து பல்வேறு செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் ரஞ்சித் பேசும் போது, நாடகக் காதல், சமூக நீதி, இட ஒதுக்கீடு என அவர் பேசிய அனைத்தும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இவர் தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.

ரஞ்சித் தனது அறிமுக வீடியோவில் சமீபத்தில் இணையத்தில் அதிகம் பிரபலமான விஜயகாந்தின் ‘நீ பொட்டு வச்ச தங்க கொடம்’ என்ற பாடலை போட்டு என்ட்ரி கொடுக்கிறார். பிறகு அவர் பேசுகையில், என்னை பல படத்தில் பல பல பெயரில் பார்த்து இருப்பீர்கள். ஆனால், முதன் முதலாக ரஞ்சித்ததாக என்னைப் பார்க்கலாம். இந்த நிகழ்ச்சிக்கு சிலர் பெயருக்காக வருவார்கள், பணத்திற்காக வருவார்கள் எனக்கு இவை அனைத்தும் இருக்கிறது. இருந்தாலும் நான் அன்பை விதைப்பதற்காக இங்கு வந்து இருக்கிறேன். நான் நானாக இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து விஜய் சேதுபதி ரஞ்சித்திடம் பேசுகையில், என்ன சார் உங்க இண்ட்ரோவ நீங்களே டைரக்ட் பன்னி உங்கள் நீங்களே புகழ்ந்துகிட்டீங்களா என்று நக்கலாக கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய விஜய் சேதுபதி நீங்க இயக்கிய பீஷ்மர் படம் எனக்கு பிடிக்கும் ஆனா அதுகப்பறம் உங்களுக்கு என்ன ஆச்சு நான் அப்போ பார்த்த ரஞ்சித் இல்ல இது. இல்ல இது தான் நீங்களா என்று கேள்விகளை சரமாரியாக எழுப்பினார். எதற்கும் பதிலளிக்க முடியாமல் மலுப்பல் சிரிப்புடன் விஜய் சேதுபதியிடம் பேசிவிட்டு வீட்டுகுள் சென்றார் ரஞ்சித். இதனை பார்த்த ரசிகர்கள் இருக்கு சம்பவம் இருக்கு என சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த பிரச்சனை இருந்தால் கொய்யாப்பழம் சாப்பிடக்கூடாதாம்..
தினமும் வெல்லம் கலந்த பால் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?
பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ள காலிஃபிளவர்..!
உடலுக்கு ஊட்டச்சத்துகளை தாராளமாக தரும் புளி..
Exit mobile version