பிக்பாஸ் தமிழ் சீசன் 8-ல் கலந்துக்க போறது இவங்கதானா? இணையத்தில் பரவும் செய்தி
Bigg Boss Tamil Season 8: முதல் சீசனில் ஆரவ் கோப்பையை வென்றார், அதே சமயம் ரித்விகா இரண்டாவது சீசனில் பாடகர் மற்றும் நடிகர் முகேன் ராவ் மூன்றாவது சீசனையும், நடிகர்கள் ஆரி அர்ஜுனா மற்றும் ராஜு ஜெயமோகன் நான்காவது மற்றும் ஐந்தாவது சீசனில் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். ஆறாவது மற்றும் ஏழாவது சீசனில் அசீம் மற்றும் அர்ச்சனா வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி விரைவில் தொடங்க உள்ள நிலையில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் இணையத்தில் பரவி வருகின்றது. விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகிவருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் பல முன்னணி நட்சத்திரங்கள் இதுவரை தொகுத்து வழங்கி வந்துள்ளனர். தமிழில் 7 சீசன்கள் முடிவடைந்த நிலையில் அடுத்ததாக 8-வது சீசனுக்கான தகவல்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.இந்த நிகழ்ச்சியை முன்னணி நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்களின் பார்வை மொத்தமும் நிகழ்ச்சி போட்டியாளர்களின் தேர்வு பட்டியலின் பக்கம் சென்றது.
முதல் சீசனில் ஆரவ் கோப்பையை வென்றார், அதே சமயம் ரித்விகா இரண்டாவது சீசனில் பாடகர் மற்றும் நடிகர் முகேன் ராவ் மூன்றாவது சீசனையும், நடிகர்கள் ஆரி அர்ஜுனா மற்றும் ராஜு ஜெயமோகன் நான்காவது மற்றும் ஐந்தாவது சீசனில் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். ஆறாவது மற்றும் ஏழாவது சீசனில் அசீம் மற்றும் அர்ச்சனா வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
முந்தைய 6 சீசன்களின் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு போட்டிகள் வழங்கி சண்டை போட்டுக்கோங்க என்று நிகழ்ச்சி குழு விட்டுவிடும். ஆனால் இறுதியாக வெளியான 7-வது சீசனில் பிக்பாஸ் ஸ்மால் பாஸ் என வீட்டில் உள்ளவர்களை இரண்டு அணிகளாக பிரித்து நேரடியாகவே மோதிக்கொள்ள வழி செய்தது. இதனால் நிகழ்ச்சி ஆரம்பித்து இரண்டாவது வாரங்களில் வரவேண்டிய சண்டைகள் கடந்த சீசனின் இரண்டாவது நாளே தொடங்கியது. அதே போல தற்போது வரும் 8-வது சீசனிலும் பிக்பாஸ் ஸ்மால் பாஸ் என்று வீடு இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் தொலைக்காட்சிகளில் பெரிய அளவில் டி.ஆர்.பி கொண்ட நிகழ்ச்சியாக மாறியது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 7 சீசன்கள் இதுவரை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. பிக்பாஸ் 8 நிகழ்ச்சி இந்த செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் தற்போது ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிந்தவுடன் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Also read… சிறகடிக்க ஆசை சீரியல் முத்து பெயரில் நடந்த மோசடி… நடிகர் வெளியிட்ட வீடியோ
பிக் பாஸ் குழு இந்த முறை போட்டியாளர்கள் தேர்வில் ரொம்பவே கவனத்துடன் செயல்படுகிறது என்றும் போட்டியாளர்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருவதாக கூறுகின்றனர். அந்த வகையில் இந்த சீசனில் போட்டியாளர்களாக பங்கேற்பவர்கள் இவர்கள் தான் என்ற பட்டியள் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில், அமலா சாஜி, டிடிஎஃப் வாசன், ஷாலினி சோயா, மாகாபா ஆனந்த், கிரண், சோனியா அகர்வால் போன்றவர்கள் பங்கேற்களாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.