5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Bigg Boss Tamil Season 8: மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த சாச்சனா… அதிர்ச்சியில் போட்டியாளர்கள்!

கடந்த 6-ம் தேதி 8-வது சீசன் தொடங்கியது. இதில், ரவீந்தர் சந்திரசேகர், அன்ஷிதா, அருண் பிரசாத், தீபக், தர்ஷா குப்தா, தர்ஷிகா, ஜாக்குலின், ஜெப்ரி, முத்துக்குமார், அர்னவ், பவித்ரா ஜனனி, ரஞ்சித், ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, சத்யா, செளந்தர்யா, சுனிதா, வி.ஜே. விஷால் என 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர்.

Bigg Boss Tamil Season 8: மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த சாச்சனா… அதிர்ச்சியில் போட்டியாளர்கள்!
பிக்பாஸ்
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 11 Oct 2024 11:27 AM

பிக்பாஸ் வீட்டில் இருந்து முதல் நாளே வெளியேற்றப்பட்ட சாச்சனா மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் இன்று வந்துள்ள வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்களின் பார்வை மொத்தமும் நிகழ்ச்சி போட்டியாளர்களின் தேர்வு பட்டியலின் பக்கம் சென்றது. முதல் சீசனில் ஆரவ் கோப்பையை வென்றார், அதே சமயம் ரித்விகா இரண்டாவது சீசனில் பாடகர் மற்றும் நடிகர் முகேன் ராவ் மூன்றாவது சீசனையும், நடிகர்கள் ஆரி அர்ஜுனா மற்றும் ராஜு ஜெயமோகன் நான்காவது மற்றும் ஐந்தாவது சீசனில் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். ஆறாவது மற்றும் ஏழாவது சீசனில் அசீம் மற்றும் அர்ச்சனா வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து 100 நாட்கள் ஒளிபரப்பப்படும் இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார். விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் பல முன்னணி நட்சத்திரங்கள் இதுவரை தொகுத்து வழங்கி வந்துள்ளனர். கடந்த 7 சீசன்களாக நடிகர் கமல் ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வந்த நிலையில் அவர் நிகழ்ச்சியை விட்டு விலகிய பிறகு தற்போது விஜய் சேதுபதி இந்த 8-வது சீசனை தொகுத்து வழங்குகிறார்.

Also read… நான் மதம் மாறினேன் என்று உங்களுக்கு தெரியுமா? நடிகை பிரியாமணி காட்டம்

இந்த நிலையில் கடந்த 6-ம் தேதி 8-வது சீசன் தொடங்கியது. இதில், ரவீந்தர் சந்திரசேகர், அன்ஷிதா, அருண் பிரசாத், தீபக், தர்ஷா குப்தா, தர்ஷிகா, ஜாக்குலின், ஜெப்ரி, முத்துக்குமார், அர்னவ், பவித்ரா ஜனனி, ரஞ்சித், ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, சத்யா, செளந்தர்யா, சுனிதா, வி.ஜே. விஷால் என 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர்.

நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் பார்வையாளர்களிடம் உரையாடிய விஜய் சேதுபதி, “இந்த முறை ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு” எனும் பிக்பாஸ் தீமுக்கு ஏற்றவாறு, பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக, பங்கேற்பாளர்களிலிருந்து ஒருவர், 24 மணி நேரத்தில் வெளியேற்றப்படவுள்ளார் என அறிவித்தார். இந்த அறிவிப்பு போட்டியாளர்கள் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதில் யார் வெளியேறப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்த நிலையில் நேற்று பிக்பாஸ் அறிவுறுத்தலின்படி நாமினேஷன் நடைப்பெற்றது.

Also read… டிசம்பரில் வெளியாகிறது அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2 தி ரூல்’… படக்குழு வெளியிட்ட அப்டேட்

அதில் சக போட்டியாளர்களின் அதிக வாக்குகளைப் பெற்ற சாச்சனா நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார். அதனை தொடர்ந்து வீட்டில் இந்த வாரம் ஆளப் போவது தலைவனா அல்லது தலைவியா என்ற அடிப்படையில் போட்டி நடைப்பெற்றது. இதில் பெண்கள் அணியில் இருந்து தர்ஷிகா வெற்றிப்பெற்றார். இதனால் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் தலைவி தான் என்பது உறுதியானது.

அதனை தொடர்ந்து இந்த வாரத்திற்கான நாமினேஷன் ப்ராசஸ் நடைப்பெற்றது. அதில், ரவீந்தர் சந்திரசேகர், அருண் பிரசாத், ஜாக்குலின், முத்துக்குமார், சௌந்தர்யா, ரஞ்சித் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்த வார இருதியில் இவர்களில் இருந்து ஒருவர் வெளியேறுவார் என்பது குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் இன்று 5-வது நாளிற்கான முதல் ப்ரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில் முதல் நாளே வெளியேற்றப்பட்ட சாச்சனா மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளது தெரியவந்தது. அவரை பார்த்து போட்டியாளர்கள் அனைவரும் கொண்டாடித் தீர்த்தனர். அதனை தொடர்ந்து போட்டியாளர்களின் முன்னிலையில் பேசிய சாச்சனா இந்த வீட்டில் யார் லீஸ்ட் கண்டெண்ட் கொடுக்கிறார்கள் என்று பேசுகிறார். அதில் ரஞ்சித், சத்யா, விஜே விஷால் ஆகிய மூன்று பேர் பேரையும் கூறிகிறார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

Latest News