Bigg Boss Tamil: யார் கெத்து ஆண்களா? பெண்களா? புது டாஸ்க் குறித்து நொந்து பேசும் தர்ஷா குப்தா..! - Tamil News | Bigg Boss Tamil season 8 show crew released first Two promo video for 11th day | TV9 Tamil

Bigg Boss Tamil: யார் கெத்து ஆண்களா? பெண்களா? புது டாஸ்க் குறித்து நொந்து பேசும் தர்ஷா குப்தா..!

ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற விதத்தில் வித்தியாசமான சீசனாக வெளியாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 8 தமிழ். ஆண்கள் விசஸ் பெண்கள் என டீம் டீமாக விளையாடிவரும் இந்த நிகழ்ச்சியைப் பிரபல நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வருகிறார். வித்தியாசமான முறைகளைப் போட்டியாளர்கள் விளையாடும் இந்த நிகழ்ச்சியைத் தமிழ் ரசிகர்கள் அனைவரும் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர்.

Bigg Boss Tamil: யார் கெத்து ஆண்களா? பெண்களா? புது டாஸ்க் குறித்து நொந்து பேசும் தர்ஷா குப்தா..!

பிக் பாஸ் சீசன் 8 தமிழ்

Published: 

17 Oct 2024 19:03 PM

பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் கடந்த சீசன்களில்  மாதிரி இல்லாமல்  இந்த சீசனில் புதிய விதத்தில் போட்டியாளர்களிடம் போட்டிகள் நடந்து வருகிறது. அந்த விதத்தில் ஆண்கள் தனிக் குழு மற்றும் பெண்கள் தனிக்கு என இரண்டு குழுக்களாக ஒரே வீட்டில் போட்டியிட்டு வருகின்றனர்.இதில் ஆண்கள் குழு ஒற்றுமையாக இருந்தாலும் பெண்கள் குழு தங்களுக்குள்ளேயே சண்டையிடுகின்றனர். இந்த நிலையில் மக்கள் தங்களின் கருத்துக்களை பிக்பாஸ் நிகழ்ச்சிக்குத் தெரியும் விதத்தில் ட்ரோல் செய்து வருகின்றனர். இந்நிலையில் 11வது நாளான இன்று முதல் இரு பிரமோக்களை பிக்பாஸ் குழு வெளியிட்டுள்ளது. இதில் யார் கெத்து ஆண்களா..? இல்லை பெண்களா..? என்ற விதத்தில் டாஸ்க் நடப்பது போல் மாதிரி வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் இதுவரை வெளியான சீசன்களில் இல்லாத மாதிரி புதுவிதமாக இந்த சீசனில் முதல் நாளிலே நாமினேஷன் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். இந்த நிகழ்வு மக்களை மட்டுமல்ல போட்டியாளர்களையும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சி தொடங்கும் முன்னே “ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு” என்ற எண்ணத்தில் மக்கள் இந்த சீசன் சும்மா மாஸ் தான் என்றும் கூறிவருகின்றனர்.

இதையும் படிங்க :Bigg Boss 8 Tamil : சூடு பிடிக்கும் ஆட்டம்.. யார் பெஸ்ட்? சண்டையில் பிக்பாஸ் வீடு..!

அந்த விதத்தில் பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்களாக ரவீந்தர் சந்திரசேகர், அன்ஷிதா, அருண் பிரசாத், தீபக், தர்ஷா குப்தா, தர்ஷிகா, ஜாக்குலின், ஜெப்ரி, முத்துக்குமார், அர்னவ், பவித்ரா ஜனனி, ரஞ்சித், ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, சத்யா, செளந்தர்யா, சுனிதா, வி.ஜே. விஷால் என 18 போட்டியாளர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். இதில் இந்தவாரம் நடந்த எவிக்ஷனில் ரவீந்தர் வெளியேற்றப்பட்டார். இவர் இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின்பு பிக் பாஸ் போட்டியாளர்களைப் பற்றிப் பேசி வீடியோக்களை வெளியிட்டிருந்தார். இது மக்கள் மற்றும் பிக் பாஸ் ரசிகர்களிடையே இப்படியா நடந்துச்சு என்ற கேள்வி எழுப்பும் கோணத்திலிருந்தது.

இந்த நிலையில் ரவிந்தர்க்கு நடந்த ஏவிக்ஷன் நியாயமான முறையில் நடக்கவில்லை என்றும், அவர் இருந்திருந்தால் ரவீந்தர் தான் இந்த சீசனில் வெற்றியாளராக இருந்திருப்பார் என்று பலர் தங்களின் கருத்துக்களை ரவிந்தருக்கு சாதகமாகத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க :Bigg Boss Tamil Season 8: பிக்பாஸில் ஆண்கள் அணியில் வெடியை கொளுத்தி போட்ட தர்ஷா… கொண்டாட்டத்தில் பெண்கள்

இந்நிலையில் 10வது நாளான நேற்று வெளியான எபிசோடில் யார் பெஸ்ட் என முத்துக்குமாரன், விஷால் மற்றும் ஆனந்தி இவர்கள் மூவரும் மோதிக்கொள்ளுவது போல் இருந்தது. இதில் யார் பெஸ்ட் என்ற இடத்திற்குப் போட்டியிட்டனர். ஒவ்வொருவரும் தனது வாதங்களை முன்வைத்த நிலையில் ஹவுஸ்மேட்ஸிடம் முத்துக்குமாரன் வாக்குவாதம் செய்தார். அதில் எல்லாரும் நம்ம இங்க தனிப்பட்ட விதமாகத்தான் விளையாட வந்திருக்கிறோம், குழுவாக விளையாடி ஜெயிக்க யாரும் வரவில்லை என்று கூறியது நேற்று பிக் பாஸ் வீட்டில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் 11வது நாளான இன்று ஹவுஸ்மேட்ஸ் இடையே ஆண்கள் மற்றும் பெண்கள் என இந்த வீட்டில் யார் கெத்து என்ற கோணத்தில் இந்த முதல் பிரமோவில் வெளியாகியது.

இதையும் படிங்க :Cinema Rewind: “மார்வெல்ஸ் படம் போலதான் பிளான்” இயக்குநர் ஷங்கர் சொன்ன விஷயம்

இந்த பிரமோவில் யார் கெத்து என்று எந்த குழு அறிவில் சிறந்தது, டீமில் சிறந்து மற்றும் வலிமையில் சிறந்து எனப் போட்டி ஒன்று நடக்கிறது. இந்த டாஸ்கின் முடிவில் ஒரு குழுவிற்கு நாமினேஷனிலிருந்து விடுதலை என்ற விதத்தில் இந்த போட்டி நடக்கிறது. இதில் முதல் டாஸ்கான அறிவில் சிறந்தவர் யார் என்ற கோணத்தில் கேள்விகள் கேட்கப்பட்டது இதில் தீபக், அர்னவ் மற்றும் அருண் என மூவரும் மோதிக் கொள்ளவும் விதத்தில் இருக்கிறது.

இரண்டாவதாக வெளியான பிரமோவில் இந்த வாரச் சமையல் டீமில் தர்ஷா குப்தா செய்த சமையல் நன்றாக இல்லை என்ற விதத்தில் ஹவுஸ்மேட்ஸ் கூறிய நிலையில் தர்ஷா, தர்சிகா மற்றும் ஜாக்குலின், விஷாலிடம் கூறி அழுவது போல் மற்றும் “நான் ஏற்கனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நன்றாகச் சமைத்தேன் என்று எல்லோரும் கூறினார்கள். இப்போது இவர்கள் இப்படிச் சொன்னால் வெளியே இருக்கும் மக்கள் என்ன எப்படி நினைப்பார்கள் என்று தர்ஷா குப்தா கூறியபடி இந்த இரண்டாவது பிரமோவில் உள்ளது.

இதையும் படிங்க :ஃபேஷன் டிசைனர் டூ சினிமா.. கீர்த்தி சுரேஷ் குறித்த சுவாரஸ்ய விஷயங்கள்!

பான் இந்திய நடிகை இந்த குழந்தை...
நாளை தியேட்டரில் என்னென்ன படங்கள் ரீலீஸ் தெரியுமா?
குழந்தைகளுக்கு அடிக்கடி ஏன் வயிற்று உப்பசம் ஏற்படுது தெரியுமா?
தேங்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்...