Bigg Boss Tamil Season 8: பிக்பாஸில் ஆண்கள் பெண்கள் கலந்து விளையாடும் டாஸ்க்… நடக்கப்போவது ஜாலியா? சண்டையா? - Tamil News | Bigg Boss Tamil season 8 show crew released promo video for 18th day october 24th | TV9 Tamil

Bigg Boss Tamil Season 8: பிக்பாஸில் ஆண்கள் பெண்கள் கலந்து விளையாடும் டாஸ்க்… நடக்கப்போவது ஜாலியா? சண்டையா?

இந்த வார கேப்டனாக தர்ஷிகா இரண்டாவது முறையாக தேர்வானார். அதனைத் தொடர்ந்து,  இந்த வார நாமினேஷனில் பவித்ரா, சௌந்தர்யா, ஜாக்குலின், அன்ஷிதா, தர்ஷா, முத்துகுமரன், அருண், சத்யா ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர்.

Bigg Boss Tamil Season 8: பிக்பாஸில் ஆண்கள் பெண்கள் கலந்து விளையாடும் டாஸ்க்... நடக்கப்போவது ஜாலியா? சண்டையா?

பிக்பாஸ்

Published: 

24 Oct 2024 11:14 AM

பிக்பாஸ் தமிழ் சீசன் 8-ன் 18-வது நாளிற்கான முதல் ப்ரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. கடந்த 6-ம் தேதி பிக்பாஸ் தமிழ் 8-வது சீசன் தொடங்கியது. இதில், ரவீந்தர் சந்திரசேகர், அன்ஷிதா, அருண் பிரசாத், தீபக், தர்ஷா குப்தா, தர்ஷிகா, ஜாக்குலின், ஜெப்ரி, முத்துக்குமார், அர்னவ், பவித்ரா ஜனனி, ரஞ்சித், ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, சத்யா, செளந்தர்யா, சுனிதா, வி.ஜே. விஷால் என 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர். விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் பல முன்னணி நட்சத்திரங்கள் இதுவரை தொகுத்து வழங்கி வந்துள்ளனர்.

கடந்த 7 சீசன்களாக நடிகர் கமல் ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வந்த நிலையில் அவர் நிகழ்ச்சியை விட்டு விலகிய பிறகு தற்போது விஜய் சேதுபதி இந்த 8-வது சீசனை தொகுத்து வழங்குகிறார். பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக, பங்கேற்பாளர்களிலிருந்து ஒருவர், 24 மணி நேரத்தில் வெளியேற்றப்படவுள்ளார் என அறிவித்தார். இந்த அறிவிப்பு போட்டியாளர்கள் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதில் யார் வெளியேறப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்த நிலையில் முதல் வார திங்கள் அன்று பிக்பாஸ் அறிவுறுத்தலின்படி நாமினேஷன் நடைப்பெற்றது. அதில் சக போட்டியாளர்களின் அதிக வாக்குகளைப் பெற்ற சாச்சனா நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார். பின்னர் அதே வாரம் வெள்ளி அன்று மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார் சாச்சிதா.

Also read… Cinema Rewind: இந்திய திரையுலகில் மலையாள சினிமாதான் பெஸ்ட்… ஆண்ட்ரியா சொன்ன விஷயம்!

இந்த நிலையில் முதல் வார நாமினேஷனில் இடம் பிடித்த ரவீந்தர் குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து கடந்த வார நாமினேஷனில் இடம் பிடித்த அர்னவ் குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். மேலும் இந்த வார கேப்டனாக தர்ஷிகா இரண்டாவது முறையாக தேர்வானார். அதனைத் தொடர்ந்து,  இந்த வார நாமினேஷனில் பவித்ரா, சௌந்தர்யா, ஜாக்குலின், அன்ஷிதா, தர்ஷா, முத்துகுமரன், அருண், சத்யா ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர்.

Also read… மனிதர்கள் எப்போது பலமானவர்களாக மாறுகிறார்கள் தெரியுமா? – சமந்தா சொன்ன விஷயம்

இந்த வாரத்திற்கான நாமினேஷன் ஃப்ரீ டாஸ்கில் இதுவரை இரண்டு விளையாட்டுகள் முடிந்துள்ளது. இதில் ஆண்கள் அணியினர் முதல் விளையாட்டில் வெற்றிப்பெற்றனர். பெண்கள் அணியினர் இரண்டாவது விளையாட்டில் வெற்றிப்பெற்றனர். மொத்தம் மூன்றில் இதுவரை ஆண்கள் மற்றும் பெண்கள் சமநிலையில் இருப்பதால் இன்று நடைபெறும் இறுதி விளையாட்டான மூன்றாவது விளையாட்டில் யார் வெற்றி பெறுகிறார்களோ அந்த அணிக்கே நாமினேஷன் ஃப்ரீ பாஸ் கிடைக்கும். அதன் மூலம் அந்த அணியில் இந்த வார நாமினேஷனில் இருக்கும் நபர் யாரேனும் காப்பாற்றப்படுவார். இன்று நடைபெறும் விளையாட்டில் தெரியும் யாருக்கு நாமினேஷன் ஃப்ரீ பாஸ் கிடைக்கப்போகிறது என்பது.

இந்த நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீடு ஸ்டார் ஹோட்டலாக மாறி ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் மாறி மாறி ஹோட்டல் ஊழியர்கள் மற்றும் கஸ்டமர்களாக கடந்த 3 நாட்களாக விளையாடி வந்தானர். இந்த நிலையில் இன்று ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் கலந்து அதில் பெஸ்ட் மற்றும் வொர்ஸ்ட் பர்பாமன்ஸ் செய்தவர்கள் யார் என்பதை தேர்வு செய்து பெஸ்டாக இருப்பவர்கள் ஹோட்டல் கஸ்டமர்களாகவும், வொர்ஸ்டாக இருப்பவர்கள் ஊழியர்களாகவும் விளையாட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது ஜாலியாக செல்லுமா அல்லது சண்டையாக மாறுமா என்பது இன்றைய எபிசோட் வெளியாகும் போது தெரியவரும்.

டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க என்ன சாப்பிட வேண்டும்?
சியா விதைகளுடன் இந்த உணவுகளை ஒரு போதும் சேர்க்கக்கூடாது..!
இந்தியாவில் வெளிநாட்டு பயணிகள் அதிகம் செல்லும் இடங்கள்!
சமைக்கும்போது செய்யக்கூடாத தவறுகள்..!