ரஜினியின் கூலி படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்! - Tamil News | Bollywood Actor Amir Khan will act in Rajinis Coolie Movie | TV9 Tamil

ரஜினியின் கூலி படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்!

தளபதி விஜய்யை வைத்து 'மாஸ்டர்' மற்றும் 'லியோ' என இரண்டு ஹிட் படங்களையும், உலகநாயகன் கமல்ஹாசனுக்கு 'விக்ரம்' என்கிற பிளாக்பஸ்டர் வெற்றி படத்தையும் இயக்கிய லோகேஷ் கனகராஜ், முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது.

ரஜினியின் கூலி படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர்!

ரஜினி

Published: 

13 Oct 2024 17:49 PM

நடிகர் ரஜினியின் கூலி படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் நடிக்க உள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170 வது திரைப்படமாக கடந்த 10-ம் தேதி வெளியான படம் வேட்டையன். இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரஜினி நடித்துள்ள ‘வேட்டையன்’ ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியானது. தவறு செய்தால், என்கவுண்டர் தான் ஒரே தீர்ப்பு என்று நினைக்கும் ரஜினி, என்கவுண்டரே இருக்க கூடாது என்று போராடும் அமிதாப் இருவருக்கும் நடக்கும் மோதல் படத்தின் கதை.

துஷாரா விஜயன் சென்னையில் ஒரு வேலை வருகிறார். அப்படி வந்த இடத்தில், அசல் கோளாரால் கொலை செய்யப்பட, ரஜினி, அசல் கோளாரை என்கவுண்டர் செய்யப்படுகிறார். பின் அவன் நல்லவன் என்பது தெரியவர, துஷாராவை கொன்றது யார் என்ற தேடுதலை ரஜினி தொடங்க அதன் பின் என்ன ஆனது என்பது தான் படத்தின் கதை.

இந்தப் படத்தை தொடர்ந்து லோகேஷ் உடன் கூட்டணி வைத்த ரஜினி தனது 171-வது படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.  அன்பறிவு ஸ்டண்ட் இயக்குநர்களாக பணியாற்றுகின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்தப் படத்தின் போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து படத்திற்கான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.

தளபதி விஜய்யை வைத்து ‘மாஸ்டர்’ மற்றும் ‘லியோ’ என இரண்டு ஹிட் படங்களையும், உலகநாயகன் கமல்ஹாசனுக்கு ‘விக்ரம்’ என்கிற பிளாக்பஸ்டர் வெற்றி படத்தையும் இயக்கிய லோகேஷ் கனகராஜ், முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது.

Also read… தேசிய விருது வென்ற மகிழ்ச்சி… குடும்பத்துடன் கொண்டாடிய நித்யா மேனன்!

விறுவிறுப்பாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்களின் அறிமுக போஸ்டர் கடந்த 28-ம் தேதியில் இருந்து படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் முன்னதாக மலையாள நடிகரான சௌபின் ஷாகிரின் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டது. இவரைத் தொடர்ந்து டோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகர் நாகர்ஜுனாவின் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டது. பின்னர் வரிசையாக ஸ்ருதிஹாசன், சத்யராஜ், உபேந்திரா ஆகியோரின் போஸ்டர்களும் வரிசையாக படக்குழு வெளியிட்டது. இந்தப் படத்தில் ரஜினியின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன்படி ரஜினி இந்த படத்தில் தேவா என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

Also read… ஓஹ் க்யூட்டி… நீ ஸ்வீட்டி… ஹேப்பி பர்த்டே பூஜா ஹெக்டே!

ரஜினியின் கூலி படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமத்தை 65 கோடிக்கு விற்பனை செய்ய படத்தின் தயாரிப்பு நிறுவனம் பேரம் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த டீல் முடிக்கப்பட்டால் அதிக விலைக்கு விற்பனையான தமிழ் திரைப்படமாக கூலி படம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்களில் இருந்து மாறுபட்டு வித்யாசமான கதைக்களம் கொண்ட படமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

கூலி படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நிறைவு பெற்றது. கடந்த சில மாதங்களாக இந்த படத்தில் ஹிந்தி நடிகர் அமீர்கான் நடிக்கவுள்ளதாக தகவல் பரவியது. தற்போது இதில் அமீர் கான் நடிப்பது உறுதியாகியுள்ளது. கூலியின் அடுத்தகட்ட படப்பிடிப்பு வருகின்ற அக்டோபர் 17ம் தேதி அன்று சென்னையில் துவங்குகிறது. இதில் ரஜினி சம்மந்தப்பட்ட நிறைய சண்டை காட்சிகள் மற்றும் அமீர் கான் காட்சிகளும் படமாக்கபடுவதாக கூறப்படுகிறது.

வெறும் வயிற்றில் வால்நட் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும்?
தண்ணீரின்றி உயிர் வாழும் பாலைவன விலங்குகள் என்னென்ன?
உங்களைச் சுற்றி மகிழ்ச்சியான உறவுகளை உருவாக்குவது எப்படி?
மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் அப்துல் கலாமின் பொன்மொழிகள்...!