5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

”மனிதாபிமானமே இல்லாமல் நடந்து கொண்டார் அமலா பால்” – மேக்கப் கலைஞர் குற்றச்சாட்டு!

பிரபலமான சினிமா மேக்கப் கலைஞராக மற்றும் சிகை அலங்கார நிபுணராக இருப்பவர் ஹேமா. இவர் பல முன்னணி நடிகைகளுக்கு மேக்கப் மேனாக இருந்து வருகிறார். அண்மையில், இவர் தனது மேக்கப் அனுபவம் குறித்து இந்தி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில், தனக்கு நடிகை அமலாபாலிடம் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

”மனிதாபிமானமே இல்லாமல் நடந்து கொண்டார் அமலா பால்” – மேக்கப் கலைஞர் குற்றச்சாட்டு!
அமலா பால்
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 02 Jul 2024 10:14 AM

அமலா பால் கொஞ்சம் கூட மனிதாபிமே இல்லாமல் எங்களிடம் நடந்துகொண்டார் என்று பிரபல மேக்கப் கலைஞர் ஹேமா கூறியது கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை அமலாபால் சிந்து சமவெளி என்ற படத்தில் சர்ச்சையான காதாப்பாத்திறத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். முதல் படமே தமிழில் சர்ச்சையை ஏற்படுத்தினாலும் அடுத்ததாக அமலா பால் நடிப்பில் தமிழில் வெளியான மைனா படம் ஏராளமான ரசிகர்களிடையே அவருக்கு நல்ல வரவேற்பைக் கொடுத்தது. தொடர்ந்து விஜயுடன் தலைவா, தனுஷ் உடன் வேலையில்லா பட்டதாரி என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கத் தொடங்கினார் அமலா பால். தற்போது தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான தெய்வத் திருமகள் படத்திற்கு பிறகு இயக்குநர் ஏ.எல்.விஜயை காதலித்து திருமணம் செய்துகொண்டார் அமலா பால். திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்ததால் அமலா பாலுக்கும் இயக்குனர் ஏ.எல்.விஜய்க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.

அதனை தொடர்ந்து அமலா பால், ஜகத் தேசாய் இருவருக்கும் கடந்தாண்டு நவம்பர் 6ஆம் தேதி திருமணம் நடந்தது. ஜகத் தேசாய் கோவாவில் உள்ள பிரபல சொகுசு வில்லாவின் மேலாளராக உள்ளார். அங்கு சென்ற போது அமலா பாலிற்கும் ஜகத் தேசாய் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது காதலாக மலர்ந்ததைத் தொடர்ந்து இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு ஜனவரி மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாக நடிகை அமலா பால் அறிவித்தார். கடந்த சில மாதங்களா தொடர்ந்து தனது கர்ப்பகால புகைப்படங்களையும் அமலா பால் வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் நடிகை அமலா பால் – ஜகத் தேசாய் தம்பதிக்கு கடந்த ஜூன் 11ஆம் தேதி அழகிய ஆண் குழந்தை பிறந்ததாக அமலா பால் மற்றும் ஜகத் தேசாய் இருவரும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்தனர். தங்களின் குழந்தைக்கு மிகவும் வித்தியாசமாக இலை (ILAI) என பெயர் வைத்துள்ளனர். இதுகுறித்த வீடியோ மற்றும் புகைப்படத்தை அவர்கள் வெளியிட அது வைரலானது.

இப்படியான நிலையில் பிரபலமான சினிமா மேக்கப் கலைஞராக மற்றும் சிகை அலங்கார நிபுணராக இருப்பவர் ஹேமா. இவர் பல முன்னணி நடிகைகளுக்கு மேக்கப் மேனாக இருந்து வருகிறார். அண்மையில், இவர் தனது மேக்கப் அனுபவம் குறித்து இந்தி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில், தனக்கு நடிகை அமலாபாலிடம் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில், நான் ஒருமுறை நடிகை அமலா பாலின் படப்பிடிப்புக்கு சென்றேன். அப்போது ஏப்ரல் மற்றும் மே மாதம் என்பதால் கடுமையான வெயில் இருந்தது. படப்பிடிப்பு நடந்த இடத்தில் நிழலோ, மரமோ இல்லாததால் கொஞ்ச நேரம் கூட எங்கேயும் அமர முடியவில்லை. அங்கிருந்த சில பெண்களும் தவித்தனர்.

Also read… OTT Movies: மலையாள சினிமாவின் டாப் 10 ஃபீல்குட் படங்கள் இதோ!

இதனால், அங்கே இருந்த கேரவேனுக்குள் சென்று உட்கார்ந்து கொண்டோம். ஆனால், நாங்கள் உட்கார்ந்த கொஞ்ச நேரத்திலேயே அமலா பால் தனது மானேஜரை அழைத்துத் எங்களை வெளியேற்றும் படி சொல்லி அனுப்பினார். இவ்வளவு கடுமையான வெயிலில் எங்கு போய் நிற்பது என்று யோசித்தோம். ஆனால் நாங்கள் இறங்கும் வரை அவர் விடவில்லை. அதனால் கேரவனை விட்டு இறங்கினோம்.

அந்த படப்பிடிப்பு முடியும்வரை இதுபோன்ற நிறைய சம்பவம் எனக்கு ஏற்பட்டது. பல முன்னணி நடிகைகளுக்கு நான் மேக்கப் போட்டுள்ளேன் அவர்கள் அனைவருமே கனிவுடன் நடந்து கொள்வார்கள். குறிப்பாக நடிகை தபு எங்களை போன்றவர்களுக்கு அவரே வேன் புக் செய்து நன்றாக பார்த்துக்கொள்வார். ஆனால், அமலா பால் கொஞ்சம் கூட மனிதாபிமே இல்லாமல் எங்களிடம் நடந்துகொண்டார் என்று ஹேமா அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.