பாலியல் வழக்கில் கைதான ஜானி மாஸ்டருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் - Tamil News | Choreographer Jani Master sent to judicial custody for 14 days by the Upparpally court harassment case filed by a dancer | TV9 Tamil

பாலியல் வழக்கில் கைதான ஜானி மாஸ்டருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

Published: 

20 Sep 2024 16:36 PM

சென்னை , மும்பை , ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு படப்பிடிப்பிற்கு சென்றபோது ஜானி மாஸ்டர் தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். 18 வயது நிரம்பாத நிலையில் தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக அந்த பெண் கூறியதை அடுத்து ஜானி மாஸ்டர் மீது, பாலியல் துன்புறுத்தல் மற்றும் போக்சோ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தலைமறைவாக இருந்த ஜானி மாஸ்டரை தெலங்கானா காவல்துறையினர் பெங்களூருவில் வைத்து நேற்று கைது செய்துள்ளனர். 

பாலியல் வழக்கில் கைதான ஜானி மாஸ்டருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

ஜானி

Follow Us On

பாலியல் புகாருக்கு உள்ளான திரைப்பட நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து உப்பரப்பள்ளி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2019ல் இவருடன் பணிப்புரிந்தபோது தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 21 வயது இளம்பெண் போலீஸில் புகார் கொடுத்துள்ளதார். அதன்பேரில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின்பேரில் தெலங்கானா போலீசார் டான்ஸ் மாஸ்டர் ஜானி மீது வழக்கு பதிந்துள்ளனர். ஹைதராபாத் ராய்துர்கம் காவல் நிலையத்தில் இவர் ஜானி மாஸ்டர் மீது புகாரளித்துள்ளார். சென்னை , மும்பை , ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு படப்பிடிப்பிற்கு சென்றபோது ஜானி மாஸ்டர் தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் பேரில் ஜானியை நேற்று போலீஸார் கைது செய்தனர். இந்த நிலையில் இன்று நடந்த விசாரணையில் ஜானிக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

2009-ஆம் ஆண்டு முதல் தெலுங்கு படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றி வருகிறார் ஜானி. இவர் நடிகர் தனுஷ் நடித்த மாரி – 2 படத்தில் வெளியான ரவுடி பேபி பாடல் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதேபோல் விஜயின் ரஞ்சிதமே, தீ தளபதி, ஜாலியோ ஜிம்கானா, ஹல மித்தி ஹபி, தமன்னாவின் காவாலா பாடல்களுக்கும் நடன இயக்குநராக இருந்தவர் ஜானி. திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற ‘மேகம் கருக்காதோ’ பாடலுக்காக தேசிய விருது பெற்றவர் நடன இயக்குநரான ஜானி மாஸ்டர்.

மலையாள சினிமா துறையில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பிறகு பல நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர். இந்த குற்றச்சாட்டுகள் கேரள திரைத்துறையில் புயலைக் கிளப்பியுள்ளது. கேரளா மட்டுமல்லாமல் மற்ற திரையுலகிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக சில நடிகைகள் மட்டும் இன்றி சினிமாவில் மற்ற துறைகளில் பணிபுரியும் பெண்கள் அடுத்தடுத்து புகார்களை முன்வைத்து வருகின்றனர். பல மலையாள சினிமா பிரபலங்கள் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள நிலையில், பிரபல நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் என்று அழைக்கப்படும் ஜானி, பாலியல் துன்புறுத்தல் வழக்கில் சிக்கினார்.

Also read… விஜயின் ‘கோட்’ படம் 15 நாள் வசூல் இவ்வளவா? இணையத்தை கலக்கும் தகவல்

ஜானி மாஸ்டர் மீது 21 வயது இளம் பெண் நடன இயக்குநர் பாலியல் தொல்லை புகார் அளித்துள்ளார். பிரபல நடன இயக்குநர் ஷேக் ஜானி பாஷா (ஜானி மாஸ்டர்) மீது தெலுங்கானா மாநிலம் சைபெராபாத்தில் பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உடன் வேலை செய்த 21 வயது பெண் ராயதுர்கம் காவல் நிலையத்தில் ஜானி மீது பாலியல் வன்கொடுமை புகாரை அளித்தார். 2019ல் இவருடன் பணிப்புரிந்தபோது தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 21 வயது இளம்பெண் போலீஸில் புகார் கொடுத்துள்ளதார். இதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன் பாலியல் புகாருக்கு உள்ளான திரைப்பட நடன இயக்குநர் ஜானி மாஸ்டர், தெலுங்கு படங்களில் பணியாற்ற தற்காலிக தடை விதிக்கப்பட்டது.

சென்னை , மும்பை , ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு படப்பிடிப்பிற்கு சென்றபோது ஜானி மாஸ்டர் தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். 18 வயது நிரம்பாத நிலையில் தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக அந்த பெண் கூறியதை அடுத்து ஜானி மாஸ்டர் மீது, பாலியல் துன்புறுத்தல் மற்றும் போக்சோ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தலைமறைவாக இருந்த ஜானி மாஸ்டரை தெலங்கானா காவல்துறையினர் பெங்களூருவில் வைத்து நேற்று கைது செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்குப் பின் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜானி மாஸ்டரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உப்பரப்பள்ளி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் பாலியல் தொல்லைக்கு ஆளானால் புகாரளித்த பெண் ஏன் அவரிடம் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும் என்று ஜானி மாஸ்டர் மனைவி ஆயிஷா கேள்வி எழுப்பியுள்ளார். பாலியல் புகார் அளித்த பெண் சிறுமியாக இருந்த போது மேடை நிகழ்ச்சிகளில் நடனமாடி வந்தார். அப்போது சினிமா துறையை பார்த்து சொகுசு வாழ்க்கை வாழ ஆசைப்பட்டார். பெண் உதவி நடன இயக்குநர் தான் சிறந்த நடன அமைப்பாளராக ஆக வேண்டும் அல்லது சிறந்த கதாநாயகியாக ஆக வேண்டும் என ஆசைப்பட்டார். இதனால் ஜானி மாஸ்டர் தன்னுடைய படங்களில் நடிக்க வாய்ப்புகளை வழங்கினார்.

ஜானி அந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா? அல்லது ஏன் அப்போதே வெளியில் சொல்லவில்லை. பாலியல் தொல்லைக்கு ஆளானால் ஏன் அவரிடம் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும். பலாத்காரம் செய்ததை நிரூபித்தால் நான் எனது கணவரை விட்டு விலக தயாராக இருக்கிறேன் என்று ஜானியின் மனைவி தெரிவித்துள்ளார்.

டிஆர்பியில் இந்த வாரம் டாப் 10 சீரியல்கள் லிஸ்ட்
இந்த கியூட் பையன் இப்போ பெரிய நடிகர்!
உடலுக்கு அற்புத பலன்களை தரும் வெண்டைக்காய்..!
யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
Exit mobile version