5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Cinema Rewind : நான் சினிமாவில் நுழையக் காரணமே சுந்தர் சி தான்..! ஹிப் ஹாப் ஆதி சொன்ன விஷயம்..

இயக்குநர் சுந்தர் சி திரைப்படங்கள் என்றாலே நம் நினைவுக்கு வருவது நகைச்சுவை திரைப்படங்கள் மற்றும் அந்த திரைப்படத்தின் பாடல்கள் போன்றவை திரைப்படத்திற்கு முக்கிய தூண்களாக இருக்கும். அந்த விதத்தில் நடிகர் ஹிப்ஹாப் ஆதியின் சினிமா நுழைவிற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தவர் இயக்குநர் சுந்தர் சி. இதனை ஹிப்ஹாப் ஆதி ஒரு நேர்காணலில் கூறியிருப்பார். தற்போது வீடியோவானது அந்த இணையத்தில் வைரலாகி வருகிறது.

Cinema Rewind : நான் சினிமாவில் நுழையக் காரணமே சுந்தர் சி தான்..! ஹிப் ஹாப் ஆதி சொன்ன விஷயம்..
நடிகர் ஹிப்ஹாப் ஆதி
barath-murugantv9-com
Barath Murugan | Updated On: 12 Oct 2024 17:20 PM

என்னுடைய சினிமா என்ட்ரிக்கு முதல் காரணமாக இருந்தவர் இயக்குநர் சுந்தர் சி. என்று ஹிப்ஹாப் ஆதி முன்னதாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ்த் திரைப்படங்களில் இயக்குநரும் மற்றும் நடிகராக வளம் வருபவர் சுந்தர் சி. ஆரம்பத்தில் திரைபட இயக்குநரான இவர், 2006ல் இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் வெளியான “தலைநகரம்” என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படங்களில் நடிகராக அறிமுகமானார். இவர் ஆரம்பக்கட்டத்தில் நடிகராக வீராப்பு, சண்டை, ஆயுதம் செய்வோம் மற்றும் பெருமாள் போன்ற திரைப்படங்களில் நடிகராக நடித்து மக்கள் மத்தியில் சிறந்த நடிகராக வளம் வந்தார்.

இதிலும் அந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்காததால் மறுபடியும் திரைப்படங்களை இயக்க ஆரம்பித்தார். பின் அன்பே சிவம், வின்னர், ரெண்டு, கலகலப்பு மற்றும் சின்னா போன்ற வித்தியாசமான கதைக்களத்தில் இயக்கி மாபெரும் வெற்றி திரைப்படங்களைத் தந்தார் சுந்தர் சி. தற்போது ஹிப்ஹாப் ஆதி இவரைப் பற்றிப் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குநர் சுந்தர் சி. ஆரம்பக்கட்ட காலங்களில் திரைப்பட இயக்குநராகவும் எழுத்தாளராகவும் மக்கள் மத்தியில் அறிமுகமாகிப் பல வெற்றி திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் திரைப்பட இயக்குநராக மட்டுமில்லாமல் நடிகராகவும் மற்றும் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். இவரின் இயக்கத்தில் வெளியான பல ஹிட் திரைப்படங்களும் இருக்கிறது மற்றும் ஓடாத திரைப்படங்களும் இருக்கிறது.

அந்த விதத்தில் இவர் முதல் முதலில் இயக்கிய திரைப்படம் “முறை மாமன்” இந்த திரைப்படம் 1995ல் வெளியாகியுள்ளது. திரைப்படம் முழுதும் நகைச்சுவை, காதல் போன்ற கதைக்களத்தில் உருவான இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் ஜெயராம் மற்றும் குஷ்பூ இணைந்து நடித்திருந்தனர். இந்த திரைப்படம் வெளியான நிலையில் மக்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பைப் பெற்று நன்றாக ஓடியது. இதனைத் தொடர்ந்து நகைச்சுவை திரைப்படங்களில் முழுவதுமாக கவனம் செலுத்திய சுந்தர் சி. பல திரைப்படங்களை இயக்க ஆரம்பித்தார். இவர் இயக்கத்தில் தொடர்ந்து நகைச்சுவை, காதல் , ஆக்ஷ்ன் என உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், உன்னைத்தேடி மற்றும் உள்ளம் கொள்ளை போகுதே போன்ற திரைப்படங்களை இயக்கி மிகவும் பிரபலமானார்.

இதையும் படிங்க :Cinema Rewind: என்னுடைய படைப்புகளுக்கு மூல காரணம் இயக்குநர் ராம் தான்… மாரிசெல்வராஜ் சொன்ன விஷயம்

 

பின் இவரின் இயக்கத்தில் 2003ல் நடிகர் கமல்ஹாசன் மற்றும் மாதவன் நடிப்பில் வெளியான “அன்பே சிவம்” என்ற திரைப்படம் பிளாக் பாஸ்டர் ஹிட் திரைப்படமாக அமைந்தது. இப்படத்தில் தொழிலாளர் ஊதிய உயர்வைக் கண்டித்துப் போராடு கருவை மையமாகக் கொண்டு அதை சுற்றிய கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் சர்வதேச அளவில் மிகவும் பிரபலமாகிப் பல திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளது. சுந்தர் சியின் மாறுபட்ட வித்தியாசமான கதைக்களத்தில் அமைந்த பல வெற்றிகளை வாரிக்குவித்த திரைப்படமாக அன்பே சிவம் திரைப்படம் அமைந்தது.

இந்த வெற்றி திரைப்படங்களைத் தொடர்ந்து 2015ல் அவர் இயக்கிய திரைப்படம்தான் “ஆம்பள”. இந்த திரைப்படத்தில் நடிகர் விஷால், பிரபு, ரம்யா கிருஷ்ணன் மற்றும் ஹன்சிகா போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தில்தான் நடிகர் ஹிப்ஹாப் ஆதி முதல் முதலாக சினிமாவில் அறிமுகமானார். இவர் ஹிப்ஹாப் தமிழா என்ற பெயருடன் இந்த திரைப்படத்தில் முழுவதுமாக இசையமைத்திருந்தார். இந்த தகவலை பற்றி நடிகர் ஹிப் ஹாப் ஆதி ஒரு நேர்காணலில் பேசியிருப்பார். இசையமைப்பில் புதிய மாற்றத்தை கொண்டுவந்தவர் ஆதி. தமிழ் மொழியிலும் ராப் பாடல்களைப் பாட முடியும் என்று தமிழ் சினிமாவிற்கு கூறியது இவர்தான்.

ஆரம்பத்தில் ஆல்பம் பாடல்களைப் பாடி இணையத்தில் “ஹிப்ஹாப் தமிழா” என்று அறியப்பட்ட இவர் பல ராப் பாடல்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். பின் திரைப்படங்களில் இசையமைப்பாளராக ஆம்பள, இன்று நேற்று நாளை, தனி ஒருவன் போன்ற திரைப்படங்களில் இசையமைத்துள்ளார். தொடர்ந்து இசையமைப்பில் மும்முரமாக இருந்த இவர் திரைப்படங்களிலும் நடிகராக “மிசைய முறுக்கு” என்ற படத்தில் நடிகராக அறிமுகமாகி பின் பல திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இந்த நிலையில் இயக்குநர் சுந்தர் சியை பற்றி ஹிப்ஹாப் ஆதி பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் ஆதி “திரைத்துறையில் முதலில் எங்களுக்கு யாரையும் தெரியாது, முதல் முதலில் எங்களுக்கு வாய்ப்பு கொடுத்தவர் சுந்தர் சி அண்ணாதான். அவரை பற்றி முழுவதும் தெரியாமல் நான் கவனக்குறைவால் அவரிடம் திமிராக நடந்து கொண்டோம், ஆனாலும் அவர் நாங்கள் வாய்ப்புகள் தேடி அலைந்த பசங்க என்று எங்களுக்கு முதல் முதலாக ஆம்பள திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் செய்தார் சுந்தர் சி.அண்ணன் என்று கூறியிருப்பார். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க :பிக்பாஸ் தொகுப்பாளர்களில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் யார் தெரியுமா? அட இவரா? 

Latest News