5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Cinema Rewind: 4 வயசுல இருந்து பாக்குறேன்…  அந்த நடிகரோட வளர்ச்சி ரொம்ப சந்தோஷமா இருக்கு – நடிகை நதியா

நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்த நதியா 2004 ஆம் ஆண்டு வெளியான எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி என்ற படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடித்தார். படம் வேற லெவல் ஹிட் கொடுத்தது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் அம்மா, அண்ணி, போன்ற குணச்சித்திர வேடத்தில் நடித்து வந்தாலும் தற்போது உள்ள நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் இளைமையாகவே காட்சியளிக்கிறார் நதியா.

Cinema Rewind: 4 வயசுல இருந்து பாக்குறேன்…  அந்த நடிகரோட வளர்ச்சி ரொம்ப சந்தோஷமா இருக்கு – நடிகை நதியா
நடிகை நதியா
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 09 Sep 2024 16:50 PM

தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக இருந்த நடிகை நதியா பிரபல நடிகர் பகத் பாசிலின் சினிமா வளர்ச்சி தனக்கு மிகவும் மகிழ்ச்சி தருவதாக முன்னதாக பேட்டி ஒன்றில் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. 80 மற்றும் 90-களில் தமிழ் சினிமாவை கலக்கிய முக்கிய நடிகைகளில் ஒருவர் நதியா. மலையாள திரையுலகை சேர்ந்த இவர் பின்னர் தமிழ் படங்களில் சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார். நடிகை நதியாவின் உண்மையான பெயர் ஸரீனா மொய்டு. மும்பையில் பிறந்த இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தற்போது நதியாவிற்கு 57 வயது ஆகியிருந்தாலும் தனது ஃபிட்னஸின் காரணமாக 25 வயது பெண் போல காட்சியளிப்பது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பலரும் தங்களது கருத்துகளை அவ்வப்போது சமூக வலைதளத்தில் பதிவிடுவதை காண முடியும்.

1984 ஆம் ஆண்டு மலையாளத்தில் நோக்கதே தூரத்து கண்ணும் நாடு என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். நடித்த முதல் படத்திலேயே தனது அழகாலும், அசத்தலான நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்தார். 1985 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான அந்த படத்தின் தமிழ் ரீமேக் பூவே பூச்சூடவா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் நதியா. முதல் படத்திலேயே தன்னுடைய அழகால் தமிழ் ரசிகர்களை கவர்ந்த நதியா பின்னர் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட துவங்கினார்.

தனது முதல் மலையாள படத்திற்கான சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருதையும் தட்டி சென்றார் நடிகை நதியா, அதன் பின் பட வாய்ப்புகள் நதியாவுக்கு வந்த வண்ணமே இருந்தது.தமிழில் பூவே பூச்சூடவா படத்தை தொடர்ந்து சின்ன தம்பி பெரிய தம்பி, பாடு நிலாவே, அன்புள்ள அப்பா, ராஜாதி ராஜா என பல படங்களில் நாயகியாக நடித்தார். இவர் நடித்த அனைத்து படங்களுமே கோலிவுட்டில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது.

இவரின் நடிப்பு மட்டும் இன்றி இவர் அணியும் டிரஸ், ஹேர் ஸ்டைல், கம்மல், பொட்டு போன்ற ஒவ்வொன்றுமே அப்போதைய இளம் ரசிகைகள் மத்தியில் கவனம் ஈர்த்தது. அந்த காலக்கட்டத்தில் அந்த பொருட்கள் அனைத்திற்குமே நதியா கம்மல், நதிய பொட்டு என்று பெயர் வைத்து கூறுவதுதான் வழக்கமாகவும் இருந்தது. இன்னும் சில இடங்களில் அப்படி அந்த பொருட்களின் பெயரை சொன்னால் தான் தெரியும் என்ற அளவிற்கு நதியா மட்டும் இன்றி நதியா பயண்படுத்திய பொருட்களும் பிரபலாமக இருந்தது.

நதியாவுக்கு தமிழ் ரசிகர்கள் ஏகபோக வரவேற்பை கொடுத்தனர், நதியாவின் அழகு பலரையும் ஈர்த்தது. மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்துவந்த நதியாவுக்கு மார்க்கெட் எகிறியது. இவர் புகழின் உச்சத்தில் இருக்கும்போது சினிமாவை விட்டு விலகினார். மிகுந்த, மிகவும் பிரபலமான நடிகையாக இருந்த நதியா திருமணத்திற்கு பின் நடிப்புக்கு முழுக்கு போட்டது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Also read… Jayam Ravi Divorce: மனைவியை விவாகரத்து செய்யும் ஜெயம் ரவி.. அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட அறிக்கை!

நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்த நதியா 2004 ஆம் ஆண்டு வெளியான எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி என்ற படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடித்தார். படம் வேற லெவல் ஹிட் கொடுத்தது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் அம்மா, அண்ணி, போன்ற குணச்சித்திர வேடத்தில் நடித்து வந்தாலும் தற்போது உள்ள நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் இளைமையாகவே காட்சியளிக்கிறார் நதியா.

இந்த நிலையில் நடிகை நதியா கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக பேசிய பேட்டி ஒன்றில் நடிகர் பகத் பாசில் குறித்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. நடிகை நதியாவை சினிமாவில் அறிமுகம் செய்தது நடிகர் பகத்தின் தந்தை இயக்குநர் பாசில் தான். அவர் இயக்கிய நோக்கதே தூரத்து கண்ணும் நாடு என்ற படத்தில் தான் நதியா நாயகியாக அறிமுகம் ஆனார். இதனால் 4 வயதில் இருந்தே பகத்தை தான் பார்த்து வருவதகவும் சினிமாவில் பகத்தில் வளர்ச்சி மிகவும் சந்தோஷத்தை கொடுப்பதாகவும் நடிகை நதியா பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழில் சூப்பர் டீலக்ஸ், விக்ரம், மாமன்னன் என மாறுப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகராக இருந்துவருகிறார் பகத். கண்களாலேயே ஒட்டுமொத்த உணர்வுகளை வெளிப்படுத்தி ஆச்சரியமளித்துவருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய புஷ்பா படத்தில் வில்லனாக நடித்து இந்திய அளவில் கவனம் பெற்றவர் நடிகர் பகத் பாசில்.வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ், விக்ரம், மாமன்னன் என தமிழில் வெறும் 4 படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் தனது அசாத்தியமான நடிப்பு திறமையால் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்திருக்கிறார் பகத் பாசில். குறிப்பாக எதிர்மறை கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை கையாண்ட விதத்தால் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.

சமீபத்தில் ஜித்து மாதவன் இயக்கத்தில் பகத் பாசில் நடிப்பில் வெளியான மலையாளப் படம் ‘ஆவேஷம்’ . இந்த படத்தில் மன்சூர் அலிகான், ஆசிஸ் வித்யார்தி, சஜின் கோபு,பூஜா மோகன்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்தனர். கடந்த ஏப்ரல் மாதம் 11-ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடதக்கது

Latest News