5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Cinema Rewind: பருத்திவீரன் படத்துல அந்த சீன் இன்னும் மறக்க முடியல – பிரியாமணி சொன்ன விஷயம்

Actress Priyamani: இயக்குநர் அமீர் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நாயகனாக அறிமுகமான "பருத்திவீரன்" என்ற படத்தில் நடித்ததற்காக தேசிய விருது வென்றவர் நடிகை பிரியாமணி. இந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து முன்னதாக அவர் ஒரு பேட்டியில் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. படம் வெளியானபோது பாக்ஸ் ஆபீசில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது பருத்திவீரன் படம். இந்த படத்தில் வரும் பருத்திவீரன் மற்றும் முத்தழகு என இரு கதாபாத்திரங்களில் கார்த்தி மற்றும் பிரியாமணி இருவரும் நடிப்பில் வெளுத்து கட்டியிருப்பார்கள். 

Cinema Rewind: பருத்திவீரன் படத்துல அந்த சீன் இன்னும் மறக்க முடியல – பிரியாமணி சொன்ன விஷயம்
பிரியாமணி
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 18 Sep 2024 15:59 PM

இயக்குநர் அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் படத்தில் அந்த காட்சி நடித்ததை இப்போ நினைத்தாலும் அது மறக்க முடியாத ஒன்று என்று நடிகை பிரியாமணி முன்னதாக பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. கடந்த 2003-ம் ஆண்டு வெளியான ஒரு தெலுங்கு திரைப்படம் மூலமாக தனது திரை உலக பயணத்தை தொடங்கினார் நடிகை பிரியாமணி. கடந்த 2004 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான “கண்களால் கைது செய்” என்கின்ற திரைப்படத்தின் மூலம் இவர் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் அடுத்தடுத்து நடித்து தனக்கென ஒரு நிரந்தர இடத்தை தமிழ் சினிமா மட்டுமில்லாமல் இந்திய சினிமாவிலும் அவர் பெற்றுள்ளார் நடிகை பிரியாமணி.

தமிழுக்கு வருவதற்கு முன்னால் தெலுங்கு, மலையாளம் என தனது அறிமுகத்தை ஏற்கனவே பல மொழிகளில் கொடுத்திருந்தாலும், 2007 ஆம் ஆண்டு தமிழில் பருத்திவீரன் என்ற படத்தில் அவருக்கு கிடைத்த பெயரைப் போன்றது மாதிரி பிறகு வேறு எந்த ஒரு படமும் அவருக்கு கொடுக்கவில்லை. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் அடுத்தடுத்து நடித்து தனக்கென ஒரு நிரந்தர இடத்தை தமிழ் சினிமா மட்டுமில்லாமல் இந்திய சினிமாவிலும் அவர் பெற்றுள்ளார்.

திருமணத்திற்கு பிறகும் தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து வரும் ப்ரியாமணி தற்பொழுது தமிழில் கொட்டேஷன் கேங் என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதேபோல ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னட மொழியிலும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இயக்குநர் அமீர் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நாயகனாக அறிமுகமான “பருத்திவீரன்” என்ற படத்தில் நடித்ததற்காக தேசிய விருது வென்றவர் நடிகை பிரியாமணி. இந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து முன்னதாக அவர் ஒரு பேட்டியில் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. படம் வெளியானபோது பாக்ஸ் ஆபீசில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது பருத்திவீரன் படம். இந்த படத்தில் வரும் பருத்திவீரன் மற்றும் முத்தழகு என இரு கதாபாத்திரங்களில் கார்த்தி மற்றும் பிரியாமணி இருவரும் நடிப்பில் வெளுத்து கட்டியிருப்பார்கள்.

தமிழில் ஒரு வருடத்திற்கு 500-க்கும் மேற்பட்ட படங்கள் வெளியானாலும் , அதில் ஒரு சில படங்கள் மட்டுமே ரசிகர்கள் மனதை கவர்கிறது. அப்படி கவரும் படங்கள் ரசிகர்களால் பல வருடங்கள் கழித்தும் பேசப்படும் படமாக இருந்தால் அது தான் அந்த படத்தின் உண்மையான வெற்றி. அப்படி படம் வெளியாகி 17 ஆண்டுகள் கடந்தும் பருத்திவீரன் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது. அதே போல்  இப்படத்திற்காக யுவன் இசையமைத்த பாடல்கள் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளது.

Also read… டான்ஸ் மாஸ்டர் ஜானி தெலுங்கு படங்களில் பணியாற்ற தற்காலிக தடை

இப்படம் பற்றி ரசிகர்கள் அடிக்கடி பேசி கொண்டிருக்க இன்னொரு காரணம் இப்படத்தை விடாமல் துரத்தும் தயாரிப்பு தரப்பின் பிரச்சனை. இரு தரப்பும் மாறிமாறி அறிக்கை விட்டு, ஒருவரை ஒருவர் குற்றம் கூறிவந்தனர். குறிப்பாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, இயக்குனர் அமீரை திருடன் என விமர்சித்து யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி சர்ச்சையாக வெடித்தது. இந்த பிரச்னையில் நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் என பலர் அமீருக்கு தான் ஆதராவாக நின்றனர். படத்தில் நடித்த கார்த்தி இதுகுறித்து பேசாமல் இருந்தது சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த படம் பல சர்ச்சைகளை சந்தித்தாலும் இன்றும் படத்தின் மீதான ரசிகர்களின் ஈர்ப்பு குறையவில்லை. படத்தில் நடித்த நடிகர்களுக்கும் இந்தப் படம் ஒரு பெரிய வாய்ப்பாக அமைந்தது. இந்தப் படத்தில் கார்த்தி மற்றும் பிரியாமணியுடன் இணைந்து பொன்வண்ணன், சரவணன், கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தை பிடித்தது  ‘பருத்திவீரன்’ திரைப்படம். திரையரங்குகளில் 100 நாட்களுக்கும் மேல் ஓடி மாபெரும் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் படத்தில் நடித்தது குறித்து நடிகை பிரியாமணி முன்னதாக பேட்டி ஒன்றில் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் படத்தில் ஒரு காட்சியில் கார்த்தி பிரியாமணியை அடிக்க வேண்டும். அப்போது பிரியாமணி அருகில் இருந்த சேற்றில் விழுவார். இந்த காட்சிக்காக அமீர் அந்த இடத்தில் ஒரு பல்லத்தை தோண்டி தண்ணீர் நிரப்பி ஒரு வாரமாக அது சேறு போல மாறி குப்பை எல்லாம் சேர்ந்து நிஜமாகவே ஒரு சேர் இருந்தால் எப்படி இருக்குமோ அதை மாற்றினார். அந்த காட்சியில் நடித்ததை இப்போது நினைத்தாலும் அது இப்போ நடந்தது மாதிரி இருக்கு என்று நடிகை பிரியாமணி அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Latest News