5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Cinema Rewind: ‘பிரச்சனையைக் கண்டால் ஒதுங்கிடுவாங்க’ – நயன்தாரா குறித்து ஆச்சரியப்பட்ட நடிகை சரண்யா

தமிழ் சினிமாவில் நடிகையாகப் பிரபலமானதை விட நடிகர் மற்றும் நடிகைகளுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்துப் பிரபலமானவர் நடிகை சரண்யா பொன்வண்ணம். தமிழ் சினிமாவில் நாயகன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர் தற்போது பேஷன் டிசைனிங் துறையில் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் முன்னதாக நடிகை நயன்தாராவைப் பற்றிக் கூறிய தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

Cinema Rewind: ‘பிரச்சனையைக் கண்டால் ஒதுங்கிடுவாங்க’ – நயன்தாரா குறித்து ஆச்சரியப்பட்ட நடிகை சரண்யா
நடிகை சரண்யா பொன்வண்ணன்
barath-murugantv9-com
Barath Murugan | Published: 25 Oct 2024 17:09 PM

தமிழ் நடிகைகளில் நயன்தாரா ரொம்ப பரிதாபப்பட்டு நடிகை என்றும் அவருக்கு ஒருவர் பிடிக்கவில்லை என்றால் அவர் நிற்கும் இடத்தை கூட பார்க்கமாட்டார் என சரண்யா பொன்வண்ணம் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை சரண்யா பொன்வண்ணம் திரைப்படங்களில் நடிகையாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானதை விட நடிகர்களுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமானார். திரைப்படங்களில் அம்மா கதாபாத்திரம் என்றாலே நம் நினைவிற்கு வருபவர் நடிகை சரண்யா.

அந்த அளவிற்கு அம்மா கதாபாத்திரத்தில் தத்ரூபமாக நடிப்பார். இவர் தமிழ் சினிமாவில் என்ன அளவிற்குப் பிரபலமானவரோ அந்த அளவிற்கு மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவருக்கு வலம்வந்தார். தற்போது இவர் பிரபல ஆடை வடிவமைப்பாளராக இருந்து வருகிறார்.

நயன்தாரா குறித்து பேசிய நடிகை சரண்யா

நடிகை சரண்யா பொன்வண்ணம் நயன்தாராவைப் பற்றிக் கூறியுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் “நடிகை நயன்தாரா யாரிடமாவது பேசாமல் இருந்தால் அவர் மிகவும் மோசமான நபராகத்தான் இருக்க வேண்டும். ஏனென்றால் நயன்தாரா மிகவும் சாதுவானவர் மற்றும் உண்மையான நபர். அவருக்கு அந்த எதிராளியைச் சமாளிக்கக் கூடத் தெரியாது. அந்த அளவிற்குப் பிரச்சனையைக் கண்டால் பத்தடி தள்ளி போயிருவாங்க. இது எனக்கு ரொம்ப ஆச்சரியம். தமிழ் சினிமாவில் இந்த அளவிற்கு இருக்கும் நடிகை  அதிகாரத்துடன் இருக்கவேண்டும் ஆனால் அவங்க அப்படி கிடையாது மிகவும் சாதுவான நடிகை’’ என்று தெரிவித்துள்ளார்

சரண்யாவின்  சினிமா அறிமுகம்

சரண்யா  1987ல் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘நாயகன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசனிற்கு ஜோடியாக நடித்து அசத்தியிருப்பார். மனசுக்குள் மத்தாப்பு , என் ஜீவன் பாடுது, மேளம் கொட்டு டாலி கட்டு மற்றும் சிகப்பு தாலி போன்ற திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார்.

இதனைத் தொடர்ந்து பல தமிழ் மலையாளம் மற்றும் தெலுங்கு என பலதிரைப்படங்களில் நடித்த இவர் 1995ல் பிரபல நடிகரான பொன்வண்ணன் என்பவரைக் காதல் திருமணம் செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டு முழுவதுமாக குடும்ப வாழ்க்கையில் இணைந்தார் இவர்.

இதையும் படிங்க :Cinema Rewind: “மார்வெல்ஸ் படம் போலதான் பிளான்” இயக்குநர் ஷங்கர் சொன்ன விஷயம்

ரீ எண்ட்ரி

திரைப்படங்களுக்கு சுமார் 8 ஆண்டுகளுக்கும் மேலாக இடைவேளை விட்ட இவர் பின் இயக்குநர் அமீர் இயக்கத்தில் வெளியான ராம் என்ற திரைப்படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீஎன்ட்ரி கொடுத்தார் இவர். இந்த திரைப்படத்தில் நடிகர் ஜீவாவிரற்கு அம்மாவாக நடித்துப் பிரபலமான இவருக்குத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது.

இந்த திரைப்படங்களைத் தொடர்ந்து தவமாய் தவமிருந்து, எம்டன் மகன் மற்றும் களவாணி போன்ற திரைப்படங்களில் வித்தியாசமாக நடித்து தமிழ்த் திரைப்படங்களில் எல்லா நடிகர்களுக்கும் இனி இவர்கள் தான் அம்மா என்ற விதத்தில் மிகவும் பிரபலமானார். தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்தார்.

இதையும் படிங்க :Cinema Rewind: ஃபஹத் ஃபாசில் வரட்டும்.. ஒரு மாதமாக காத்திருந்த ரஜினி!

இதனைத் தொடர்ந்து 2014ல் இயக்குநர் வேல்ராஜ் இயக்கத்தில் வெளியான வேலையில்லா பட்டதாரி என்ற திரைப்படத்தில் நடிகர் தனுஷிற்கு அம்மாவாக நடித்து தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இந்த திரைப்படத்தில் தனுஷின் அம்மாவாக நடித்து ரசிகர்களிடையே தனக்கும் இப்படிப் பட்ட அம்மா வேண்டும் என்று நினைக்கும் வகையில் நடித்து அசத்தியிருப்பார்.

இந்த திரைப்படத்தில் நடித்தற்காகப் பல முன்னணி விருதுகளையும் பெற்றுள்ளார். திரைப்படங்களை அடுத்து சிறுவயதிலிருந்து அவரின் ஆர்வம் நிறைந்த துறையான ஆடை வடிவமைப்பில் தற்போது ஆர்வம் காட்டி வருகிறார். திரைப்படங்கள் ஒருபுறம் இருந்தாலும் இவருக்கு முழு நேர ஆசையான தொழிலாக இருப்பது பேஷன் டிசைனிங் தான் எனப் பல இடங்களில் தெரிவித்திருப்பார்.

இதையும் படிங்க :Cinema Rewind : நான் சினிமாவில் நுழையக் காரணமே சுந்தர் சி தான்..! ஹிப் ஹாப் ஆதி சொன்ன விஷயம்..

Latest News