5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Bigg Boss Tamil Season 8: பிக்பாஸ் வீட்டிலிருந்து இன்று வெளியேறப்போவது இவரா? இணையத்தில் கசிந்த தகவல்

நேற்று நிகழ்ச்சியின் முடிவில், பார்வையாளர்களிடம் உரையாடிய விஜய் சேதுபதி, “இந்த முறை ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு” எனும் பிக்பாஸ் தீமுக்கு ஏற்றவாறு, பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக, பங்கேற்பாளர்களிலிருந்து ஒருவர், 24 மணி நேரத்தில் வெளியேற்றப்படவுள்ளார் என அறிவித்தார். இந்த அறிவிப்பு போட்டியாளர்கள் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

Bigg Boss Tamil Season 8: பிக்பாஸ் வீட்டிலிருந்து இன்று வெளியேறப்போவது இவரா? இணையத்தில் கசிந்த தகவல்
சாச்சனா
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 07 Oct 2024 12:33 PM

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியிலிருந்து இன்று மகாராஜா படத்தில் நடித்து புகழ் பெற்ற சாச்சனா வெளியேறப்போவதாக இணையத்தில் தகவல்கள் கசிந்துள்ளது. விஜய் டிவியின் பிக்பாஸ்  நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் பல முன்னணி நட்சத்திரங்கள் இதுவரை தொகுத்து வழங்கி வந்துள்ளனர். தமிழில் 7 சீசன்கள் முடிவடைந்த நிலையில் அடுத்ததாக 8-வது சீசன் இன்று முதல் ஒளிபரப்பாக உள்ளது. முன்னதாக 7 சீசனை உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார். அவர் நிகழ்ச்சியை விட்டு விலகிய நிலையில் தற்போது இந்த 8-வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்களின் பார்வை மொத்தமும் நிகழ்ச்சி போட்டியாளர்களின் தேர்வு பட்டியலின் பக்கம் சென்றது. முதல் சீசனில் ஆரவ் கோப்பையை வென்றார், அதே சமயம் ரித்விகா இரண்டாவது சீசனில் பாடகர் மற்றும் நடிகர் முகேன் ராவ் மூன்றாவது சீசனையும், நடிகர்கள் ஆரி அர்ஜுனா மற்றும் ராஜு ஜெயமோகன் நான்காவது மற்றும் ஐந்தாவது சீசனில் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். ஆறாவது மற்றும் ஏழாவது சீசனில் அசீம் மற்றும் அர்ச்சனா வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி நேற்று அக்டோபர் 6-ம் தேதி தொடங்கி வைத்து பேசிய நடிகர் விஜய் சேதுபதி, இந்த பிக்பாஸ் சீசன் 8 பொறத்த வரைக்கும் நான் இந்த ஷோவ எப்படி பன்னப்போறேன்? என்ன பன்னப்போறேன் அப்படினு நிறைய யோசிச்சு பாத்தோம், ரூம்லாம் போட்டு ப்ளான் பன்னி பாத்தோம் எதும் ஒர்க்கவுட் ஆகல. ஏன்னா சில விஷயங்கள பன்னும் போது இந்த உலகத்துல எது நம்ம கண்ட்ரோல்ல இல்லையோ அத நாம கண்ட்ரோல்ல எடுக்க ட்ரை பன்னக் கூடாதுங்குறது நான் பல முறை கத்துக்கிட்டேன் இருக்கேன். இந்த முறையும் கத்துக்கிட்ட முக்கியமான பாடம் இது. ஏன்னா இது ஆடப்போறது நான் இல்ல அவங்கதான். நான் வேடிக்கை தான் பாக்கப்போறேன். இந்த வீடு ரொம்ப அழகா இருக்கு. இந்த வீட்ல தாராலமா 100 நாட்கள் வாழலாம். ஆனா உங்க கூட வாழ்றவங்களோட புரிதல் பொருத்து இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் வீட்டை திறந்து உள்ளே சென்ற விஜய் சேதுபதி வீட்டிற்கு நடுவே போடப்பட்டுள்ள பெரிய கோட்டைப் பார்த்து உரைந்து நின்றார். என்ன வீட்டுக்கு நடுவுள இவ்வளவு பெரிய கோடு. டிசைனுக்கு போட்ட மாதிரியே தெரியலையே என்று பேசிய அவர், இதுல ஏதோ சூழ்ச்சி இருக்குனு நினைக்கிறேன். இது வீட்டுக்குள்ள கேமா இல்ல வீட்டை வச்சு கேமா தெரியல என்று கூறினார். வீட்டின் நிறம் மற்றும் வீட்டுகு நடுவே கோடு இரண்டு வண்ணங்களாக வீடு பிரிந்து இருப்பது மேலும் சுவாரஸ்யத்தை கூட்டுகிறது.

இந்த முறை வீடு, களம், போட்டியாளர்கள், விதிகள் என எல்லாமே புதியதாக அமைக்கப்பட்டுள்ளது. ஆரம்ப எபிஸோடே ஆண்களா ? பெண்களா? எனும் விவாதத்துடன் களை கட்ட ஆரம்பித்துள்ளது. கடந்த 7 வருடங்களாக, ஒவ்வொரு சீசனிலும், பல புதுமைகளோடு, மக்களிடம் வரவேற்பைப் பெற்ற, பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய 8வது சீசன், இன்று கோலாகலமாக ஆரம்பமானது. இந்த முறை, நடிகர் விஜய் சேதுபதி ஹோஸ்டாக களமிறங்கி, புதிய போட்டியாளர்களை தன் பாணியில் அறிமுகப்படுத்தி, நிகழ்ச்சியைத் துவக்கினார்.

Also read… சூப்பர் ஹிட் அடித்த மகாராஜா படம்… இயக்குநருக்கு கார் பரிசளித்த படக்குழு

பிக்பாஸ் விளையாட்டை ஆரம்பித்த விஜய் சேதுபதி இந்தமுறை உலகத்தில், நாட்டில், வீட்டில் என சமூகத்தில் முக்கிய பிரச்சனையாக இருக்கும் ஆண்களா? பெண்களா? எனும் தீம் நம் பிக்பாஸில் அறிமுகமாகிறது என ஆச்சரியப்படுத்தினார். இந்த முறை பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட வீட்டில், வீட்டின் நடுவே ஒரு பெரிய கோடு கிழிக்கப்பட்டு, ஒரு பக்கம் கிச்சனுடன் பெட்ரூம் வரிசையும், இன்னொரு புறம் டாய்லெட்டுடன் பெட்ரூம் வரிசையும் என, இரண்டு பெட்ரூம்கள் வரிசைகளாக பிரிக்கப்பட்டிருந்தது. முதல் ஆறு போட்டியாளர்கள் நுழைந்ததும், ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக அவர்களுக்கு பெட்ரூம்களை தேர்ந்தெடுக்கச் சொல்லப்பட்டது. ஆரம்ப எபிஸோடிலேயே ஆண்களா? பெண்களா? என விளையாட்டு களை கட்டியது.

நேற்று நிகழ்ச்சியின் முடிவில், பார்வையாளர்களிடம் உரையாடிய விஜய் சேதுபதி, “இந்த முறை ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு” எனும் பிக்பாஸ் தீமுக்கு ஏற்றவாறு, பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக, பங்கேற்பாளர்களிலிருந்து ஒருவர், 24 மணி நேரத்தில் வெளியேற்றப்படவுள்ளார் என அறிவித்தார். இந்த அறிவிப்பு போட்டியாளர்கள் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் இருந்து இன்று மகாராஜா படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்த சாச்சனா வெளியேற உள்ளதாக இணையத்தில் தகவல்கள் கசிந்துள்ளது.

Latest News