Kanguva Movie : ‘திராணி, தைரியம் இல்லனா ஏன் படம் எடுக்குறீங்க.?’ சூர்யா ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் - Tamil News | dindigul suriya fans condemn to producer gnanavel raja | TV9 Tamil

Kanguva Movie : ‘திராணி, தைரியம் இல்லனா ஏன் படம் எடுக்குறீங்க.?’ சூர்யா ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்

Updated On: 

24 Jun 2024 17:36 PM

Suriya Fans Poster: இப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், கோவை சரளா, யோகிபாபு, ரெட்டின் கிங்ஸ்லி, நடராஜன் சுப்பிரமணியன், ஜெகபதி பாபு, கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்து வருகின்றனர்.  தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். 10க்கும் மேற்பட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் படம் எடுக்கப்பட்டு வருகிறது.  13 விதமான தோற்றங்களில் சூர்யா நடிப்பதாக தெரிவிக்கப்பட்டிருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Kanguva Movie : திராணி, தைரியம் இல்லனா ஏன் படம் எடுக்குறீங்க.? சூர்யா ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்

சூர்யா ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்

Follow Us On

கங்குவா திரைப்படம் : திராணி, தைரியம் இல்லனா ஏன் படம் எடுக்குறீங்க என்று சூர்யா ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகின்றது. சூர்யாவின் நடிப்பில் தற்போது உருவாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் கங்குவா. இந்த படத்தினை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்குகின்றார். மன்னர் காலக் கதையைக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்த படம்தான் சூர்யாவின் நடிப்பில் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டு வரும் படம். கிட்டதட்ட 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனமும், யுவி கிரியேஷன்ஸ் நிறுவனமும் இணைந்து பெரும் பொருட்செலவில் கங்குவா படத்தை தயாரிக்கிறது. கங்குவா படத்தை சொன்ன தேதியில் ரிலீஸ் செய்யவில்லை என கூறி சூர்யா ரசிகர்கள் கண்டன போஸ்டர்கள் ஒட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

இப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், கோவை சரளா, யோகிபாபு, ரெட்டின் கிங்ஸ்லி, நடராஜன் சுப்பிரமணியன், ஜெகபதி பாபு, கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்து வருகின்றனர்.  தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். 10க்கும் மேற்பட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் படம் எடுக்கப்பட்டு வருகிறது.  13 விதமான தோற்றங்களில் சூர்யா நடிப்பதாக தெரிவிக்கப்பட்டிருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Also read… 18 வயதிலேயே அந்தக் கொடுமை… இஷா கோபிகர் வேதனை

இந்த படம் கடந்த பொங்கலுக்கே ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்புத் தளத்தில் சூர்யாவுக்கு லேசான காயம் ஏற்பட்டதால், படப்பிடிப்பை திட்டமிட்டபடி முடிக்க முடியாமல் போனது. இதனால் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்தது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்துவிட்டது எனவும் தற்போது கம்யூட்டர் க்ராஃபிக்ஸ் வேலைகள்தான் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஏற்கனவே பொங்கல் ரிலீஸில் அஜித் மற்றும் விஜயுடன் மோத நினைத்த சூர்யா இப்போது அஜித்தின் விடாமுயற்சியுடன் மோதவுள்ளார் எனவும் பேச்சுகள் எழுகின்றது.

சூர்யா ஹீரோவாக நடித்த படம் வெளியாகி 2 ஆண்டுகள் கடந்து விட்டதால் சூர்யா ரசிகர்கள் அதிருப்திக்கு மத்தியில் காத்திருக்கின்றனர். இந்நிலையில் படம் வெளியாகாத கோபத்தில் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த சூர்யா ரசிகர்கள் போஸ்டர் மூலம் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர். கோபத்தில் உள்ள ரசிகர்கள், தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிராக ஒட்டியுள்ள போஸ்டர் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

பல் வலியிலிருந்து நிவாரணம் பெற என்ன செய்யலாம்..?
உடலுக்கு பல நன்மைகளை தரும் கருப்பு மிளகு..!
டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
Exit mobile version