உங்களுக்கு நான் என்றைக்கும் நன்றியுள்ளவன் சார்… அஜித் குறித்து மனம் திறந்த ஆதிக் ரவிச்சந்திரன்
குட் பேட் அக்லி படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் நடிகர் அஜித் குறித்து சமூக வலைதளத்தில் போட்ட பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கும் அஜித்தின் 63-வது படமாக குட் பேட் அக்லி உருவாகிறது. இப்படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியானது. இதனை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், தேவி ஸ்ரீ பிரசாத் படத்துக்கு இசையமைக்கிறார். இப்படம் 2025 பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் அஜித்குமார் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்த வருகிறார். இதற்கான படப்பிடிப்பு கடந்த மாதம் பத்தாம் தேதி ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் படபிடிப்பு தளத்தில் தொடங்கியது.
தொடர்ச்சியாக குட் பேட் அக்லி படப்பிடிப்பை நடத்தி வந்தனர். இந்நிலையில், திட்டமிட்டபடி முதற்கட்ட படப்பிடிப்பை பட குழுவினர் முடித்துள்ளனர். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ‘பிரேமலு’ படத்தில் ஹீரோவாக நடித்த நஸ்லென் கஃபூர் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகிள்ளது.
Also read… களைகட்டப்போகும் தீபாவளி… கோலிவுட்டில் வரிசைக்கட்டும் முன்னணி நடிகர்களின் படங்கள்!
#GoodBadUgly Amazed by your dedication & involvement ❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 always grateful sir ❤️🙏🏻🙏🏻🙏🏻 Love you my sir❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 pic.twitter.com/0VolG2rVPS
— Adhik Ravichandran (@Adhikravi) June 8, 2024
இந்நிலையில் குட் பேட் அக்லி படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது சமூக வலைதளப்பக்கத்தில், முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த பின்னர் அஜித்குமாருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து, அதில், ” குட் பேட் அக்லி படத்திற்காக உங்களது அற்பணிப்பும் ஈடுபாடும் எங்களை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது சார். உங்களுக்கு நான் என்றைக்கும் நன்றியுள்ளவன் சார். உங்களுக்கு எனது அன்புகள் சார்” எனக் குறிப்பிட்டுள்ளார். ஆதிக் ரவிச்சந்திரனின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.