5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Sivakarthikeyan: “டாப் ஹீரோவில் ஒருத்தர்” – சிவகார்த்திகேயனை புகழ்ந்த இயக்குநர் மணிரத்னம்!

Director Manirathnam : இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் நடிகர் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் திரைப்படம் அமரன். தமிழ் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி முன்னணி கதாபாத்திரமாக இத்திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். அமரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்த நிலையில் நேற்று இந்த திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெற்றுள்ளது அதில் பல திரை பிரபலங்கள் மற்றும் இயக்குநர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Sivakarthikeyan: “டாப் ஹீரோவில் ஒருத்தர்” – சிவகார்த்திகேயனை புகழ்ந்த இயக்குநர் மணிரத்னம்!
கோப்பு புகைப்படம்
barath-murugantv9-com
Barath Murugan | Updated On: 21 Oct 2024 15:05 PM

தமிழ் திரைப்பட  இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் நடிகர் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் திரைப்படம் அமரன். தமிழ் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி முன்னணி கதாபாத்திரமாக இத்திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். அமரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்த நிலையில் நேற்று இந்த திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெற்றது. அதில் பல திரை பிரபலங்கள் மற்றும் கலந்து கொண்டனர். அமரன் படத்துக்கு பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இவரின் இசையில் இப்படத்திலிருந்து ஏற்கனவே இரு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இதனிடையே நேற்று இத்திரைப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா நடைபெற்றது. ஜி.வியின் இசையில் நடிகை சாய்பல்லவியின் அறிமுகம், மின்னலே, வெண்ணிலவு சாரல் என இந்த மூன்று இசைகளுக்கும் மக்கள் மத்தியிலும், இணையதளத்திலும் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது. நேற்று நடந்த இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குநர் மணிரத்னம் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி பற்றியும் கூறிய செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமரன் திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழாவிற்கு முன்னதாக திரைப்படத்தை அறிமுகம் செய்யும் விதமாக இப்படக்குழு வீடியோக்களை வெளியிட்டு வந்தது. இதில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, நடிகர் கமல் . சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் இந்து ரெபேக்கா வர்கீஸ் என இந்த திரைப்படத்திற்குத் தொடர்புடைய அனைவரும் கலந்து கொண்டனர். இந்த திரைப்பட அறிமுக வீடியோவில் கலந்து கொண்ட அனைவரும் அமரன் திரைப்படத்தின் அனுபவங்களையும், திரைப்பட கதைகளைப் பற்றியும் தனது நோக்கங்களைத் தெரிவித்து வந்தனர்.

இதில் தொகுப்பாளர் சிவகார்த்திகேயனிடம் துப்பாக்கியின் கணம் எப்படி இருக்கிறது என்ற கேள்வியைக் கேட்டிருப்பார். அதற்கு சிவகார்த்திகேயன் தனது அசாத்தியமான பதிலைக் கூறியிருப்பார். அதில் “துப்பாக்கியின் கணம் அப்படியேதான் இருக்கிறது அதை நம்ம எப்படிக் கையாளுகிறோம் என்பதைப் பொறுத்தே மற்றவை எல்லாம் இருக்கும்” என கூலாக பதில் கூறியிருப்பார். இதனைத் தொடர்ந்து நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடை பெற்ற இந்த விழாவில் பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் மணிரத்னம் கூறிய தகவல்கள் இணையத்தில் பலராலும் பேசப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பேசிய மணிரத்னம் இந்த திரைப்படத்தைப் புகழ்ந்து ‘அமரன் திரைப்படம் ஒரு உண்மையான சம்பவத்தை வைத்து ஒரு அருமையாக எடுக்கப்பட்ட திரைப்படம் என்றும் ஒரு ‘ரியல் லைப்’ கதைக்களம் என்றாலே மக்கள் மற்றும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஒரு பிரம்மாண்ட வரவேற்பை பெறும் எனவும் கூறினார்.   இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை மிகவும் அழகாக எடுத்திருக்கிறார்’ என்றும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க :இந்த குழந்தை இப்போது டாப் ஹீரோயின்.. யாருனு கண்டுபிடிக்க முடியுமா?

இதைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனைப் பற்றிக் கூறிய மணிரத்னம் “எந்த ஒரு நடிகரும் தான் நடித்த முதல் திரைப்படங்களை அடுத்துத் தொடர் திரைப்படங்களில் நடித்து ஹிட்டாகி விடுவார்கள். அந்தவகையில் சிவகார்த்திகேயன் அடிமட்டத்திலிருந்து ஒவ்வொரு திரைப்படங்களைத் தனது விடா முயற்சியால் நடித்து தற்போது ‘டாப் ஹீரோவில்’ ஒருவராக இருக்கிறார். இவருக்குக் குழந்தைகள் முதல் குடும்ப ரசிகர்கள் என அனைத்து தளங்களிலும் தனது ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்” என்றும்,  இந்த திரைப்படத்தில் இதுவரை நடிக்காத ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்’ என்றும் புகழ்ந்தார்.

இதையும் படிங்க :திக்.. திக்.. திகில்! ஓடிடியில் பார்க்க வேண்டிய 5 க்ரைம் த்ரில்லர் மூவிஸ்..!

இதனைத் தொடர்ந்து நடிகை சாய் பல்லவியிடம் வந்த இயக்குநர் மணிரத்னம் சாய் பல்லவியைப் பார்த்து “நான் உங்களுடைய மிகப்பெரிய ரசிகன் என்றும் கூடிய சீக்கிரம் ஒரு திரைப்படத்தில் சந்திக்கலாம்” என்றும் கூறினார். இதற்கு மேடை கீழே அமர்ந்திருந்த நடிகை சாய் பல்லவி மகிழ்ச்சியுடன் சிரித்தபடி பதிலளித்தார். சாய் பல்லவியின் பெயரைச் சொல்லியது பின்னாடி அமர்த்திருக்கும் ரசிகர்கள் அனைவரும் தங்களின் மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் வகையில் கைதட்டல்கள் கொடுத்தனர். இந்த நிகழ்வை அடுத்து மேடை ஏறிய நடிகை சாய் பல்லவி “நான் முதலில் தொலைக்காட்சியில் பணிபுரியும் போது கேட்ட இந்த சத்தம் எல்லாம் சும்மா பின்னாடி போடப்படும் சத்தம் என்று நினைத்தேன். ஆனால் அது உண்மை என்று இங்கு வந்துதான் புரிந்து கொண்டேன்” என்று கூறியுள்ளார்.

 

Latest News