‘என் உச்சபட்ச கண்ணீரும், கதறலும் தான் வாழை’ – மாரி செல்வராஜின் உணர்வுபூர்வ பதிவு - Tamil News | Director Mari Selvarajs emotional post about his vaazhai movie on X viral | TV9 Tamil

‘என் உச்சபட்ச கண்ணீரும், கதறலும் தான் வாழை’ – மாரி செல்வராஜின் உணர்வுபூர்வ பதிவு

Updated On: 

23 Aug 2024 11:42 AM

Director Mari Selvaraj: கிராமத்து கதையம்சத்துடன் கூடிய கதையோடு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில், கலையரசன் கதாநாயகனாக நடிக்க, நிகிலா விமல் கதாநாயகியாக நடித்துள்ளார். மற்றொரு நாயகியாக திவ்யா துரைசாமி நடித்துள்ளார். இந்தப் படத்தைப் பார்த்த சினிமா பிரபலங்களும், பொது மக்களும் மாரி செல்வராஜிற்கு வாழ்த்துகளையும், முத்தங்களையும் மாலையாக அணிவித்து வருகின்றனர்.

என் உச்சபட்ச கண்ணீரும், கதறலும் தான் வாழை’ - மாரி செல்வராஜின் உணர்வுபூர்வ பதிவு

மாரி செல்வராஜ்

Follow Us On

இன்று இயக்குநர் மாரி செல்வராஜின் நான்காவது படமான ‘வாழை’ திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் அவரது எக்ஸ் தள பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது. பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இந்தப் படத்தின் மூலம் நீங்காத இடத்தை பிடித்தார் மாரி. இதனை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் கர்ணன் என்ற படத்தை இயக்கி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தார் மாரி. மூன்றாவதாக உதயநிதி – வடிவேலு நடிப்பில் மாமன்னன் என்ற படத்தை இயக்கினார் மாரி செல்வராஜ். இந்த படம் வடிவேலுவிற்கு கம்பேக் என்று கூட சொல்லலாம், காமெடியனாக மட்டுமே தொடர்ந்து வடிவேலுவை பார்த்து வந்த தமிழ் சினிமா அவரின் மாறுபட்ட நடிப்பை இந்த மாமன்னன் படத்தில் பார்த்தது. இந்தப் படத்தில் வில்லனாக நடித்த ஃபகத் பாசிலின் நடிப்பும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து 3 வெற்றி படங்களை அளித்த மாரி செல்வராஜ் 4-வதாக வாழை என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

சமூகம் சார்ந்த பிரச்னைகளின் தீர்வு கண்ணோட்டத்தை தனது படங்களின் வாயிலாக வைக்கும் மாரி செல்வராஜிற்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய படங்கள் மூலம் கோலிவுட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தி, ஏராளமான ரசிகர்களை கவர்ந்து முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மாரி செல்வராஜ். அடுத்ததாக வாழை படத்தை இயக்கி முடித்துள்ளார். உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்த படம் உருவாகியுள்ள நிலையில் படத்தை தன்னுடைய நவ்வி ஸ்டுடியோ சார்பில் மாரி செல்வராஜ் தயாரித்துள்ளார். மேலும் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரும் இணைந்து தயாரித்துள்ள வாழை படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Also read… ராயன் பட ஹிட்… தனுஷிற்கு டபுள் சர்ப்ரைஸ் கொடுத்த கலாநிதி மாறன்

கிராமத்து கதையம்சத்துடன் கூடிய கதையோடு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில், கலையரசன் கதாநாயகனாக நடிக்க, நிகிலா விமல் கதாநாயகியாக நடித்துள்ளார். மற்றொரு நாயகியாக திவ்யா துரைசாமி நடித்துள்ளார். இந்தப் படத்தைப் பார்த்த சினிமா பிரபலங்களும், பொது மக்களும் மாரி செல்வராஜிற்கு வாழ்த்துகளையும், முத்தங்களையும் மாலையாக அணிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது மாரி செல்வராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் போட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் அவர் கூறியதாவது, ”அனைவருக்கும் அன்பின் வணக்கம், இன்று என் நான்காவது திரைப்படமான ‘வாழை’ வெளியாகிறது. வாழையில், என் வாழ்வின் உச்சபட்ச கண்ணீரையும், கதறலையும் ஒரு திரைக்கதையாக்கி அதை எளிய சினிமாவாக்கி உங்கள் முன் வைக்கிறேன். இனி உங்கள் முத்தத்தாலும், அரவணைப்பிலும் கொஞ்சம் இளைப்பாறுவேன் என்று நம்புகிறேன்” என்று அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.

 

சியா விதையில் இவ்வளவு ஆபத்துகள் உள்ளதா?
மாதுளை பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
உடலுக்கு நீர்ச்சத்துடன் நார்ச்சத்தை வழங்கும் முள்ளங்கி.. பலன்கள் ஏராளம்..!
சர்வதேச கிரிக்கெட்டில் ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை எப்படி..?
Exit mobile version