நிறுத்தப்பட்டதா விஜயின் ‘கோட்’ படம்… வைரலாகும் வெங்கட் பிரபுவின் போஸ்ட்! - Tamil News | director Venkat Prabhus post going viral on the internet | TV9 Tamil

நிறுத்தப்பட்டதா விஜயின் ‘கோட்’ படம்… வைரலாகும் வெங்கட் பிரபுவின் போஸ்ட்!

Published: 

16 Jun 2024 13:56 PM

The Greatest of All Time: இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘விசில் போடு’ கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியானது. இதையடுத்து இயக்குனர் வெங்கட் பிரபு சினிமாவில் 17 ஆண்டுகள் நிறைவு கொண்டாட்ட நிகழ்ச்சியில் 2 -வது சிங்கிள் விஜயின் பிறந்த நாளான ஜூன் 22- ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. மேலும், செபடம்பர் 5-ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது. மேலும் மலேசியாவில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுத்தப்பட்டதா விஜயின் ‘கோட்’ படம்... வைரலாகும் வெங்கட் பிரபுவின் போஸ்ட்!

‘கோட்’ படம்

Follow Us On

விஜய் நடிப்பில் உருவாகிவரும் ’தி கோட்’ படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் வெங்கட் பிரபுவின் போஸ்ட் தற்போது வைரலாகி வருகின்றது. லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் தற்போது கூட்டணி அமைத்தார். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் தி கோட். இந்தப் படத்தில் விஜயுடன் பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, மீனாக்‌ஷி செளதரி, லைலா, வைபவ் , பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். எ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பாக அர்ச்சனா கல்பாத்தி இப்படத்தைத் தயாரித்து வருகிறார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இரண்டு வேடங்களில் விஜய் நடிப்பதாக கூறப்பட்டாலும், கோட் படத்தின் ஒன்லைன் ஸ்டோரி பற்றிய அப்டேட் இதுவரை வெளியாகவில்லை. சென்னை, ரஷ்யா, திருவனந்தபுரம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘விசில் போடு’ கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியானது. இதையடுத்து இயக்குனர் வெங்கட் பிரபு சினிமாவில் 17 ஆண்டுகள் நிறைவு கொண்டாட்ட நிகழ்ச்சியில் 2 -வது சிங்கிள் விஜயின் பிறந்த நாளான ஜூன் 22- ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. மேலும், செபடம்பர் 5-ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது. மேலும் மலேசியாவில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also read… “உங்களின் மோசமான கருத்துக்கள், புண்படுத்தும் வார்த்தைகளுக்கு நன்றி” – நடிகர் தர்ஷனின் மகன்!

சமீபத்தில் தான் இப்படத்திற்கான டீ ஏஜிங் வேலைக்காகவிஜய், வெங்கட் பிரபு லாஸ் ஏஞ்சலஸ் சென்று இருந்தனர். அங்கு விஜய்யை வைத்து சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இதனை முடித்துவிட்டு விஜய் சென்னை திரும்பினார். சென்னையில் இன்னும் சில நாட்கள் மட்டுமே விஜய்யின் காட்சிகள் படமாக்கப்படும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் தீயாய் பரவின. இதனைப் பார்த்த விஜயின் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கும் நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அதில், ‘உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்’ என்று தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் என்னவாக இருக்கும்? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version