5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

பண மோசடி வழக்கில் ’மஞ்சும்மல் பாய்ஸ்’ பட நடிகரிடம் விசாரணை!

Manjummel Boys Movie case: இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் லாபத்தில் பங்கு தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாக சிராஜ் என்பவர் எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், மஞ்சுமல் பாய்ஸ் படத்திற்காக தான் 7 கோடியை முதலீடு செய்திருந்ததாகவும், ஷான் ஆண்டனி லாபத்தில் 40 சதவீதம் பங்கு தருவதாக கூறியிருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், தற்போது வரை தனக்கு லாபத்தில் ஒரு ரூபாய் கூட பணம் அளிக்கவில்லை எனவும், முதலீடு செய்த பணத்தை கூட திருப்பி தரவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.

பண மோசடி வழக்கில்  ’மஞ்சும்மல் பாய்ஸ்’ பட நடிகரிடம் விசாரணை!
சௌபின்
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 16 Jun 2024 10:22 AM

’மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தின் நடிகரும் தயாரிப்பாளருமான சௌபின் சாகிரிடம் பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ளது.  கேரளாவின் மஞ்சும்மல் பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த நிலையில், அவர்களில் ஒருவன், டெவில்ஸ் கிச்சன் என்கிற 900 அடிகள் கொண்டதாகக் கருதப்படும் மலைக்குகைக்குள் விழுந்துவிட, உடன் வந்த நண்பர்கள் போராடி அவனை மீட்ட உண்மைக் கதையைத் தழுவி மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் எடுக்கப்பட்டது. இயக்குநர் சிதம்பரம் படத்தை இயக்க, சௌபின் ஷகிர், ஸ்ரீநாத் பாசி உள்பட பலர் நடித்திருந்தனர். சௌபின் ஷகிர் தனது பறவா தயாரிப்பு நிறுவனம் சார்பில் தனது நண்பர்களுடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்திருந்தார். அபாயகரமான டெவில்ஸ் கிச்சன் குகை பகுதியில் கமல் தனது குணா படத்தை எடுத்த பிறகே அந்தக் குகை குறித்து வெளியுலகுக்கு தெரிய வந்தது. அன்று முதல் அக்குகை, குணா குகை என்று அழைக்கப்படுகிறது. குணாவில் இடம்பெறும், கண்மணி அன்போட… பாடல் காட்சி அங்கு வைத்துதான் எடுக்கப்பட்டது.

இந்தப் படத்தைப் பார்த்து குணா குகைக்கு சென்றவர்கள்தான் மஞ்சும்மல் பாய்ஸ். இந்த நிலையில் மஞ்சும்மல் பாய்ஸ். மலையாளத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான படம் மஞ்சும்மல் பாய்ஸ். தமிழ், தெலுங்கு , மலையாளம் என எல்லா மொழிகளிலும் சக்கை போடு போட்ட இப்படம் 200 கோடிக்கும் மேலாக வசூல் செய்தது. குணா படத்தின் கண்மணி அன்போடு… பாடலோடுதான் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் டைட்டில் தொடங்கும். குழிக்குள் விழுந்த நண்பனை மேலே மீட்டு வருகையில், மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல என்ற கமலின் குரல் ஒலிக்கும். குழிக்குள் விழுந்தவன் பிழைப்பானா, அவனை காப்பாற்ற முடியுமா என்று சீட்டின் நுனியில் அமர்ந்திருந்த ரசிகர்களுக்கு, குழிக்குள் விழுந்தவனை நண்பர்கள் மீட்கும் தருணம் உணர்ச்சிகரமானது. அந்த நேரத்தில் மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல என்ற பாடல்வரி ஒலித்து திரையரங்கிள் உள்ள ரசிகர்களின் உணர்ச்சியை உச்சத்திற்குக் கொண்டு சென்றது.

அந்த படத்திற்கு பிறகு சமூக வலைதளத்தில் அந்த பாடல் நண்பர்களுக்கான ஆந்தமாக மாறியது. அனைவரும் தங்களது நணபர்களுக்கு அந்த பாடலை டெடிகேட் செய்வது, ரீல்ஸ் போடுவது என சமூக வலைதளத்தின் உச்சத்திற்கு அந்த பாடல் சென்றது. இந்நிலையில் தற்போது மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் தான் இசையமைத்த பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக சமீபத்தில் படத்தின் தயாரிப்பாளருக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பினார்.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் லாபத்தில் பங்கு தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாக சிராஜ் என்பவர் எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், மஞ்சுமல் பாய்ஸ் படத்திற்காக தான் 7 கோடியை முதலீடு செய்திருந்ததாகவும், ஷான் ஆண்டனி லாபத்தில் 40 சதவீதம் பங்கு தருவதாக கூறியிருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், தற்போது வரை தனக்கு லாபத்தில் ஒரு ரூபாய் கூட பணம் அளிக்கவில்லை எனவும், முதலீடு செய்த பணத்தை கூட திருப்பி தரவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.

Also read… கல்கி 2898 AD ட்ரெய்லர் காப்பியா? ஆதாரத்துடன் புகார் கூறிய நபர் – ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்

அதனடிப்படையில் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் தற்போது அமலாக்கத்துறை ஈடுபட்டுள்ளது. ஏராளமான பணம் தயாரிப்பாளர்களிடம் வந்த நிலையில் கருப்பு பணமாக மாற்றி மறைத்து வைத்துள்ளனரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் – நடிகர் சௌபின் சாகிரிடம் நேற்று அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை நடந்துள்ளது. அடுத்தகட்ட விசாரணைக்கு அழைக்கும்போது ஆஜராக வேண்டும் என அதிகாரிகள் சௌபின் இடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest News