Actor Bala: சொன்னபடி 3வது கல்யாணம் செய்த நடிகர் பாலா.. பொண்ணு யாரு தெரியுமா?
அம்ருதாவை பிரிந்த பாலா சில வருடங்களாக மற்றொரு திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் வாழ்ந்து வந்தார். இதனைத்தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த டாக்டர் எலிசபெத் என்பவரை இரண்டாவதாக ரகசிய திருமணம் செய்து கொண்ட பாலாவுக்கு உடல் நலத்தில் பிரச்சனை ஏற்பட்டது. கல்லீரல் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்த அவரை உடனிருந்து எலிசபெத் தான் கவனித்துக் கொண்டார்.
நடிகர் பாலா திருமணம்: இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பியான நடிகர் பாலா 3வது திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சிறுத்தை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சிவா. இவர் வீரம்,வேதாளம், விவேகம், விஸ்வாசம், அண்ணாத்த என பல வெற்றிப் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் சிறந்த கமர்சியல் இயக்குநர்கள் வரிசையில் இடம் பிடித்துள்ளார். அடுத்ததாக நடிகர் சூர்யாவை வைத்து பிரம்மாண்டமான பொருட்செலவில் இயக்கியுள்ள கங்குவா படம் நவம்பர் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்துக்கான பிரமோஷன் பணிகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, மறுப்பக்கம் சிவாவின் வீட்டில் தம்பி வடிவத்தில் பிரச்னை கிளம்பியுள்ளது.
நடிகர் பாலாவின் வாழ்க்கை
சிவாவின் தம்பி வேறு யாரும் அல்ல. வீரம் படத்தில் நடிகர் அஜித்தின் தம்பிகளில் ஒருவராக நடித்த பாலா தான். தமிழில் அன்பு, அம்மா அப்பா செல்லம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் ஏகப்பட்ட படங்களில் பல்வேறு கேரக்டர்களின் நடித்து பிரபலமானவர். சொல்லப்போனால் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் பாடலான தவமின்றி கிடைத்த வரமே பாடலில் வருவாரே அவர்தான் பாலா.
இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு பாடகி அம்ருதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு அவந்திகா என்ற மகள் இருந்த நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். பாடகி அம்ருதா இசையமைப்பாளர் பாடலாசிரியர் என பன்முகத் திறமை கொண்டவராக இருந்தார். அதுவே அவர்களுக்குள் பிரச்சனை வெடிக்க காரணமாக அமைந்தது என சொல்லப்படுகிறது.
இதனிடையே அம்ருதாவை பிரிந்த பாலா சில வருடங்களாக மற்றொரு திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் வாழ்ந்து வந்தார். இதனைத்தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த டாக்டர் எலிசபெத் என்பவரை இரண்டாவதாக ரகசிய திருமணம் செய்து கொண்ட பாலாவுக்கு உடல் நலத்தில் பிரச்சனை ஏற்பட்டது. கல்லீரல் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்த அவரை உடனிருந்து எலிசபெத் தான் கவனித்துக் கொண்டார்.
மகள் பரபரப்பு குற்றச்சாட்டு
ஆனால் அவர்களுக்குள் என்ன பிரச்சனை ஏற்பட்டது என தெரியவில்லை. இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாக சொல்லப்பட்ட நிலையில் சமீபத்தில் போலீசாரால் பாலா கைது செய்யப்பட்டார். முன்னதாக பாலாவின் மகள் அவந்திகா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தன்னுடைய தந்தை மிகவும் தன்னை நேசிப்பதாகவும், அதிகமாக பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுத்ததாகவும் கூறி வருகிறார். ஆனால் இதில் உண்மை இல்லை. எனது தந்தையை நேசிக்க எனக்கு சின்ன காரணம் கூட கிடையாது. அவர் என்னையும், அம்மாவையும் குடித்து விட்டு டார்ச்சர் செய்தது மட்டும் தான் கண்முன் வந்து செல்கிறது.அந்த நேரத்தில் குழந்தை என்பதால் அம்மாவுக்கு என்னால் உதவ முடியவில்லை. என் மீது உண்மையிலேயே பாசம் வைத்திருந்தால் என் வாழ்க்கையில் குறிப்பிடாதீர்கள்” என தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்து பாலா வெளியிட்ட வீடியோவில், “என்னை அப்பா என அழைத்ததற்கு நன்றியை தெரிவிக்கிறேன். நான் உன்னிடம் வாக்குவாதம் செய்ய விரும்பவில்லை. ஒருவன் மகளுடன் வாக்குவாதம் இருந்தால் அவன் மனிதனே கிடையாது. நான் உனக்கு மூன்று வயதாக இருக்கும்போது பாட்டிலை வீசுயதாகவும், 5 நாட்கள் பட்டினி போட்டதாகவும் கூறினாய். உன்னுடன் வாக்குவாதம் செய்வதை விட்டுவிட்டு நீ வெற்றி பெற வேண்டும் என்பதற்காக உன்னிடம் சரணடைகிறேன்” என தெரிவித்தார்.
Also Read: Wayanad Constituency: வயநாடு மக்களே என் தங்கச்சியை பாத்துக்கோங்க.. ராகுல்காந்தி நெகிழ்ச்சி!
இந்நிலையில் பாலாவின் முன்னாள் மனைவியான அம்ருதா போலீசில் புகாரளித்தார். அதில் விவாகரத்து நடைமுறைகளை எல்லாம் மீறி எங்களைத் தொடர்ந்து பாலா துன்புறுத்தி வருகிறார். என்னையும் என் மகளையும் பணம் செலுத்தி எடுக்கப்படும் நேர்காணல்கள் மூலம் தொந்தரவு செய்து வருகிறார்” எனவும் குறிப்பிட்டுள்ளார். இதனடிப்படையில் கொச்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்த பாலாவை கடவந்தரா காவல்துறையினர் கடந்த வாரம் கைது செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கூறி கேரள உயர்நீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனிடையே ஜாமீனில் வெளியே வந்த பாலா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தன்னிடம் ரூ.250 கோடி சொத்து இருக்கிறது. என்னுடைய குடும்ப சொத்தில் பங்காக வந்த இந்த ரூ.250 கோடி குறித்த அறிவிப்பு வெளியானதும், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்து வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் கேரளாவை விட்டு வேறு எங்காவது சென்று விடலாம் என முடிவுக்கு வந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். விரைவில் மூன்றாவது முறையாக சட்ட ரீதியாக திருமணம் செய்து குடும்பத்துடன் வாழ விரும்புகிறேன் என பாலா தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இன்று திடீரென 3வது திருமணம் செய்து கொண்ட போட்டோவை பகிர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். எர்ணாகுளம் கலூரில் உள்ள பாவைகுளம் கோயிலில் இன்று திருமணம் நடந்துள்ளது. இதில் பாலாவின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். மணப்பெண் தமிழகத்தைச் சேர்ந்தவர் எனவும், அது பாலாவின் உறவுக்கார பெண் கோகிலா எனவும் தெரிய வந்துள்ளது.