5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

மனிதர்கள் எப்போது பலமானவர்களாக மாறுகிறார்கள் தெரியுமா? – சமந்தா சொன்ன விஷயம்

சமந்தா இப்போது தன்னுடைய முடிவிலிருந்து வெளியே வந்து மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதன்படி ராஜ் & டிகே இயக்கும் சிட்டாடல் வெப் சீரிஸில் நடித்திருக்கும் அவர் அடுத்ததாக தமிழில் சில படங்களிலும் நடிப்பதற்கு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து படங்களில் கமிட்டாகியிருக்கும் அவர் மும்முரமாக ஷூட்டிங்கிலும் கலந்துகொண்டிருக்கிறார்.

மனிதர்கள் எப்போது பலமானவர்களாக மாறுகிறார்கள் தெரியுமா? – சமந்தா சொன்ன விஷயம்
சமந்தா
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 22 Oct 2024 13:24 PM

மனிதர்கள் எப்போது பலமானவர்களாக மாறுகிறார்கள் என்பது குறித்து நடிகை சமந்தா பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. நடிகர் அதர்வா நடிப்பில் வெளியான பானா காத்தாடி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகினரின் கவனத்தைப் பெற்றவர் நடிகை சமந்தா.  இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் நானியுடன் ‘நான் ஈ’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் கியூட் நாயகியாக வலம் வரத் தொடங்கினார். பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா என அவர்களுக்கு நாயகியாக நடிக்கத் தொடங்கினார் சமந்தா. இவரது நடிப்பில் தமிழில் வெளியான் கத்தி, நீதானே என் பொன் வசந்தம், அஞ்சான், தெறி உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு தமிழ், தெலுங்கு என பான் இந்திய மொழி திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார் சமந்தா.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தபோது அதில் ஹீரோவாக நடித்த நாக சைதன்யாவை காதலித்தார். கடந்த 2017-ஆம் ஆண்டு பிரம்மாணடமாக திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணமும் 4 ஆண்டுகளில் தோல்வியில் முடிந்தது. 2021-ம் ஆண்டு சமந்தா – நாக சைதன்யா இருவரும் தங்கள் பிரிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

Also read… ஓடிடி ரிலீஸ் தேதியை லாக் செய்தது ‘லப்பர் பந்து’ படக்குழு… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

திருமணத்திற்கு பிறகும் அதிக கிளாமரான காட்சிகளில் சமந்தா நடிக்க நாக சைதன்யா விரும்பாததால் இருவரும் பிரிந்ததாக தகவல்கள் வெளியாகின. தாயாக வேண்டாம் என்று சமந்த இந்த முடிவை எடுத்ததாகவும் பல விமர்சனங்களை சினிமா வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் எதிர்கொண்டார் சமந்தா. எனினும் சர்ச்சைகளையும் வதந்திகளையும் பொருட்படுத்தாமல் வெப் சீரிஸ், படங்கள் என படு பிசியாக வலம் வந்தார் சமந்தா. கடந்த 2022 ஆம் ஆண்டு சமந்தா அறிவித்தார். அது அவரது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. இதற்கிடையே திரைப்படங்களில் நடித்துக்கொண்டே சிகிச்சை பெற்று வந்தார் சமந்தா. ஆனால் ஒரு கட்டத்தில் திரைப்படங்களில் இருந்து விலகி சிகிச்சையில் கவனம் செலுத்த தொடங்கினார்.

Also read… துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ பட ட்ரெய்லர் இதோ!

சமந்தா இப்போது தன்னுடைய முடிவிலிருந்து வெளியே வந்து மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதன்படி ராஜ் & டிகே இயக்கும் சிட்டாடல் வெப் சீரிஸில் நடித்திருக்கும் அவர் அடுத்ததாக தமிழில் சில படங்களிலும் நடிப்பதற்கு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து படங்களில் கமிட்டாகியிருக்கும் அவர் மும்முரமாக ஷூட்டிங்கிலும் கலந்துகொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சமந்தா பேசியதாவது, நான் இன்று பலமாக இருக்கிறேன் என்றால் அதற்கு நான் எதிர்கொண்ட கடுமையான நிலைமைகள் தான். காரணம். யாராவது கஷ்டப்படுகிறார்கள் என்று சொன்னால் அது அவர்களின் நல்லதுக்குதான் என்று நான் அடிக்கடி சொல்வேன். கஷ்டங்களை எதிர்கொள்ளும்போதுதான் மனிதர்கள் பலமானவர்களாக மாறுகிறார்கள். அடிமட்டத்திற்கு சென்றுவிட்ட பிறகுதான் நமது பலம் என்ன என்பது நமக்குத் தெரியும். அடிமட்ட நிலைக்கு விழுந்துவிட்ட பிறகு எந்த பெரிய பிரச்சினை வந்தாலும் அது ஒரு பிரச்சினையாகவே தெரியாது. அப்படி அடிமட்டத்திற்கு சென்று கஷ்டப்படுபவர்கள் எல்லோரும் அதிர்ஷ்டசாலிகள் என்று தெரிவித்துள்ளார்.

Latest News