5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

சூர்யா 45 படத்தில் நாயகியாகும் ஜி.வி.பிரகாஷ் பட நடிகை!

சூர்யாவின் 45-வது படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்கவுள்ளதாகவும் ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கவுள்ளதாகவும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தினை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் அறிவிப்பு போஸ்டரை பார்க்கும்போது இந்த படம் கிராமத்துக் கதைக்களத்தில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யா 45 படத்தில் நாயகியாகும் ஜி.வி.பிரகாஷ் பட நடிகை!
சூர்யா 45
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 17 Oct 2024 18:29 PM

நடிகர் சூர்யாவின் 45-வது படத்தில் ஜி.வி.பிரகாஷ் படத்தின் நடிகை நாயகியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யாவின் உண்மையான பெயர் சரவணன் சிவக்குமார். இதுதான் அவரது பெற்றோர்கள் அவருக்கு வைத்த பெயர். சரவணனின் பெயரை சூர்யா என்று மாற்றியது இயக்குநர் மணிரத்னம். சரவணன் என்று ஒரு நடிகர் திரைத்துறையில் இருப்பதால் குழப்பம் ஏற்படாமல் இருக்கு இந்த பெயரை அவர் வைத்துள்ளார். சூர்யாவுக்கு ஆரம்பத்தில் நடிப்பில் ஆர்வம் இல்லை, சிறுவயதில் இருந்தே இயக்குனராக வேண்டும் என்றே விரும்பினார். படிப்பை முடித்துவிட்டு நடிக்கத் தொடங்குவதற்கு முன் கார்மென்ஸ் தொழிற்சாலை ஒன்றில் மேனேஜராக பணிபுரிந்துள்ளார். 1997-ம் ஆண்டு இயக்குநர் வசந்த் இயக்கத்தில் மணிரத்னம் தயாரிப்பில் உருவான ’நேருக்கு நேர்’ என்ற படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார் சூர்யா.

முதல் 4 வருடங்களுக்கு பெரிய ஹிட் கொடுக்க முடியாத சூர்யாவின் திரை வாழ்வில் திருப்பு முனையாக அமைந்தது 2001-ம் ஆண்டு வெளியான ‘நந்தா’ படம்.2003-ம் ஆண்டு காவல் துறை அதிகாரியாக காக்க காக்க படத்தில் கலக்கியிருப்பார். இது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. கஜினி மற்றும் சிங்கம் போன்ற அவரது பல படங்கள் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டன. சமீபத்தில் சூரரைப் போற்று படமும் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது குறிப்பிடதக்கது. ராம் கோபால் வர்மாவின் கேங்ஸ்டர் படமான ரக்த சரித்ரா 2 மூலம் சூர்யா ஹிந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் அறிமுகமானார்.

Also read… Today’s Cinema News: சார் படத்தின் ட்ரெய்லர் முதல் கவினின் ‘பிளடி பெக்கர் ட்ரெய்லர் வரை… டாப் சினிமா செய்திகள்!

கங்குவா, சூர்யா 44 என வரிசையாக படங்களில் நடித்து வரும் சூர்யா அடுத்ததாக ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்னர் மக்கள் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்தவர் ஆர்.ஜே. பாலாஜி. தனது வானொலி நிகழ்ச்சிகள் மூலம் நல்ல வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்ற வரவேற்பின் முலம் தமிழ் சினிமாவிற்குள் நடிகராக காலடி எடுத்து வைத்து, தான் நடித்த படங்களில் கவனம் ஈர்த்தார். நடிப்பது மட்டும் இல்லாமல், எல்.கே.ஜி., மூக்குத்தி அம்மன் போன்ற படங்களை இயக்கவும் செய்தார்.

Also read… இயக்குநராக மாறும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா!

அடுத்து ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தை இயக்குவார் என கூறப்பட்ட நிலையில், அந்தப் படத்தை சுந்தர்.சி இயக்குகிறார். தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தகவல். அதன்படி, சூர்யாவின் 45-வது படத்தை நடிகர் ஆர். ஜே. பாலாஜி இயக்கவுள்ளார். படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் கங்குவா வெளியீட்டிற்குப் பின் துவங்கலாம் எனத் தெரிகிறது.

சூர்யாவின் 45-வது படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்கவுள்ளதாகவும் ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கவுள்ளதாகவும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தினை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் அறிவிப்பு போஸ்டரை பார்க்கும்போது இந்த படம் கிராமத்துக் கதைக்களத்தில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்காலிகமாக இப்படத்திற்கு ‘சூர்யா 45’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதத்தில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தில் காஷ்மிரா பர்தேசி கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்று கூறப்படுகிறது. இவர் ‘சிவப்பு மஞ்சள் பச்சை, பிடி சார் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News