5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

நிறைவடைந்தது சூர்யா 44 படப்பிடிப்பு… நெகிழ்ச்சி பதிவிட்ட சூர்யா!

சூர்யா தனது 44-வது படத்திற்காக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் உடன் கூட்டணி சேர்ந்துள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 44 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தினை சூர்யாவும், கார்த்திக் சுப்புராஜும் இணைந்து தயாரிக்கின்றனர்.

நிறைவடைந்தது சூர்யா 44 படப்பிடிப்பு… நெகிழ்ச்சி பதிவிட்ட சூர்யா!
சூர்யா 44
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 07 Oct 2024 16:30 PM

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள நெகிழ்ச்சியான பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடிக் கட்டிப் பறப்பவர் நடிகர் சூர்யா. தமிழில் மட்டும் கவனம் செலுத்தி வந்த சூர்யா தற்போது ஹிந்தி சினிமா பக்கமும் கவனத்தை திருப்பியிருக்கிறார். விரைவில் அவர் ஒரு ஹிந்தி படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் தோல்வியையே சந்தித்தது. அதனையடுத்து வணங்கான், கங்குவா, வாடிவாசல், புறநானூறு ஆகிய படங்களில் கமிட்டானார். இவற்றில் வணங்கானிலிருந்து வெளியேறிய அவர் வாடிவாசலில் நடிக்கிறாரா இல்லையா என்பது குறித்து இன்னும் தெரியவில்லை.

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார். இதில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.3டியில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதில் இரண்டு கதாபாத்திரங்களில் சூர்யா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம், இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. சூர்யாவின் சினிமா கரியரிலேயே கங்குவா படத்துக்கான பட்ஜெட் அதிகம் என்பதால் இந்த படத்தின் மேல் பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து சூர்யா தனது 44-வது படத்திற்காக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் உடன் கூட்டணி சேர்ந்துள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 44 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தினை சூர்யாவும், கார்த்திக் சுப்புராஜும் இணைந்து தயாரிக்கின்றனர்.

Also read… ‘மெய்யழகன்’ படத்தில் நடிக்க இதுதான் காரணம் – நடிகர் கார்த்தி விளக்கம்

இந்த நிலையில் சூர்யா மற்றும் கார்த்திக் சுப்பராஜின் படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகிக் கொண்டே இருக்கின்றது. முன்னதாக படத்தில் நடிப்பவர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. அதன்படி சூர்யாவின் 44-வது படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாக அவரது பிறந்த நாள் அன்று அறிவிப்பு வெளியானது. மேலும் இதுவரை சந்தோஷ் நாராயணன், சூர்யா படத்திற்கு இசையமைத்தது கிடையாது என்பதும் இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடதக்கது.

Also read… குட் பேட் அக்லி படத்தின் புது லுக்கில் அஜித் – வைரலாகும் போட்டோ

நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் கடந்த ஜூன் மாதம் துவங்கியது. இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தற்போது ஊட்டியில் நடைபெற்று வந்தது.

சூர்யா அவரது 44 – வது படத்தில் நடித்து கொண்டிருந்த நிலையில், அந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து விட்டதாக கூறி படப்பிடிப்பு தளத்தில் நடந்தவற்றை குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தோடு வெளியிட்டுள்ளார். அதில், “அற்புதமான திறமையான படக்குழுவினருடன் ஏராளமான நினைவுகள் எனக்கு கிடைத்திருக்கின்றன. அதுமட்டுமில்லாமல், இந்த படம் மூலம் வாழ்நாள் முழுவதும் கார்த்திக் சுப்புராஜ் எனது சகோதரனாக உருவாகியுள்ளார். இதுபோன்ற மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்ததற்கு படக்குழு மற்றும் இயக்குனருக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.

Latest News