Keerthy Suresh: விஜய்யை விடாமல் ஃபாலோ பண்ணும் கீர்த்தி சுரேஷ்.. இதுதான் விஷயமா?
Tamil Cinema: கீர்த்தியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அடிக்கடி ஏதாவது ஒரு தகவல் வதந்தியாக பரவும். சமீபத்தில் கூட முன்னணி நடிகர் ஒருவருடன் அவரை இணைத்து பேசியது மிகப்பெரிய பிரச்னையாக எழுந்தது. இதற்கு கீர்த்தி ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் கீர்த்தி சுரேஷ் தரப்பில் இருந்து எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை
கீர்த்தி சுரேஷ்: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உள்ளவர் கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் அவர் அடுத்ததாக ரகு தாத்தா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுமன்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் முன்னணி கேரக்டரில் நடிக்க, எம்.எஸ். பாஸ்கர் ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி ஆகியோர் முக்கிய கேரக்டரில் இடம் பெற்றுள்ளனர். கேஜிஎஃப், காந்தாரா, சலார் படங்களை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் டீசர், ட்ரெய்லர், பாடல்கள் ரசிகர்களிடம் அதிகம் கவனம் பெற்றுள்ளது. இந்த நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் சில நேர்காணல்களில் நடிகை கீர்த்தி சுரேஷூம் பங்கேற்று வருகிறார்.
Also Read: Yuvraj Singh: கோரிக்கை வைத்த கில்.. குஜராத் அணியின் பயிற்சியாளராக களமிறங்கும் யுவராஜ் சிங்..?
விஜய்யை ஃபாலோ பண்ணும் கீர்த்தி சுரேஷ்
அந்த வகையில் நேர்காணல் ஒன்றில் ரசிகர்களுடன் கீர்த்தி சுரேஷ் உரையாடினார். அதில் ஒருவர், “நீங்கள் எப்படி உங்களை பற்றிய எதிர்மறையான செய்தி, வதந்தி, மீம்ஸ் போன்ற விஷயங்களை எப்படி பார்க்கிறீர்கள்?, எப்படி கையாள்கிறீர்கள்?” என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கீர்த்தி சுரேஷ் சற்றும் யோசிக்காமல், ”விஜய் சார் கூட ஒரு விஷயம் சொல்லியிருப்பார். அதாவது உண்மைக்கு விளக்கம் கொடுத்தா அது தெளிவாகும். அதே வதந்திக்கு விளக்கம் கொடுத்தா அது உண்மையாகி விடும். அவர் சொன்னது முழுக்க உண்மை. நாம் தேவையில்லாத விஷயத்துக்கு நமது ஆற்றலை வீணாக்கவோ, விளக்கம் கொடுக்கவோ விரும்பவில்லை என்றால் நான் செய்ய மாட்டேன்” என பதிலளித்துள்ளார். இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
Also Read: Vijay: விஜய் இலவச வீடு.. செய்தியாளர்களிடம் எகிறிய புஸ்ஸி ஆனந்த் – நடந்தது என்ன?
கீர்த்தியின் திரைப்பயணம்
பிரபல நடிகை மேனகாவின் 2வது மகளான கீர்த்தி சுரேஷ், இது என்ன மாயம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமனார். அவருக்கு சிவகார்த்தியேனுடன் நடித்த ரஜினி முருகன் படம் திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து சர்கார், பைரவா, சாமி 2, தொடரி, தானா சேர்ந்த கூட்டம், அண்ணாத்த என ஏகப்பட்ட படங்களில் நடித்தார். அதுமட்டுமல்லாமல் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையிலும் அவர் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். கீர்த்தியின் பென்குயின், குட் லக் சகி வரிசையில் அடுத்ததாக ரகு தாத்தா படமும் வெளியாகியுள்ளது.
அதேசமயம் கீர்த்தியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அடிக்கடி ஏதாவது ஒரு தகவல் வதந்தியாக பரவும். சமீபத்தில் கூட முன்னணி நடிகர் ஒருவருடன் அவரை இணைத்து பேசியது மிகப்பெரிய பிரச்னையாக எழுந்தது. இதற்கு கீர்த்தி ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் கீர்த்தி சுரேஷ் தரப்பில் இருந்து எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.