Actress Oviya : புகார் கொடுத்த நடிகை ஓவியா.. சர்ச்சை வீடியோவை நீக்கிய கேரளா போலீஸ்!
தன்னை குறிப்பிட்டு பரவும் ஆபாச வீடியோவை நீக்கக் கோரி திருச்சூர் போலீஸ் கமிஷனர் இளங்கோவுக்கு நடிகை ஓவியா இமெயில் மூலம் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் எக்ஸ் மற்றும் சில ஆபாச இணையதளங்களில் தனது பெயரில் பரப்பப்பட்டு வரும் வீடியோக்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்
நடிகை ஓவியா புகார் அளித்த பிறகு சர்ச்சைக்குரிய வீடியோவை கேரள போலீஸ் நீக்கியுள்ளது. கடந்த ஒரு வாரமாக இணையதளம் முழுவதும் நடிகை ஓவியா குறித்த பதிவுகள் அதிகம் காணப்படுகின்றன. பெண் ஒருவரின் தனிப்பட்ட வீடியோ இணையத்தில் லீக்கானது. அந்த வீடியோவை பலரும் நடிகை ஓவியாவுடன் ஒப்பிட்டு இணையத்தில் பரப்பினர். சிலர், ஓவியாவின் சமூக வலைதள போட்டோக்களில் “வீடியோ இன்னும் கொஞ்சம் நீளமாக இருந்திருக்கலாம்” என்று கூற, அதற்கு அவரும் “அடுத்த முறை செய்து விடலாம்” என்பது போல கூலாக பதிலளித்தார்.
நடிகை ஓவியாவை குறிப்பிட்டு பரவும் அந்த அந்தரங்க வீடியோ குறித்து ஓவியா தரப்பு எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. மாறாக ஓவியா போட்ட பதிலைப்பார்த்தவர்கள் பிரமிப்படைந்தனர். அந்த வீடியோவில் இருப்பது ஓவியாவா இல்லை, ஏஐ அல்லது டீப் பேக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வீடியோவா என பல்வேறு கேள்விகளும் இணையத்தில் எழுந்தது.
இதற்கிடையே, இணையத்தில் வெளியாகி உள்ள அந்த வீடியோ குறித்து நடிகை ஓவியா சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். இந்த வீடியோ மார்பிங் செய்யப்பட்டதாகவும், ஓவியாவின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் யாரோ ஒருவரால் உருவாக்கப்பட்டு இணையத்தில் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக நடிகை ஓவியாவின் மேலாளர் தெரிவித்துள்ளார். தவறான வீடியோவை பரப்பியவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
Also read… Tamannah Bhatia: ஃபேர்பிளே விவகாரம்.. விசாரணை வளையத்தில் நடிகை தமன்னா..
இந்தநிலையில் தன்னை குறிப்பிட்டு பரவும் ஆபாச வீடியோவை நீக்கக் கோரி திருச்சூர் போலீஸ் கமிஷனர் இளங்கோவுக்கு நடிகை ஓவியா இமெயில் மூலம் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் எக்ஸ் மற்றும் சில ஆபாச இணையதளங்களில் தனது பெயரில் பரப்பப்பட்டு வரும் வீடியோக்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அதைத்தொடர்ந்து இந்த வீடியோக்களை நீக்க வேண்டும் என்று கூறி எக்ஸ் இணையதளத்திற்கு திருச்சூர் கமிஷனர் இளங்கோ கடிதம் அனுப்பினார். அதன்படி தற்போது 3 ஆபாச வீடியோக்கள் எக்ஸ் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
சினிமா பாதை
கடந்த 2010-ம் ஆண்டு களவாணி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் நடிகை ஓவியா. இதையடுத்து மதயானை கூட்டம், கலகலப்பு, மெரினா, மூடர் கூடம், யாமிருக்க பயமேம், 90 ml உள்ளிட்ட திரைப்படங்களில் நாயகியாக நடித்துள்ளார். நடிகை ஓவியா பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தார். பிக்பாஸ் முதல் சீசனின் நடிகை ஓவியாவிற்கு ரசிகர்கள் ஓவியா ஆர்மியை உருவாக்கினர். இது அப்போது இணையத்தில் படு வைரலானது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தமிழில் முன்னணி ஹீரோயினாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஆனால் தமிழ் திரையுலகில் நடிகை ஓவியாவுக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
களவாணி, கலகலப்பு, மெரினா, மூடர்கூடம், மத யானைக்கூட்டம் போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஓவியா. விஜய் தொலைக்காட்சி முதன் முதலில் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக ஓவியா களம் இறங்கினார். யாரைப் பற்றியும் கவலைப்படாத குணமும், மார்னிங் டான்ஸும் ஓவியாவிற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளத்தையே ஆரம்பித்துக் கொடுத்தது. பிக்பாஸ் பிரபலங்களுக்கு ரசிகர்கள் ஆர்மி அமைக்கும் முறைக்கு முதலில் சொந்தக்காரியானவர் ஓவியா தான். கேரளத்து பைங்கிளியாக இருந்தாலும் தமிழில் ஓவியாவிற்கு தமிழ் ரசிகர்கள் அதிகம்.
தென்னிந்திய சினிமா மட்டுமின்றி ஹிந்தி சினிமாவிலும் பிரபலமானவர் நடிகை ஓவியா. என்ன கவலை இருந்தாலும் மற்றவர்களிடம் பாசிட்டிவாக மட்டுமே பழக கூடியவர் ஓவியா. இடையில் பெரிய அளவில் படங்களில் எதுவும் நடிக்காமல் இருந்த ஓவியா நடிப்பில் சமீபத்தில் ‘பூமர் அங்கிள்’ என்ற படம் வெளியானது. தற்போது ஓவியா சம்பவம், ராஜபீமா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
Also read… பாப் பாடகர் லியாம் பெய்ன் ஹோட்டல் பால்கனியில் இருந்து தவறி விழுந்து மரணம்… ரசிகர்கள் வேதனை