சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி… மாற்றுத்திறனாளி ரசிகரை நேரில் சந்தித்த நாகர்ஜுனா
Nagarjuna meets differently abled fan: தனது பாதுகாவலர்களால் மாற்றுத்திறனாளி ரசிகர் தள்ளிவிடப்பட்ட வீடியோவை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்த நாகர்ஜுனா, "இந்தச் சம்பவம் என்னுடைய கவனத்துக்கு வந்தது. இப்படி நடந்திருக்க கூடாது. நான் அந்த மனிதரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எதிர்காலத்தில் இதுபோன்ற வருத்தம் ஏற்படுத்தக்கூடிய சம்பவங்கள் நடக்காமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பேன்" என தெரிவித்திருந்தார்.
ஏர்போர்ட்டில் தன்னுடன் புகைப்படம் எடுக்க வந்த மாற்றுத்திறனாளியை பாதுகாவலர் தள்ளிவிட்டதற்கு நடிகர் நாகர்ஜூனா மன்னிப்பு கோரிய நிலையில் தொடர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவரை நேரில் சந்துள்ள வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. தனுஷின் 51-வது படத்தை இயக்குநர் சேகர் கம்முலா இயக்குகிறார். இவர் தெலுங்கில் வெளியான ‘ஃபிடா’ ‘லவ் ஸ்டோரி’ உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் கவனம் பெற்றவர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்தப்படம் வெளியாக இருக்கிறது. படத்தின் பெயரும், ஃபர்ஸ்ட் லுக்கும் சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதன்படி படத்துக்கு குபேரா என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் தனுஷ் தாடியும், தம்பட்டையுமாக பிச்சைக்காரர் போல் இருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் தனுஷின் தோற்றத்தைப் பார்த்த ரசிகர்கள் படம் எப்படி இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பை கிளப்ப ஆரம்பித்தனர்.
இதில் தனுஷின் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்தப் படத்திற்கு ’குபேரா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைப்பெறவுள்ளது. அதில் நாகர்ஜுனா மற்றும் தனுஷ் இடையிலான சண்டை காட்சி படமாக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பில் கலந்து கொள்ள கடந்த வாரத்தில் நடிகர் நாகர்ஜுனா மற்றும் நடிகர் தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் விமான நிலையத்துக்கு வந்தடைந்தனர்.
அப்போது விமான நிலையத்தில் பணி செய்யும் முதியவர் ஒருவர் நாகார்ஜுனாவின் அருகில் சென்றார். அந்த சமயத்தில் அங்கிருந்த பாதுகாவலர் ஒருவர் அந்த முதியவரை முரட்டுத்தனமாக இழுத்ததில் அந்த முதியவர் கீழே விழ செல்கிறார். அதை கண்டும் காணத மாதிரியே நாகர்ஜுனா மற்றும் தனுஷ் செல்கின்றனர். இந்நிலையில் இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் நாகார்ஜுனா தனது சமூகவலைதளப் பக்கத்தில் மன்னிப்பு கோரினார்.
Also read… ரஜினியின் ‘கூலி’ படம் குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்த லோகேஷ்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
தனது பாதுகாவலர்களால் மாற்றுத்திறனாளி ரசிகர் தள்ளிவிடப்பட்ட வீடியோவை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்த நாகர்ஜுனா, “இந்தச் சம்பவம் என்னுடைய கவனத்துக்கு வந்தது. இப்படி நடந்திருக்க கூடாது. நான் அந்த மனிதரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எதிர்காலத்தில் இதுபோன்ற வருத்தம் ஏற்படுத்தக்கூடிய சம்பவங்கள் நடக்காமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பேன்” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தனது பாதுகாவலரால் தள்ளிவிடப்பட்ட மாற்றுத்திறனாளி ரசிகரை விமான நிலையத்தில் நாகார்ஜுனா சந்தித்து பேசியுள்ளார். அப்போது ரசிகரை கட்டியணைத்த நாகர்ஜுனா, தனது பாதுகாவலர் அவரை தள்ளிவிட்டதற்கு வருத்தம் தெரிவித்தார்.