5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

பாராட்டிய பவன் கல்யாண்… நன்றி தெரிவித்த யோகி பாபு

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய் தொடங்கி பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி கேரக்டரில் நடிக்க தொடங்கிய யோகிபாவுக்கு அவரின் குண்டான தோற்றமும், பரட்டையான தலைமுடியும் மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்தது. விஜய்யுடன் 'மெர்சல்', அஜித்துடன் 'விஸ்வாசம்', ரஜினிகாந்துடன் 'தர்பார்' என முதல்நிலை நட்சத்திரங்களின் படங்களில் முதன்மை நகைச்சுவை நடிகராக நடிக்கும் அளவுக்கு யோகி பாபு உயரங்களை அடைந்தார். பல படங்களில் இவரது கால் சீட்டிற்காக முன்னணி நடிகர்கள் வரை தற்போது காத்திருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

பாராட்டிய பவன் கல்யாண்… நன்றி தெரிவித்த யோகி பாபு
யோகி பாபு, பவன் கல்யாண்,
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 03 Oct 2024 12:24 PM

நடிகரும் ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாண் நடிகர் யோகி பாபுவை பாராட்டி பேசியுள்ள நிலையில் அவருக்கு தனது எக்ஸ் தள பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார் யோகி பாபு.  யோகிபாபுவின் தந்தை இந்திய ராணுவத்தில் பணிபுரிந்ததால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சில காலம் தனது பள்ளி படிப்பை படித்துள்ளார் யோகி பாபு. விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சியில் உதவி இயக்குநராக பணியாற்றி தனது கலை பயணத்தை தொடங்கியுள்ளார் யோகி பாபு. இவரது உண்மையான பெயர் பாபு. அமீர் இயக்கத்தில் வெளியான ’யோகி’ படத்தில் நடித்து பிரபலமானதை தொடர்ந்து யோகி பாபு என இவரது பெயர் மாறியது. காமெடியன்கள் ஹீரோவாகும் கலாச்சாரம் தமிழ்நாட்டில் பெருகிவருகிறது. அதற்கு ஏற்றார் போல் நடிகர் யோகி பாபுவும் நெல்சன் திலீப்குமார் இயக்கிய கோலமாவு கோகிலா திரைப்படத்தில் லீடு ரோலில் நடித்தார்.

காமெடி நடிகராக வலம் வந்த யோகி பாபு இப்போது ஹீரோவாகவும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். ஹீரோவாக மாறினாலும் காமெடி ரோல்களையும் விடாமல் செய்துவருகிறார். தற்போது தமிழ் மட்டும் இன்றி ஹிந்தி, மலையாளம் என பான் இந்தியன் நடிகராக மாறியுள்ளார் யோகி பாபு.

சின்னத்திரையில் அறிமுகம் ஆகி பின்னர் வெள்ளி திரைக்கு வந்தவர். வெள்ளித்திரைக்கு வந்த புதிதில் அவருக்கு பெரிதாக எந்த வாய்ப்பும் இல்லை. ஒரு வழியாக யாமிருக்க பயமேன் படத்தில் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரம் பலராலும் ரசிக்கப்பட்டது. அதில் வரும் ”வாடா வாடா பன்னி மூஞ்சி வாயா” என்ற டயலாக் தான் ரசிகர்கள் மத்தியில் யோகி பாபுவை அதிகம் கவனிக்க வைத்தது. உருவ கேலியால் பிரபலமான யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக உருவெடுத்துள்ளார்.

தொடர்ந்து ‘பையா’, ‘கலகலப்பு’, ‘அட்டகத்தி’, ‘சென்னை எக்ஸ்பிரஸ்’, ‘சூது கவ்வும்’, ‘வீரம்’, ‘மான் கராத்தே’, ‘அரண்மனை’, ‘யாமிருக்க பயமே’, ‘ஐ’ எனப் பல படங்களில் ஒருசில நகைச்சுவைக் காட்சிகளில் வந்து ரசிகர்களைச் சிரிக்க வைத்தார். இயக்குநர் மணிகண்டனின் ‘காக்கா முட்டை’ திரைப்படத்தில் ‘எனக்கே விபூதி அடிக்க பாத்தீல்ல’ என்கிற வசனத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தார் யோகி பாபு. இந்த வசனம் தற்போது இணையத்தில் பலரால் பயன்படுத்தப்படு வருவது குறிப்பிடதக்கது.

Also read… சமந்தா விவாகரத்தில் அமைச்சரின் கருத்து… கொந்தளித்த பிரபலங்கள்

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய் தொடங்கி பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி கேரக்டரில் நடிக்க தொடங்கிய யோகிபாவுக்கு அவரின் குண்டான தோற்றமும், பரட்டையான தலைமுடியும் மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்தது. விஜய்யுடன் ‘மெர்சல்’, அஜித்துடன் ‘விஸ்வாசம்’, ரஜினிகாந்துடன் ‘தர்பார்’ என முதல்நிலை நட்சத்திரங்களின் படங்களில் முதன்மை நகைச்சுவை நடிகராக நடிக்கும் அளவுக்கு யோகி பாபு உயரங்களை அடைந்தார். பல படங்களில் இவரது கால் சீட்டிற்காக முன்னணி நடிகர்கள் வரை தற்போது காத்திருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

Also read… கார்த்தியின் ‘மெய்யழகன்’ படத்தைப் புகழ்ந்த நடிகர் நாகர்ஜூனா

காமெடியன்கள் ஹீரோவாகும் கலாச்சாரம் தமிழ்நாட்டில் பெருகிவருகிறது. அதற்கு ஏற்றார் போல் நடிகர் யோகிபாபுவும் நெல்சன் திலீப்குமார் இயக்கிய கோலமாவு கோகிலா திரைப்படத்தில் லீடு ரோலில் நடித்தார். அதனைத் தொடர்ந்து மண்டேலா, கோட் படத்திலும் ஹீரோவாக நடித்தார். நாயகனாக சில படங்களில் தொடர்ந்து நடித்து வந்தாலும் தனது காமெடி கதாப்பாத்திரத்தை விட்டுக்கொடுகாமல் தற்போதும் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்தநிலையில், நடிகரும் ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாண், சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் யோகி பாபுவை பாராட்டி பேசியுள்ளார். அதில் நடிகர் யோகி பாபுவின் நடிப்பு தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார். இது குறித்த பதிவை யோகி பாபு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு பவன் கல்யாணுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Latest News