போதைப்பொருள்.. பிரபல நடிகையின் சகோதரர் அதிரடியாக கைது.. என்ன நடந்தது? - Tamil News | popular actresss rakul preet singhs brother aman preet singh has been arrested drugs case | TV9 Tamil

போதைப்பொருள்.. பிரபல நடிகையின் சகோதரர் அதிரடியாக கைது.. என்ன நடந்தது?

Published: 

16 Jul 2024 14:46 PM

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் பிரபல நடிகையான ரகுல் பிரீத் சிங் சகோதரர் அமன்பிரீத் சிங்கை ஹைதராபாத் போலீசாரால் கைது செய்துள்ளனர். நைஜீரிய நாட்டைச் சேர்ந்த போதைப்பொருள் விற்பனையாளர்களிடம் அமன் பிரீத் சிங் போதை பொருள் வாங்கிய பொழுது கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போதைப்பொருள்.. பிரபல நடிகையின் சகோதரர் அதிரடியாக கைது.. என்ன நடந்தது?
Follow Us On

நடிகை ரகுல் ப்ரீத் சிங், தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்.ஜி.கே உட்பட சில படங்களில் நடித்துள்ளார். தமிழ் ஹிந்தி தெலுங்கு மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வரும் ரகுல் பிரீத் சிங் வெளியான இந்தியன் 2 படத்திலும் நடித்திருக்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் ஜாக்கி பக்னானியை திருமணம் செய்து கொண்ட ரகுல் ப்ரீத் சிங் தொடர்ந்து தமிழ் திரைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் நடித்து வருகிறார். இவரது சகோதரர் அமன்ரேட் சிங் தற்போது ஹைதராபாத் போலீசாரால் கைது செய்யப்பட்டிருப்பது மட்டுமில்லாமல் இவருடன் சேர்த்து மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Also Read: பாலிவுட் நடிகருடன் ஜோடி போடும் த்ரிஷா…!

கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு திரை உலகை சேர்ந்த பூரி ஜெகநாதன், சார்மி, ராணா, ரகுல் பிரீத் சிங், ரவி தேஜா உட்பட பல்வேறு பிரபலங்கள் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் மீண்டும் ரகுல் ப்ரீத்தி சிங் சகோதரர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். 2021 ஆம் ஆண்டு, அமலாக்கத்துறை அதிகாரிகள் பண மோசடி, போதை பொருள் வழக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் நேரடியாக விசாரணை நடத்தினர். இதுபோன்ற சூழலில் தற்போது ரகுல் பீரித் சிங்கின் சகோதரர் நைஜீரிய நாட்டை சார்ந்த போதை பொருள் கும்பலிடம் 2.6 கி.கி கோகைன் போதைப் பொருளை வாங்கும் பொழுது கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து கோகனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வரும் போலீசார் பொதைப்பொருள் எவ்வாறு கொண்டுவரப்பட்டது, எங்கு வாங்கப்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: பாக்கியலட்சுமி சீரியலில் ஈஸ்வரிக்காக சாட்சி சொல்லும் மயூ… அதிர்ச்சியில் ராதிகா

இது தொடர்பான வழக்கில் தற்போது நைஜீரிய பாஸ்போர்ட் வைத்திருந்த ஜோனா கோம்ஸ்(31), லாகோஸை சேர்ந்த அஜீஸ் நோஹீம் அதோஷோலா(29), விசாகப்பட்டினத்தை சேர்ந்த அல்லம் சத்ய வெங்கட கவுதம்(31), ஆந்திராவை சேர்ந்த சனபோய்னா வருண் குமார்(42), ரங்காரெட்டி மாவட்டத்தை சேர்ந்த மகபூப் ஷரீப் (36) ஆகியோர் தான் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப் பொருள் தவிர்த்து 2 பைக்குகள், 10 செல்போன்கள் மற்றும் 2 பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்குடன் தொடர்புடைய நைஜீரியாவை டேர்ந்த டிவைன் எபுகா சுஸீ(35) மற்றும் கலேஷி(2) ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.

குழந்தைகள் அப்பாக்களை அதிகம் விரும்புவது ஏன் தெரியுமா?
உங்கள் வாழ்க்கையை அழகாக மாற்ற எளிய வழிகள் இதோ!
கர்ப்பிணிகள் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை வெள்ளையா பிறக்குமா?
உணவில் பூண்டு சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
Exit mobile version