Actor Suriya : விபத்தில் சிக்கிய நடிகர் சூர்யா.. ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த அசம்பாவிதம்.. உடல்நிலை இப்போ எப்படி இருக்கு?
Actor Suriya: தீபாவளியை ஒட்டி சூர்யாவின் கங்குவா படம் ரிலீசாகவுள்ள நிலையில் அந்தப் படத்தின் ரிலீஸுக்கு பிறகு சூர்யா 44 படத்தின் டைட்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சூர்யாவுடன் பூஜா ஹெக்டே உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். ஒரு மாதத்தை தாண்டி அந்தமானில் தொடர்ந்து இடைவெளி இல்லாமல் படத்தின் முதல்கட்ட சூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
‘சூர்யா 44’ படத்தின் படப்பிடிப்பின்போது அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடிக் கட்டிப் பறப்பவர் நடிகர் சூர்யா. தமிழில் மட்டும் கவனம் செலுத்தி வந்த சூர்யா தற்போது ஹிந்தி சினிமா பக்கமும் கவனத்தை திருப்பியிருக்கிறார். விரைவில் அவர் ஒரு ஹிந்தி படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார். இதில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.3டியில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதில் இரண்டு கதாபாத்திரங்களில் சூர்யா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம், இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து சூர்யா தனது 44-வது படத்திற்காக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் உடன் கூட்டணி சேர்ந்துள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 44 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தினை சூர்யாவும், கார்த்திக் சுப்புராஜும் இணைந்து தயாரிக்கின்றனர். சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் தோல்வியையே சந்தித்தது. அதனையடுத்து வணங்கான், கங்குவா, வாடிவாசல், புறநானூறு ஆகிய படங்களில் கமிட்டானார். இவற்றில் வணங்கானிலிருந்து வெளியேறிய அவர் வாடிவாசலில் நடிக்கிறாரா இல்லையா என்பது குறித்து இன்னும் தெரியவில்லை.
Also read… விக்ரமின் ‘தங்கலான்’ படம் எப்படி இருக்கு… முதல் விமர்சனம் இதோ!
தீபாவளியை ஒட்டி சூர்யாவின் கங்குவா படம் ரிலீசாகவுள்ள நிலையில் அந்தப் படத்தின் ரிலீஸுக்கு பிறகு சூர்யா 44 படத்தின் டைட்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சூர்யாவுடன் பூஜா ஹெக்டே உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். ஒரு மாதத்தை தாண்டி அந்தமானில் தொடர்ந்து இடைவெளி இல்லாமல் படத்தின் முதல்கட்ட சூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அங்கு இந்த படத்தின் ஆக்சன் காட்சிகள் உள்ளிட்டவை அந்தமான் ஹார்பர் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் கடந்த மாதம் 26ம் தேதி முதல் இந்த படத்தின் இரண்டாவது கட்ட ஷூட்டிங் ஊட்டியில் துவங்கி மும்முரமாக நடந்து வந்தது.
Dear #AnbaanaFans, It was a minor injury. Pls don’t worry, Suriya Anna is perfectly fine with all your love and prayers. 🙏🏼
— Rajsekar Pandian (@rajsekarpandian) August 9, 2024
உதகையில் உள்ள ‘நவாநகர் பேலஸ்’ என்ற இடத்தில் சண்டை காட்சி படமாக்கப்பட்டு வந்தது. ‘ஜூனியர் பைட்டர்ஸ்’ உடன் சண்டை காட்சி நடந்த போது நடிகர் சூர்யாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்தது. இதையடுத்து உடனடியாக படபிடிப்பு நிறுத்தப்பட்டது. படப்பிடிப்பு குழுவினர் நடிகர் சூர்யாவை ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில் சூர்யா நலமுடன் இருப்பதாக தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவையும் அவர் வெளியிட்டுள்ளார்.