5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Bigg Boss Tamil Season 8: பிக்பாஸ் வீட்டைவிட்டு இன்று வெளியேறப்போவது இவரா? இணையத்தில் கசிந்த தகவல்

கடந்த 6-ம் தேதி 8-வது சீசன் தொடங்கியது. இதில், ரவீந்தர் சந்திரசேகர், அன்ஷிதா, அருண் பிரசாத், தீபக், தர்ஷா குப்தா, தர்ஷிகா, ஜாக்குலின், ஜெப்ரி, முத்துக்குமார், அர்னவ், பவித்ரா ஜனனி, ரஞ்சித், ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, சத்யா, செளந்தர்யா, சுனிதா, வி.ஜே. விஷால் என 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர்.

Bigg Boss Tamil Season 8: பிக்பாஸ் வீட்டைவிட்டு இன்று வெளியேறப்போவது இவரா? இணையத்தில் கசிந்த தகவல்
பிக்பாஸ்
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 13 Oct 2024 10:42 AM

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியேறப்போகும் போட்டியாளர் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்களின் பார்வை மொத்தமும் நிகழ்ச்சி போட்டியாளர்களின் தேர்வு பட்டியலின் பக்கம் சென்றது. முதல் சீசனில் ஆரவ் கோப்பையை வென்றார், அதே சமயம் ரித்விகா இரண்டாவது சீசனில் பாடகர் மற்றும் நடிகர் முகேன் ராவ் மூன்றாவது சீசனையும், நடிகர்கள் ஆரி அர்ஜுனா மற்றும் ராஜு ஜெயமோகன் நான்காவது மற்றும் ஐந்தாவது சீசனில் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். ஆறாவது மற்றும் ஏழாவது சீசனில் அசீம் மற்றும் அர்ச்சனா வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து 100 நாட்கள் ஒளிபரப்பப்படும் இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார். விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் பல முன்னணி நட்சத்திரங்கள் இதுவரை தொகுத்து வழங்கி வந்துள்ளனர். கடந்த 7 சீசன்களாக நடிகர் கமல் ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வந்த நிலையில் அவர் நிகழ்ச்சியை விட்டு விலகிய பிறகு தற்போது விஜய் சேதுபதி இந்த 8-வது சீசனை தொகுத்து வழங்குகிறார்.

Also read… தவறு செய்து விட்டேன்… தனது வாழ்க்கை குறித்து ஓப்பனாக பேசிய நடிகர் ஜெயம் ரவி

இந்த நிலையில் கடந்த 6-ம் தேதி 8-வது சீசன் தொடங்கியது. இதில், ரவீந்தர் சந்திரசேகர், அன்ஷிதா, அருண் பிரசாத், தீபக், தர்ஷா குப்தா, தர்ஷிகா, ஜாக்குலின், ஜெப்ரி, முத்துக்குமார், அர்னவ், பவித்ரா ஜனனி, ரஞ்சித், ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, சத்யா, செளந்தர்யா, சுனிதா, வி.ஜே. விஷால் என 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர்.

Also read… ’மெய்யழகன்’ படத்தின் மூன்று வார வசூல் எவ்வளவு தெரியுமா?

பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக, பங்கேற்பாளர்களிலிருந்து ஒருவர், 24 மணி நேரத்தில் வெளியேற்றப்படவுள்ளார் என அறிவித்தார். இந்த அறிவிப்பு போட்டியாளர்கள் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதில் யார் வெளியேறப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்த நிலையில் கடந்த திங்கள் அன்று பிக்பாஸ் அறிவுறுத்தலின்படி நாமினேஷன் நடைப்பெற்றது. அதில் சக போட்டியாளர்களின் அதிக வாக்குகளைப் பெற்ற சாச்சனா நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார். அதனை தொடர்ந்து வீட்டில் இந்த வாரம் ஆளப் போவது தலைவனா அல்லது தலைவியா என்ற அடிப்படையில் போட்டி நடைப்பெற்றது. இதில் பெண்கள் அணியில் இருந்து தர்ஷிகா வெற்றிப்பெற்றார். இதனால் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் தலைவி தான் என்பது உறுதியானது. அதனை தொடர்ந்து இந்த வாரத்திற்கான நாமினேஷன் ப்ராசஸ் நடைப்பெற்றது. அதில், ரவீந்தர் சந்திரசேகர், அருண் பிரசாத், ஜாக்குலின், முத்துக்குமார், சௌந்தர்யா, ரஞ்சித் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று வார இறுதியில் வந்த விஜய் சேதுபதி கடந்த ஒரு வாரம் முழுவதும் நடைப்பெற்ற நிகழ்வுகளை எந்தவித பாரபட்சம் இன்றி அனைவரிடமும் பேசி தெளிவுப்படுத்தினார். மேலும் போட்டியாளர்களின் தவறுகளை நேரடியாக பேசி வீக் எண்ட் எபிசோடை விறுவிறுப்பாக கொண்டு சென்றார் விஜய் சேதுபதி. இந்த நிலையில் இன்று இந்த வீட்டை விட்டு ரவீந்தர் சந்திரசேகர் வெளியேற உள்ளதாக இணையத்தில் தகவல்கள் கசிந்துள்ளது.

Latest News