5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

புஷ்பா பட பாடலுக்கும் விவாகரத்திற்கும் என்ன சம்பந்தம்? – ஓபனாக பேசிய சமந்தா

Actress Samantha: தனக்கு மயோசிடிஸ் என்ற அறிய வகை நோய் இருப்பதாக கடந்த 2022 ஆம் ஆண்டு சமந்தா அறிவித்தார். அது அவரது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. இதற்கிடையே திரைப்படங்களில் நடித்துக்கொண்டே சிகிச்சை பெற்று வந்தார் சமந்தா. ஆனால் ஒரு கட்டத்தில் திரைப்படங்களில் இருந்து விலகி சிகிச்சையில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.

புஷ்பா பட பாடலுக்கும் விவாகரத்திற்கும் என்ன சம்பந்தம்? – ஓபனாக பேசிய சமந்தா
சமந்தா
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 06 Jun 2024 13:32 PM

புஷ்பா படத்தின் முதலாம் பாகத்தில் வெளியான ’ஊ சொல்ரியா…’ பாடலுக்கும் விவாகரத்திற்கும் என்ன சம்பந்தம் என நடிகை சமந்தா வெளிப்படையாக பேசியுள்ளார். நடிகர் அதர்வா நடிப்பில் வெளியான பானா காத்தாடி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகினரின் கவனத்தைப் பெற்றவர் நடிகை சமந்தா. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் நானியுடன் ‘நான் ஈ’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் கியூட் நாயகியாக வலம் வரத் தொடங்கினார். பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா என அவர்களுக்கு நாயகியாக நடிக்கத் தொடங்கினார் சமந்தா. இவரது நடிப்பில் தமிழில் வெளியான் கத்தி, நீதானே என் பொன் வசந்தம், அஞ்சான், தெறி உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு தமிழ், தெலுங்கு என பான் இந்திய மொழி திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார் சமந்தா.

சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் ரசிகர்களை கவர்ந்த ஜோடியாக இருந்தனர். தெலுங்கு திரைப்படங்களில் இணைந்து நடித்த இருவரும் காதல் வயப்பட்டதால், கடந்த 2017-ஆம் ஆண்டு பிரம்மாணடமாக திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணமும் 4 ஆண்டுகளில் தோல்வியில் முடிந்தது. 2021-ம் ஆண்டு சமந்தா – நாக சைதன்யா இருவரும் தங்கள் பிரிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

திருமணத்திற்கு பிறகும் அதிக கிளாமரான காட்சிகளில் சமந்தா நடிக்க நாக சைதன்யா விரும்பாததால் இருவரும் பிரிந்ததாக தகவல்கள் வெளியாகின. தாயாக வேண்டாம் என்று சமந்த இந்த முடிவை எடுத்ததாகவும் பல விமர்சனங்களை சினிமா வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் எதிர்கொண்டார் சமந்தா.

எனினும் சர்ச்சைகளையும் வதந்திகளையும் பொருட்படுத்தாமல் வெப் சீரிஸ், படங்கள் என படு பிசியாக வலம் வந்தார் சமந்தா. விவாகரத்திற்கு பிறகு புஷ்பா படத்தில் ஊ சொல்றியா பாடலுக்கு சமந்தா படு கிளாமராக நடனமாடியது இணையத்தில் காட்டுத்தீ போல பேசுபொருளானது.

Also read… சினிமாவில் இந்த பாகுபாடு வருத்தம் அளிக்கிறது – நடிகை ராஷி கண்ணா

இந்நிலையில் தனக்கு மயோசிடிஸ் என்ற அறிய வகை நோய் இருப்பதாக கடந்த 2022 ஆம் ஆண்டு சமந்தா அறிவித்தார். அது அவரது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. இதற்கிடையே திரைப்படங்களில் நடித்துக்கொண்டே சிகிச்சை பெற்று வந்தார் சமந்தா. ஆனால் ஒரு கட்டத்தில் திரைப்படங்களில் இருந்து விலகி சிகிச்சையில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் நடிகை சமந்தா ஊ சொல்றியா பாடலில் நடித்தது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதில், ஊ சொல்ரியா பாடல் என்னிடம் வந்தபோது என் குடும்பத்தார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என எல்லோரும் இதில் நடிக்க வேண்டாம் என்று கூறினர். ஏனென்றால், அது நான் விவாகரத்தை அறிவித்த சமயம். நான் ஏன் அதை மறுக்க வேண்டும். நான் எந்த தவறும் செய்யவில்லை. திருமண வாழ்க்கையில் என் 100 சதவிகிதத்தை கொடுத்தேன் ஆனால், அது பயனளிக்கவில்லை. விவாகரத்தையும் ஊ சொல்ரியா பாடலில் நடிப்பதையும் நான் ஏன் சம்பந்தப்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Latest News