5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி குறித்து தெரியவரும் உண்மை – வைரலாகும் ப்ரோமோ

விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னணியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. கிராமப்புறங்கள் மற்றும் நகரப்புறங்களில் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் அதிகமாக இருப்பதால்தான் இந்த சீரியல் தொடர்ச்சியாக முதல் இடத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடைந்திருக்கின்றனர். இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்து வரும் முத்துவிற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது.

சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி குறித்து தெரியவரும் உண்மை – வைரலாகும் ப்ரோமோ
சிறகடிக்க ஆசை
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 26 Aug 2024 14:30 PM

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி குறித்து குடும்பத்தினருக்கு உண்மைகள் தெரியவருவது போன்ற ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. கடந்த வாரம் முழுவதும் முத்து மற்றும் மீனா இடையே பிரச்சனையை விஜயா கிளப்பி விட மீனாவிடம் முத்து சண்டை போட்டு பேசாமல் இருந்தார். அதனை தொடர்ந்து தனது நண்பர்கள் கூறிய அறிவுரையில் மனம் மாறிய முத்து மீனாவிடம் சமாதானம் ஆகினார். இதைப் பார்த்த விஜயா தான் நினைத்தது நடக்கவில்லை என்று வறுத்தப்பட்டார். அதனை தொடர்ந்து ரோகிணியும் மனோஜும் வீட்டிற்கு சுவீட் வாங்கிட்டு வருகின்றனர். அதனைத் தொடர்ந்து ரோகிணி கர்பமாக இருப்பதாக விஜயா தவறாக புரிந்து கொள்கிறார். ஆனால் மனோஜ் ஷோ ரூமில் நல்ல விற்பனை ஆனதால் ஸ்வீட் வாங்கி வந்ததாக கூற விஜயா கடுப்பாகி சீக்கிரம் இந்த வீட்டிற்கு பேர குழந்தை வேணும் என்று ரோகிணியிடம் கோவமாக கூறுகிறார்.

சீரியல்களுக்கு பிரபலமான விஜய் டிவியில் கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி 23-ம் தேதி முதல் இரவு நேரம் சிறகடிக்க ஆசை எனும் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. எதிர்பாராத சூழ்நிலையில் திருமணம் செய்து கொள்ளும் மீனா மற்றும் முத்துக்குமாரை மையப்படுத்தி சிறகடிக்க ஆசை சீரியலின் கதை நகர்கிறது. இந்த சீரியலில் வரும் முத்துவின் கதாப்பாத்திரத்திற்கு இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சினிமா படங்களுக்கு ரசிகர்கள் லட்சக்கணக்கில் இருப்பதைப் போன்று டிவிகளில் ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதோடு சீரியல்களில் நடிக்கும் நடிகர்களை தங்களுக்கு மிகவும் பரிச்சயமானவர்கள் போல அன்பு செலுத்தி வருகிறார்கள் பார்வையாளர்கள்.

Also read… நடிகர் ரியாஸ் கான் மீது கேரள நடிகை பாலியல் புகார்

விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னணியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. கிராமப்புறங்கள் மற்றும் நகரப்புறங்களில் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் அதிகமாக இருப்பதால்தான் இந்த சீரியல் தொடர்ச்சியாக முதல் இடத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடைந்திருக்கின்றனர். இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்து வரும் முத்துவிற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது.

இந்த நிலையில் சிறகடிக்க ஆசை சீரியலில் இந்த வார ப்ரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் மீனாவின் தங்கை சீதா ஒரு மருத்துவமனையில் வேலை பார்த்து கொண்டிருக்கிறார். அங்கு வரும் ரோகிணி மருத்துவரை சந்தித்து தான் இரண்டாவது குழந்தைக்கு முயற்சித்து வருவதாக அதற்கு என்ன ட்ரீட்மெண்ட் செய்யவேண்டும் என்றும் கேட்கிறார். இதனை தெரிந்துகொண்ட சீதா மீனாவிடம் சொல்ல மீனா அதிர்ச்சியாகிறார். பிறகு வீட்டில் மீனா குழப்பமாக இருப்பதைப் பார்த்த ஸ்ருதி விசாரிக்க அவர் ரோகிணி குறித்து அறிந்த உண்மையை சொல்ல ஸ்ருதி ரவியிடம் கூற, ரவி முத்துவிடம் கூற, முத்து அண்ணாமலையிடம் கூற, அண்ணாமலை விஜயாவிடம் விசாரிக்க விஜயா கோபத்துடன் ரோகிணியிடம் சென்று கேட்க என்று பரப்பான ப்ரோமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Latest News