சிறகடிக்க ஆசை சீரியல் முத்து பெயரில் நடந்த மோசடி… நடிகர் வெளியிட்ட வீடியோ
Siragadikka Aasai Vetri Vasanth: சீரியலில் கதாநாயகனாக நடித்து வரும் முத்துவிற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவாக வலம் வெற்றி வசந்த், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை கிளப்பி வருகிறது.
‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வெற்றி வசந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது பகிர்ந்துள்ள வீடியோ ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீரியல்களுக்கு பிரபலமான விஜய் டிவியில் கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி 23-ம் தேதி முதல் இரவு நேரம் சிறகடிக்க ஆசை எனும் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. எதிர்பாராத சூழ்நிலையில் திருமணம் செய்து கொள்ளும் மீனா மற்றும் முத்துக்குமாரை மையப்படுத்தி சிறகடிக்க ஆசை சீரியலின் கதை நகர்கிறது. இந்த சீரியலில் வரும் முத்துவின் கதாப்பாத்திரத்திற்கு இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சினிமா படங்களுக்கு ரசிகர்கள் லட்சக்கணக்கில் இருப்பதைப் போன்று டிவிகளில் ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதோடு சீரியல்களில் நடிக்கும் நடிகர்களை தங்களுக்கு மிகவும் பரிச்சயமானவர்கள் போல அன்பு செலுத்தி வருகிறார்கள் பார்வையாளர்கள்.
விஜய் டிவியில் டிஆர்பியில் முதலிடத்தில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. கிராமப்புறங்கள் மற்றும் நகரப்புறங்களில் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் அதிகமாக இருப்பதால்தான் இந்த சீரியல் தொடர்ச்சியாக முதல் இடத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடைந்திருக்கின்றனர்.
Also read… Movies List: கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை… இந்த வாரம் வெளியாகும் புதுப் படங்கள்!
இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்து வரும் முத்துவிற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவாக வலம் வெற்றி வசந்த், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை கிளப்பி வருகிறது.
அவர் வெளியிட்ட வீடியோவில், நான் பேஸ்புக்கில் ஆரம்பத்தில் இருந்தேன், அப்போது ஒரு சில புகைப்படங்களை பதிவிட்டேன், ஆனால் அதன்பிறகு என்னுடைய அக்கவுண்டில் இருந்து என்னுடைய புகைப்படங்களை எடுத்துவிட்டு நான் அந்த அக்கவுண்டை லாக் செய்துவிட்டேன். ஆனால் என்னை போலவே யாரோ ஒரு அக்கவுண்ட் ஓபன் செய்து பயன்படுத்தி வருகிறார்கள். அவர்கள் ரசிகர்களிடம் பேசி வருகிறார்கள் என்று எனக்கு தெரிய வந்தது. நானும் அது குறித்து கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கிறேன். நான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டுமே இருக்கிறேன், யாரும் போலி அக்கவுண்டை நம்ப வேண்டாம் என வீடியோ வெளியிட்டுள்ளார்.