5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Sivakarthikeyan: விஜய் இடத்துக்கு ஆசையா?.. வெளிப்படையாக பதிலளித்த சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் தான் தமிழ் சினிமாவின் பேசுபொருளாக உள்ளார். காரணம் தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய் இன்னும் ஒரு படத்துடன் நடிப்பில் இருந்து விலகி முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் தமிழ் சினிமாவில் அவரது இடத்தைப் பிடிக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ரஜினி, விஜய்க்கு பிறகு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான நடிகராக சிவகார்த்திகேயன் தான் உள்ளார்.

Sivakarthikeyan: விஜய் இடத்துக்கு ஆசையா?.. வெளிப்படையாக பதிலளித்த சிவகார்த்திகேயன்!
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 30 Sep 2024 12:13 PM

சிவகார்த்திகேயன்: சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வரை கலக்கி கொண்டிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் தான் தமிழ் சினிமாவின் பேசுபொருளாக உள்ளார். காரணம் தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய் இன்னும் ஒரு படத்துடன் நடிப்பில் இருந்து விலகி முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் தமிழ் சினிமாவில் அவரது இடத்தைப் பிடிக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ரஜினி, விஜய்க்கு பிறகு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான நடிகராக சிவகார்த்திகேயன் தான் உள்ளார். அதனால் அடுத்த தளபதி அவர் தான் என சொல்லப்பட்டு வருகிறது. இதனிடையே சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளிக்கு வெளியாகிறது.

இந்த படத்தின் ப்ரோமோஷன் பல இடங்களிலும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறந்து. அந்த வகையில் திருச்சியில் நடைபெற்ற அமரன் பட விழா ப்ரமோசனின் போது நடிகர் சிவகார்த்திகேயனுடன் ரசிகர்கள் உடன் கலந்துரையாடினார். அப்போது விஜய் நடித்த தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தில் கேமியோ ரோலில் நடித்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தி கோட் படத்தில் நடித்ததற்காக பெருமைப்படுவதாகவும், அதற்காக தளபதி விஜய்க்கும் இயக்குநர் வெங்கட் பிரபுவிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் சிவகார்த்திகேயன் கூறினார்.

இதையும் படிங்க: TVK Flag: கொடியில் யானை.. த.வெ.க கட்சிக்கு எதிராக புகார்… தேர்தல் ஆணையம் பரபரப்பு பதில்!

இதனை தொடர்ந்து ரசிகர் ஒருவர் முதலில் அந்த படத்தில் சிவகார்த்திகேயன், விஜய் சம்பந்தப்பட்ட காட்சியை குறிப்பிட்டு பேசிய போது, அனைவரும் அடுத்த தளபதி என கூச்சலிட்டனர். அதற்கு பதில் சொன்ன அவர், “அடுத்த தளபதி நான் என்பதெல்லாம் கிடையாது. ஒரே தளபதி, தல, சூப்பர் ஸ்டார், உலக நாயகன் தான்.  இந்த அடுத்த என்பதெல்லாம் வாய்ப்பு கிடையாது. அவர்களை பார்த்து தான் நான் சினிமாக்கு வந்தேன். அவர்களை மாதிரி நல்ல படங்களை கொடுத்து ஜெயிக்க வேண்டுமென நினைக்கலாம்.  ஆனால் அவங்களாகவே ஆக வேண்டும் என்று நினைக்கிறது என்பதெல்லாம் சரி கிடையாது. என்னை பொறுத்தவரை தப்பு என நினைக்கிறேன்” என தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஆனால், நடிகர் விஜய் அவர் நடித்த லியோ பட வெற்றி விழாவின் போது, “ஒரே சூப்பர் ஸ்டார், ஒரே உலக நாயகன், ஒரே தல” என குறிப்பிட்டு பேசியிருந்தார். அதனை சிவகார்த்திகேயனும் பின்பற்றி பேசுவதால் கண்டிப்பாக விஜய் இடத்தை அவர்தான் பிடிக்க உள்ளார் என இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: Saraswathy Pooja: சரஸ்வதி பூஜையின் நோக்கமும் வழிபாட்டு முறையும்..!

தி கோட் படத்தில் நடந்தது என்ன?

கோட் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்த காட்சியில் விஜய் அவரிடம் துப்பாக்கியை கொடுத்து வில்லனான மோகனை பார்த்துக் கொள்ளும்படி சொல்லி அங்கிருந்து செல்ல முயற்சிப்பார். அப்போது துப்பாக்கி கொடுக்கும்போது, இனிமேல் இவனை நீங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் இந்த வசனம் பேசுவார். விஜய் அங்கிருந்து வெளியேற செல்லும்போது அவரை தடுக்கும் சிவகார்த்திகேயன், “நீங்கள் ஏதோ முக்கியமான விஷயத்திற்கு செல்வதாக தெரிகிறது. நீங்கள் அதை பார்த்துக் கொள்ளுங்கள். நான் இங்கு பார்த்துக் கொள்கிறேன்” என சொல்வதாக காட்சி இருக்கும். இதில் விஜய் சினிமா விட்டு அரசியலுக்கு செல்வது போலவும், சிவகார்த்திகேயன்  உங்கள் இடத்தை நான் பார்த்துக்கொள்கிறேன் என சொல்வது போலவும் இருப்பதாக ரசிகர்கள் பலரும் தெரிவித்திருந்தனர்.

அமரன் படம்

ராஜ்கமல் நிறுவனம் சார்பில் நடிகர் கமல்ஹாசன் சோனி நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள அமரன் படம் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ளது. இந்தப் படம் மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கை வரலாறு அடிப்படையாகக் கொண்டது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவுள்ளது.

Latest News