5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ராயன் பட ஹிட்… தனுஷிற்கு டபுள் சர்ப்ரைஸ் கொடுத்த கலாநிதி மாறன்

Raayan Movie: படத்தின் திரைக்கதைப் புத்தகம் ஆஸ்கார் விருது வழங்கும் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சைன்ஸ் நிறுவனத்தில் உள்ள நூலகத்தில் ராயன் படத்தின் திரைக்கதை புத்தகத்தை வைக்க தேர்வானது. ராயன் படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ரசிகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் பிரியாணி விருந்து கொடுத்திருந்தார் தனுஷ்.

ராயன் பட ஹிட்… தனுஷிற்கு டபுள் சர்ப்ரைஸ் கொடுத்த கலாநிதி மாறன்
கலாநிதி மாறன், தனுஷ்
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 23 Aug 2024 08:24 AM

தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த நிலையில் தற்போது தனுஷிற்கு தயாரிப்பாளர் கலாநிதி மாறன் டபுள் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது வைரலாகி வருகின்றது. தனுஷ் தற்பொழுது அவரின் 50 வது படமான ‘ராயன்’ திரைப்படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். இப்படத்தில், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், அபர்ணா பாலமுரளி என பலர் நடித்துள்ளனர். படம் வட சென்னையை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் தனுஷ் இதற்க்கு முன்பு எந்த படத்திலும், நடித்திராத கெட்டப்பான மொட்டை தலையுடன் நடித்துள்ளார். தனுஷின் 50-வது படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். படத்தில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்துள்ளது.

படத்தின் திரைக்கதைப் புத்தகம் ஆஸ்கார் விருது வழங்கும் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சைன்ஸ் நிறுவனத்தில் உள்ள நூலகத்தில் ராயன் படத்தின் திரைக்கதை புத்தகத்தை வைக்க தேர்வானது. ராயன் படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ரசிகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் பிரியாணி விருந்து கொடுத்திருந்தார் தனுஷ்.

சிறு வயதிலேயே தனது பெற்றோரை தொலைத்த தனுஷ் கிராமத்தில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லாததை உணர்ந்து தனது இரண்டு தம்பிகள் மற்றும் தங்கையுடன் சென்னையை வந்தடைகிறார். அங்கு செல்வராகவனை சந்திக்கும் தனுஷ் அவருடைய உதவியால் வேலை, வீடு என தனது தம்பிகள், தங்கையை பார்த்துக்கொள்கிறார் தனுஷ். சிறு வயதிலேயே பெற்றோரை தொலைத்ததால் தனது தம்பிகள், தங்கைக்கு தகப்பன் ஸ்தானத்தில் இருந்து அவர்களை பாதுகாக்கிறார். அவர்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் அவர்களை காக்கும் அரணாக நிக்கிறார் தனுஷ்.

Also read… Vaazhai Movie Review: வாழை படத்திற்கு தேசிய விருது நிச்சயம்… படம் பார்த்தவர்கள் கூறுவது என்ன?

இந்த நிலையில் எதிர்பாராத விதமாக தனது முதல் தம்பி சந்தீப்கிஷன் அந்த ஏரியாவில் பெரிய தாதாவாக இருக்கும் சரவணனின் மகனை கொலை செய்து விடுகிறார். அந்த தாதாவிடம் இருந்து தனது தம்பி மற்றும் குடும்பத்தை எப்படி காப்பாற்றினார் தனுஷ். அதன் பிறகு என்ன எல்லாம் நடந்தது என்பதே படத்தின் கதை. குடும்பம், பாசம், துரோகம், பழிவாங்கல் என வழக்கமான டெம்ப்ளேட்டுகள் தான் படத்தின் கதை என்றாலும் அதனை சுவாரஸ்யமாக கடத்தியுள்ளார் இயக்குநர் தனுஷ்.

படத்தில் ’அடங்காத அசுரன்’ பாடலில் வரும் ‘உசுரே நீ தானே நீ தானே’ என்ற வரிகள் ஏ.ஆர்.ரகுமானின் குரலில் முன்னதாக வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இந்த பாடல் காட்சியாக எப்படி இருக்கும் என்பதை திரையரங்கில் பார்க்க ரசிகர்கள் காத்திருந்தனர். ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு செம்ம ட்ரீட் கொடுக்கும் வகையில் முக்கியமான இடத்தில் இந்த வரிகள் ஏ.ஆர்.ரகுமானின் குரலில் ஒலித்த போது திரையரங்கே அதிர்ந்தது.

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தனுஷை நேரில் அழைத்து இரண்டு செக் பரிசாக கொடுத்துள்ளார். ஒரு செக் இயக்குநர் தனுஷுக்கும் மற்றொரு செக் நடிகர் தனுஷுக்கும் வழங்கி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். இது தொடர்பான தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும் ஒவ்வொரு செக்கிற்கும் ஒரு கோடி என மொத்தம் இரண்டு கோடிகள் வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

Latest News