படப்பிடிப்பு ரத்து என்ற உத்தரவை மறுபரிசீலனை செய்க – நடிகர் சங்கம் - Tamil News | Tamil Actors Association urges to Producers Association withdraw strike announcement | TV9 Tamil

படப்பிடிப்பு ரத்து என்ற உத்தரவை மறுபரிசீலனை செய்க – நடிகர் சங்கம்

Published: 

07 Sep 2024 14:33 PM

நேற்று (06.09.2024) துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன் தலைமையில் ஹேமச்சந்திரன், பிரேம், தாசரதி ஆகியோர் அடங்கிய தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகக்குழு மற்றும் முரளி ராமசாமி தலைமையிலான தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாக குழுவின் இடையே சந்திப்பு நிகழ்ந்தது. கடந்த 18.08.2024 அன்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கம் நிர்வாகிகள் இடையே நடந்த ஆலோசனை கூட்டத்தில், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் இடையிலான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கான 11 பரிந்துரைகள், தயாரிப்பாளர்கள் சார்பாக வழங்கப்பட்டது.

படப்பிடிப்பு ரத்து என்ற உத்தரவை மறுபரிசீலனை செய்க - நடிகர் சங்கம்

நடிகர் சங்கம்

Follow Us On

நவம்பர் 1-ஆம் தேதி முதல் படப்பிடிப்பு ரத்து என்ற உத்தரவை தயாரிப்பாளர்கள் சங்கம் மறுபரிசீலனை செய்ய என்றும் தென்னிந்திய நடிகர் சங்கம் வற்புறுத்தியுள்ளது. தயாரிப்பாளர் சங்கம், நடிகர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கத்தின் கூட்டம் கடந்த ஜூலை மாதம் சென்னையில் நடைப்பெற்றது. அதில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் தலைமையில், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகள் தமிழ்நாடு திரையரங்க மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரைப்பட நடப்பு விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள், கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் 6 முக்கிய  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டது. நடிகர்கள் சம்பள உயர்வு, ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமம் விற்பனையில் சிக்கல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பேசித் தீர்க்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்தது.

இது தொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், முன்னனி நட்சத்திரங்கள் நடிக்கும் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி 8 வாரங்களுக்கு பிறகே OTT- தளங்களில் வெளியிட வேண்டும் என்று கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சில நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்கள், குறிப்பிட்ட தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து முன்பணம் பெற்று, மற்ற தயாரிப்பு நிறுவனங்களுக்கு பணிபுரிகின்றனர். இதனால் பெரும் நிதி இழப்பு ஏற்படுகிறது. எனவே, முன்னோக்கிச் செல்லும்போது, எந்தவொரு நடிகரோ அல்லது தொழில்நுட்ப வல்லுனரோ அத்தகைய பிரச்சனகைளை தவிர்க்க, வேறு படங்களுக்கு செல்வதற்கு முன் ஒப்புக்கொண்ட திரைப்படங்களை முடிக்க வேண்டும். இதனை முன்னிட்டு நவம்பர் 1-ம் தேதி முதல் எந்தவொரு படப்பிடிப்பும் நடைபெறாது எனவும், புதிய படங்களுக்கு பூஜை போடப்படாது என தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்தது.

இது தென்னிந்திய நடிகர் சங்கத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதுகுறித்து நாசர் தலைமையில் பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டன. இருதரப்பு இடையிலும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் ஸ்டிரைக் வேண்டாம் என்று தயாரிப்பாளர் சங்கத்திற்கு நடிகர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நேற்று (06.09.2024) துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன் தலைமையில் ஹேமச்சந்திரன், பிரேம், தாசரதி ஆகியோர் அடங்கிய தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகக்குழு மற்றும் முரளி ராமசாமி தலைமையிலான தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாக குழுவின் இடையே சந்திப்பு நிகழ்ந்தது. கடந்த 18.08.2024 அன்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கம் நிர்வாகிகள் இடையே நடந்த ஆலோசனை கூட்டத்தில், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் இடையிலான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கான 11 பரிந்துரைகள், தயாரிப்பாளர்கள் சார்பாக வழங்கப்பட்டது.

அதன் மீது தீவிர கலந்தாலோசனைக்கு பின்னர், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக, இரு தரப்பிற்கும் சாதகமான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கான 37 பரிந்துரைகளும், தனுஷ் சம்பந்தப்பட்ட சுமூகமான பரஸ்பர தீர்வு அடங்கிய ஆவணங்களும் நேற்றைய சந்திப்பில், தயாரிப்பாளர்கள் சங்க தலைவரான முரளி ராமசாமியிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

செப்டம்பர் மாத இறுதிக்குள் பரிந்துரைகளை அளிக்க ஒப்புக்கொண்ட நிலையில், தமிழ்த் திரைத்துறை சார்ந்த தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் அனைத்து தொழிலாளர்களின் பொது நலனை கருத்தில் கொண்டு, இது தொடர்பாக 15 தினங்களிலேயே தென்னிந்திய நடிகர் சங்கம் தங்கள் தரப்பு பரிந்துரைகளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக விரைவில் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் இடையே ஒரு தீர்மானம் எட்டப்பட்டு, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு இடையிலான ஒரு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கிறோம்.

Also read… கூலி படத்தில் நடிக்க நாகர்ஜூனா வாங்கிய சம்பளம் இவ்வளவா? வைரலாகும் தகவல்

மேலும் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கான பேச்சு வார்த்தைகள் துவங்கி, அதில் கணிசமான முன்னேற்றமும் உள்ளதால், புதிய படங்களுக்கு தற்போது பூஜையிட்டு துவக்கக் கூடாது என்றும், நவம்பர் 1-ஆம் தேதி முதல் எந்த படப்பிடிப்பும் நடக்காது என்றும் வெளியிட்ட அறிவிப்பை உடனடியாக மறுபரிசீலனை செய்து, திரைத்துறை தொழிலாளிகள் எவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தொடர்ந்து பணிகள் சுமுகமாக நடைபெற, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வழிவகுக்கும் எனவும் நம்புகிறோம். இவ்வாறு தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த உணவுகளை ஒருப்போதும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது..!
தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் பூண்டு..!
நுரையீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்!
Exit mobile version