5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Vijay: விஜய் இலவச வீடு.. செய்தியாளர்களிடம் எகிறிய புஸ்ஸி ஆனந்த் – நடந்தது என்ன?

Tamilaga Vettri Kazhagam: தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தளபதி விஜய் விலையில்லா வீடுகள் என்ற பெயரில் நலிவடைந்தவர்களுக்கு இலவச வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் கும்மிடிப்பூண்டியில் தொடங்கிய இத்திட்டம் பல்வேறு இடங்களுக்கும் விரிவடைந்து வருகிறது.அந்த வகையில் சென்னையை அடுத்த பொன்னேரியில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இரண்டு குடும்பங்களுக்கு விலையில்லா வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.

Vijay: விஜய் இலவச வீடு.. செய்தியாளர்களிடம் எகிறிய புஸ்ஸி ஆனந்த் – நடந்தது என்ன?
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 26 Jul 2024 10:41 AM

தளபதி விஜய்: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி தொடங்கினார். நீண்ட காலமாக அவரின் அரசியல் வருகையை ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருந்த நிலையில், விஜய்யின் இந்த அறிவிப்பு மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தளபதி விஜய் விலையில்லா வீடுகள் என்ற பெயரில் நலிவடைந்தவர்களுக்கு இலவச வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் கும்மிடிப்பூண்டியில் தொடங்கிய இத்திட்டம் பல்வேறு இடங்களுக்கும் விரிவடைந்து வருகிறது. அந்த வகையில் சென்னையை அடுத்த பொன்னேரியில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இரண்டு குடும்பங்களுக்கு விலையில்லா வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

Also Read: Bank Holidays: ஆகஸ்ட் மாதம் வங்கி செல்கிறீர்களா? 13 நாட்கள் விடுமுறை.. நோட் பண்ணிக்கோங்க..

இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் பங்கேற்று திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்திக்க வந்த அவரிடம் சரமாரியாக கேள்விகள் எழுப்பப்பட்டது. குறிப்பாக தளபதி விஜய் விலையில்லா வீடுகள் என திட்டத்திற்கு பெயர் வைத்து விட்டு ரசிகர்களிடம் மட்டும் பணம் வாங்கி வீடு கட்டியுள்ளீர்களே? – அப்படியென்றால் இதற்கு தளபதி விஜய் ரசிகர்கள் விலையில்லா வீடுகள் என்று தானே பெயர் வைக்க வேண்டும் என கேள்வி எழுப்பப்பட்டது. இந்த வீடுகளை கட்ட விஜய் தான் பணம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் ரசிகர்கள் தானே இந்த வீடுகளுக்கு பணம் கொடுத்துள்ளார்கள் எனவும் கேட்கப்பட்டது.

இந்த கேள்விகளை எதிர்கொண்டதும் புஸ்ஸி ஆனந்தின் முகமே மாறிவிட்டது. உடனே டென்சனான அவர், இந்த வீடுகள் எல்லாம் தமிழக வெற்றிக் கழக்ம் சார்பில் நாங்கள் கட்டிக் கொடுத்துள்ளோம். விஜய் கொடுத்தாரா, இல்லை ரசிகர்கள் கொடுத்தார்களா என நாங்கள் சொல்லவில்லை. தளபதி விலையில்லா வீடுகள் கட்ட விஜய் பணம் கொடுத்தாரா இல்லையா என்பதெல்லாம் உங்களுக்கு தெரியுமா சொல்லுங்கள் என திரும்ப கேட்டார். இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலாகி பலரும் புஸ்ஸி ஆனந்த் இப்படி ஒரு கட்சியின் பொதுச்செயலாளராக இருந்துக்கொண்டு நிதானமாக செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Also Read: Long Distance Relationship: லாங் டிஸ்டன்ஸ் ஜோடிகளா நீங்கள்..? இதை செய்தால் காதல் குறையாது..!

விஜய்யின் அரசியல் பாதை 

 

நடிகர் விஜய் 2026 ஆம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தல் தான் தன்னுடைய இலக்கு என செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் தொகுதி வாரியாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் 3 மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அவர் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார். மேலும் கள்ளக்குறிச்சி சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறிய தமிழ்நாடு அரசுக்கு தனது கண்டனத்தைப் பதிவு செய்தார். இப்படியாக அவரின் அரசியல் பயணம் அடுத்தடுத்த நகர்வுகளை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News