5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Today’s Cinema News: அஜித்தின் அடுத்த திரைப்படம் முதல் வேட்டையன் வசூல் வரை.. டாப் சினிமா செய்திகள்!

இன்றைய சினிமா செய்திகள்: நடிகர் அஜித்தின் அடுத்த திரைப்படம் முதல் முதல் நடிகர் சூர்யாவின்45 திரைப்படத்தின் டைட்டில் வரை இன்று அக்டோபர் மாதம் 15-ம் தேதி சினிமாவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் குறித்து தகவல்களை பார்ப்போம்.

Today’s Cinema News: அஜித்தின் அடுத்த திரைப்படம்  முதல் வேட்டையன் வசூல் வரை.. டாப் சினிமா செய்திகள்!
டாப் சினிமா செய்திகள்
barath-murugantv9-com
Barath Murugan | Published: 15 Oct 2024 19:21 PM

இன்றைய சினிமா செய்திகள்: நடிகர் அஜித்தின் அடுத்த திரைப்படம் முதல் முதல் நடிகர் சூர்யாவின்45 திரைப்படத்தின் டைட்டில் வரை இன்று அக்டோபர் மாதம் 15-ம் தேதி சினிமாவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் குறித்து பார்ப்போம்

நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சைக்கு அடுத்து கூலி திரைப்படத்தில் இணைவது எப்போது..?

நடிகர் ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்திற்கு அடுத்ததாக தற்போது வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்துவந்தார். தற்போது அந்த திரைப்படமானது கடந்த அக்டோபர் 10 ஆயுத பூஜையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகியது. இத்திரைப்படத்தில் இந்தியத் திரையுலக பிரபலங்கள் பலரும் நடித்திருந்த அமிதாப்பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியர், ராணா டக்குபதி என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். தற்போது இத்திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் கூலி. இந்த திரைப்படத்தில் நடித்துவந்த நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போதுவரை சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு பாதியில் நின்ற நிலையில் அடுத்து எப்போது ஆரம்பிக்கும் என மக்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்த நிலையில் ரசிகர் ரஜினி தற்போது அடுத்துப் படப்பிடிப்பில் இணையவுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் வருகின்ற அக்டோபர் 16ல் இணைய உள்ளார் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.

நடிகர் சூர்யாவின் 45 திரைப்படத்தின் டைட்டில் என்ன?

தற்போது நடிகர் சூர்யா நடித்துவரும் திரைப்படம் கங்குவா. இத்திரைப்படத்தைப் பிரபல இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் ஞானவேல் தயாரித்துவருகிறார். இந்த திரைப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், கோவை சரளா, யோகிபாபு, ரெட்டின் கிங்ஸ்லி, நடராஜன் சுப்பிரமணியன், ஜெகபதி பாபு, கே.எஸ்.ரவிக்குமார் நடித்துவருகின்றனர். இத்திரைப்படம் குடியசிக்கிறம் வெளியாக உள்ள நிலையில் தற்போது ஆர்,ஜெ.பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா அடுத்த திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் தகவல்கள் நேற்று அக்டோபர் 14ல் வெளியான நிலையில் சூர்யாவின் இத்திரைப்படத்தை “ட்ரிம் வாரியர் பிக்சர்ஸ்” தயாரிக்கவுள்ளது. நேற்று வெளியான முதல் புகைப்படத்தைக் கொண்டு இப்படத்திற்கு டைட்டில் “கருப்பு” என ரசிகர்கள் மத்தியில் கூறப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க :நடிகை சோபிதா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

வேட்டையன் திரைப்படத்தின் 5 நாள் வசூல் விவரம்..!

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் ஐந்தாவது நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஜெய்பீம் படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த த.செ.ஞானவேல் இயக்கியுள்ள இந்த படத்தில் அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ஃபஹத் ஃபாசில், ராணா டகுபதி, கிஷோர், துஷாரா விஜயன், ரக்‌ஷன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள வேட்டையன் படத்தை பெரும் பொருட்செலவில் லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இதனிடையே வேட்டையன் படம் கடந்த அக்டோபர் 10ல் உலகமெங்கும் வெளியானது. தற்போது இந்த படம் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய சாதனையைப் படைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போதுவரை வேட்டையன் திரைப்படம் உலகமெங்கும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதைப் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இன்றுவரை வேட்டையன் திரையரங்கில் எவ்வளவு வேட்டையாடி உள்ளது என்றால் சுமார் 210 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. வெளியான நான்கு நாட்களில் 200 கோடிகளை வசூல் செய்த நிலையில் 5வது நாளில் சற்று பின்னடைவைச் சந்தித்துள்ளது எனக் கூறப்படுகிறது.

இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் மறுபடியும் இணைய உள்ளாரா..?நடிகர் அஜித்..!

தற்போது குட் பேட் அக்லி படத்திலிருந்து நடிகர் அஜித் குமாரின் புது லுக் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்ற நிலையில் நடிகர் அஜித், துணிவு படத்துக்குப் பிறகு நடித்து வரும் படம் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உட்படப் பலர் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கியது. இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது வெளியீட்டிற்கான பணிகளைப் படக்குழு செய்து வருகின்றது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைப்பெற்றுக் கொண்டிருந்த போதே அஜித் தனது அடுத்த படத்தில் கமிட்டானார். அஜித்தின் அந்த 63-வது படத்தை மார்க் ஆண்டனி படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் இயக்குகின்ற நிலையில் இந்த திரைப்படத்திலும் நடிகை திரிஷா தான் கதாநாயகியாக நடிக்க உள்ளார் எனத் தகவல்கள் வெளியாகி வருகின்றனர். தற்போது குட் பேட் அக்லி இந்த திரைப்படத்திற்கு அடுத்ததாக இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒரு நேர்காணலில் இயக்குநர் சிறுத்தை சிவாவிடம் அடுத்து அஜித்தை வைத்து எப்போது திரைப்படம் எடுக்க போறிங்க என்ற கேள்விக்கு “நான் கண்டிப்பாக எடுப்பேன் என்றும் அதற்குச் சார் தான் வெளியா சொல்லணும்” என்று கூறியுள்ளார்.

 

 

வேட்டையன் திரைப்படத்தைக் குறித்து நடிகர் ரக்சன் பகிர்ந்த தகவல்..!

ரஜினிகாந்த்தின் ஜெயிலர், லால் சலாம் படங்களைத் தொடர்ந்து அடுத்து நடித்துள்ள புதிய படம் ‘வேட்டையன்”. இப்படத்தை ஜெய் பீம் படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஞானவேல் இந்த ஆக்‌ஷன் த்ரில்லரை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தைப் பிரபல தயாரிப்பு நிறுவனம் லைகா தயாரித்துள்ளது. டீசர் மற்றும் ட்ரெய்லர் சுவாரஸ்யமாக இருந்ததால், படம் வெளியாவதற்கு முன்பே நல்ல வரவேற்பை உருவாக்கிய நிலையில் இத்திரைப்படம் கடந்த அக்டோபர் 10ல் வெளியாகியது. இப்படம் நான்காவது நாளில் இந்தியாவில் மட்டும் சுமார் 25 கோடிகள் வரை வசூல் செய்திருக்கும் என பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. அதேபோல் முதல் நாளில் படம் ரூபாய் 35 கோடிகள் வரை வசூல் செய்திருப்பதாகக் கூறப்படுகின்றது. தற்போது விமர்சனங்களை எதிர்கொண்டுவரும் விதத்தில் இத்திரைப்படத்தில் நடித்த பல நடிகர்கள் வேட்டையன் திரைப்படத்தின் அனுபவம் குறித்து தங்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது படத்தில் நடித்த நடிகர் ரக்சன் தனது அனுபவம் குறித்து சமூக வலைத்தள பக்கத்தில் நெகிழ்ச்சி பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “ரசிகனாக இருந்த ரக்‌சன் இப்போது குடும்பப் பையனாகிறான். தலைவர் ரஜினிகாந்த், மஞ்சுவாரியர், ஞானவேல் ஆகியோர் மிகவும் ஊக்கப்படுத்துபவர்காளாக உணர்கிறேன். உங்களின் அன்புக்கும், ஆதரவுக்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க :வெற்றிகரமாக 25 நாட்கள்… லப்பர் பந்து படக்குழுவினர் வெளியிட்ட புது போஸ்டர்!

25 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும் லப்பர் பந்து திரைப்படம்..!

நடிகர்கள் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் வெளியான லப்பர் பந்து படம் 25 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அதனைக் கொண்டாடும் விதமாக படக்குழுவினர் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். ‘கனா’, ‘எஃப்ஐஆர்’ படங்களில் இணை இயக்குநராகவும், ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தின் வசனகர்த்தாவுமான தமிழரசன் பச்சமுத்து இயக்குநராக அறிமுகமாகியுள்ள படம் ‘லப்பர் பந்து’. ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகிகளாக சுவாசிகா விஜய் மற்றும் ‘வதந்தி’ புகழ் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியும் நடித்துள்ளனர். மேலும் தேவதர்ஷினி, பால சரவணன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தைச் சர்தார், காரி, ரன் பேபி ரன் உள்ளிட்ட படங்களைத் தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது வெளியாகி 25 நாட்களைக் கடந்த நிலையில் இத்திரைப்படக்குழு வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் இணையத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளனர். அந்த பதிவில் திரைப்படத்தை ‘அன்பு’ பொழிந்து தமிழ்நாடே ‘கெத்து’ என்று காட்டியதற்கு எங்கள் பார்வையாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்! என இப்பதிவில் கூறியுள்ளனர்.

 

நடிகர் ஜீவாவின் பிளாக் திரைப்படத்தின் நான்கு நாள் வசூல் விவரம்..!

தமிழ்த் திரைப்பட முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் ஜீவா. தற்போது இவரின் நடிப்பில் வெளியான திகில் திரைப்படம் பிளாக். இந்த திரைப்படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இவர்களின் நடிப்பில் இயக்குநர் கே.ஜி.பாலசுப்ரமணியன் இயக்கத்தில் மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம்இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளார். மற்றும் இந்த திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் சாம் சி இசையமைத்துள்ளார். இந்த பிளாக் திரைப்படம் ஹாலிவுட்டில் 2013ல் வெளியான “கோஹரன்ஸின்” என்ற திரில்லர் திரைப்படத்தைத் தழுவி தமிழில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும் .நடிகர் ஜீவா நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் ஜீவா நடித்த த்ரில்லர் திரைப்படமாக இஇப்படம் உள்ளது. தமிழில் வெளியான வித்யாசமாக மாறுபட்ட கோணத்தில் உருவாக்கி இத்திரைப்படம் கடந்த அக்டோபர் 11ம் தேதி ஆயுத பூஜை தினத்தை முன்னிட்டு வெளியானது. இந்த திரைப்படம் வெளியாகி இரண்டு நாட்கள் ஆன நிலையில் பாக்ஸ் ஆபிசில் சுமார் 2 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது திரையரங்குகளை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இத்திரைப்படம் நான்கு நாட்களில் சுமார் உலகளாவிய வசூலில் சுமா 3.6 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது என தகவல்கள் வெளியாகி வருகின்றனர்.

 

 

Latest News