Today’s Cinema News: ஒரு வருடத்தை கடந்த லியோ.. சிவகார்த்திகேயனை பாராட்டிய மணிரத்னம்.. டாப் சினிமா செய்திகள் - Tamil News | | TV9 Tamil

Today’s Cinema News: ஒரு வருடத்தை கடந்த லியோ.. சிவகார்த்திகேயனை பாராட்டிய மணிரத்னம்.. டாப் சினிமா செய்திகள்

இன்றைய சினிமா செய்திகள் : இயக்குனர் லோகேஷ் கனகராஜின் லியோ முதலாம் ஆண்டு நிறைவு முதல் அமரன் திரைப்படம் இசை வெளியீட்டு விழா வரை இன்று அக்டோபர் மாதம் 19-ம் தேதியில் முக்கிய சினிமா செய்திகள் குறித்து சில.

Today’s Cinema News:  ஒரு வருடத்தை கடந்த லியோ.. சிவகார்த்திகேயனை பாராட்டிய மணிரத்னம்.. டாப் சினிமா செய்திகள்

இன்றைய சினிமா செய்திகள்

Updated On: 

21 Oct 2024 15:04 PM

இன்றைய சினிமா செய்திகள்: இயக்குனர் லோகேஷ் கனகராஜின் லியோ முதலாம் ஆண்டு நிறைவு முதல் அமரன் திரைப்படம் இசைவெளியீட்டு விழா வரை இன்று அக்டோபர் மாதம் 19-ம் தேதியில் முக்கிய சினிமா செய்திகள் குறித்து சில.

இயக்குனர் லோகேஷ் கனகராஜின் லியோ திரைப்படம் வெளியாகி ஒரு ஆண்டு நிறைவு..!

பிரபல நடிகர்களில் பட்டியலில் முதலில் இருப்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது இயக்குநர் ஹச். வினோத் இயக்கத்தில் பெயர் வைக்கப்படாத தளபதி 69 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவரது கடைசி திரைப்படமாக இருக்கும் என்று கூறப்பட்டு வரும் இந்த திரைப்படத்திற்குப் பிறகு, நடிகர் விஜய் முழுவதுமாக அரசியலில் இறங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இவரின் நடிப்பில் கடந்த 2023ல் வெளியான திரைப்படம் லியோ. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா, அர்ஜுன், மற்றும் மிஷ்கின் எனப் பல திரை பிரபலங்களின் நடிப்பில் வெளியாகியது. ஆக்ஷ்ன் மற்றும் சுவாரஸ்ய கதைகளைக் கொண்டு அமைப்பில் இந்த திரைப்படம் வெளியாகியது. இத்திரைப்படம் வெளியாகி இன்றோடு ஒரு ஆண்டு நிறைவடைந்த நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் “லியோ திரைப்படத்தின் மூலம் பல விஷயங்கள், நினைவுகள் மற்றும் பல உற்சாகமான தருணங்களைப் பெற்றதாகவும். இத்திரைப்படத்தில் நடித்த என் அன்பார்ந்த அண்ணன் விஜய் அவர்களுக்கு மிகவும் நன்றி என்றும், இந்த லியோ திரைப்படம் என் இதயத்திற்கு நெருக்கமான திரைப்படம் என்றும், இந்த திரைப்படத்திற்காக வியர்வையையும், இரத்தத்தையும் செலவழித்த அனைவருக்கும் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி எனத் தனது எக்ஸ் பக்கத்தில் லியோ திரைப்படத்தின் ஒரு ஆண்டு நிறைவைவில் நன்றி தெரிவிக்கும் விதத்தில் வெளியிட்டுள்ளார்.

அமரன் இசை வெளியிட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயனைப் பார்த்து இயக்குநர் மணிரத்னம் சொன்ன விஷயம்..!

அமரன் திரைப்பட இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பிரபல இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ் மற்றும் மணிரத்னம் போன்ற பிரபல இயக்குநர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய மணிரத்தினம் இந்த திரைப்படத்தைப் புகழ்ந்து தள்ளினார். இதில் அவர் ‘அமரன் திரைப்படம் ஒரு உண்மையான சம்பவத்தை வைத்து ஒரு அருமையாக எடுக்கப்பட்ட திரைப்படம் என்றும் ஒரு ‘ரியல் லைப்’ கதைக்களம் என்றாலே மக்கள் மற்றும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஒரு பிரம்மாண்ட வரவேற்பை பெரும் அந்தவகையில் இந்த அமரன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெரும் என்றும் இயக்குநர் பெரியசாமி இப்படத்தை மிகவும் அழகாக எடுத்திருக்கிறார்’ என்றும் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனைப் பற்றிக் கூறிய மணிரத்தினம் “எந்த ஒரு நடிகரும் தான் நடித்த முதல் திரைப்படங்களை அடுத்துத் தொடர் திரைப்படங்களில் நடித்து ஹிட்டாகி விடுவார்கள். அந்தவகையில் சிவகார்த்திகேயன் அடிமட்டத்திலிருந்து ஒவ்வொரு திரைப்படங்களைத் தனது விடா முயற்சியால் நடித்து தற்போது ‘டாப் ஹீரோவில்’ ஒருவராக இருக்கிறார். இவருக்குக் குழந்தைகள் முதல் குடும்ப ரசிகர்கள் என அனைத்து தரங்களிலும் தனது ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்” என்றும் இந்த திரைப்படத்தில் இதுவரை நடிக்காத ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்’ என்றும் தொடர்ந்து நடிகை சாய் பல்லவியிடம் வந்த இயக்குநர் மணிரத்னம் சாய் பல்லவியைப் பார்த்து “நான் உங்களுடைய மிகப்பெரிய ரசிகன் என்றும் கூடிய சீக்கிரம் ஒரு திரைப்படத்தில் சந்திக்கலாம்” என்றும் கூறியுள்ளார்.

 

நடிகர் அஜித் மற்றும் விஜயை பற்றி நடிகர் சிவகார்த்திகேயன் கூறிய விஷயம் ..!

அமரன் திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிகர் அஜித் மற்றும் விஜய்யைப் பற்றிப் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வந்தது அதில் சிவகார்த்திகேயன் நடிகர் அஜித் பற்றிப் பேசும்போது அவர் கூறியுள்ளார் “ஒரு முறை நண்பர் ஒருத்தருடன் தீபாவளி கெட் டூ கெதர் நிகழ்ச்சிக்காகச் சென்றிருந்தேன் என்றும் அந்த நிகழ்ச்சி நடந்த இடத்தில் உள்ள கதவை திறந்தால் உள்ளே நடிகர் அஜித் நின்று கொண்டிருந்தார் என்றும், அவர் என்னைக் கைகொடுத்து வரவேற்றார். பின்னர் என்னிடம் Welcome to “Big League” என்ற வார்த்தையைச் சொன்னார். அதற்கு நான் எனக்கு நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியல சார் எனக் கூறினேன். உடனே விளக்கம் கொடுத்த அஜித், உங்களுடைய வளர்ச்சியைப் பார்த்து சிலர் பாதுகாப்பில்லை என உணர்ந்தாலே நீங்க இந்த “Big League” உள்ள வந்துட்டீங்கன்னு அர்த்தம் எனக் கூறினார் என சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து விஜயுடன் கோட் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடித்திருந்தார். அதில் இந்த துப்பாக்கியை புடிங்க சிவா என்ற விஜய் கூறியிருப்பார் அது தொடர்பாக சில விஷயங்கள் இணையத்தில் உலாவிய நிலையில் அதற்கான தக்க பதிலையும் சிவகார்த்திகேயன் அளித்திருப்பார். இதைத் தொடர்ந்து உங்களுக்குத் தளபதி கொடுத்த துப்பாக்கி முக்கியமா இல்லை வாட்ச் முக்கியமா என தொகுப்பாளர் கேள்விகேட்டு நிலையில் இந்த இரண்டை விட தளபதி விஜயின் அன்புதான் எனக்கு ஸ்பெஷல் என நகைச்சுவையாகத் தெரிவித்திருப்பார்.

வேட்டையன் திரைப்படத்தின் 10வது நாள் வசூல் விவரம்..!

நடிகர் ரஜினிகாந்த்தின் நடிப்பில் 170வது திரைப்படமாக வெளியான படம் வேட்டையன் ரஜினியின் அசத்தலான நடிப்பில் உருவான இத்திரைப்படம் கடந்த அக்டோபர் 10 ஆயுத பூஜை விடுமுறையோடு வெளியானது. இத்திரைப்படத்தில் முன்னணி நடிகர்களாக இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் எனப் பல மொழி திரை பிரபலங்கள் வேட்டையன் திரைப்படத்தில் நடித்திருந்தனர். அவர்கள் யார் யாரெல்லாம் தெரியுமா ரித்திகா சிங், மஞ்சு வாரியர்,கிஷோர், அமிதாப்பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா டகுபதி, துஷாரா விஜயன், ரக்‌ஷன் எனப் பலரும் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து தமிழகத்தில் பரவலான பகுதிகளில் கனமழை பெய்துவந்ததால் இத்திரைப்படத்தின் வசூலில் கடுமையான பாதிப்பு ஏற்பட நேர்ந்தது. இந்த இழப்பினை ஈடுகட்டும் விதமாக இத்திரைப்படத்தைப் பிரபல ஓடிடி நிறுவனமான அமேசான் பிரேமில் 90கோடிகளுக்கு விற்றுள்ளனர். பின்னடைவில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானாலும் இத்திரைப்படம் தற்போதுவரை திரையரங்குகளில் வெளியாகி வருகிறது. இந்நிலையில் இன்றோடு வேட்டையன் திரைப்படம் வெளியாகி 9வது நாளை கடந்த நிலையில் 225 கோடியை வசூல் செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து தீபாவளி விதிமுறையை ஒட்டி இன்னும் அதிக வசூல் செய்து சாதனை படிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ப்ளடி பெக்கர் திரைப்படத்திலிருந்து வெளியான ட்ரைலர்..!

தமிழ் திரையுலகில் தற்போது பிரபல நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் கவின். டாடா மற்றும் ஸ்டார் போன்ற திரைப்படங்களின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து தற்போது இவரின் மாறுபட்ட நடிப்பில் மிகவும் வித்தியாசமாக உருவாகிவரும் திரைப்படம் ப்ளடி பெக்கர். இயக்குநர் சிவபாலன் இயக்கத்தில், நெல்சன் திலீப்குமார் தயாரிப்பும் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தில் துணை நடிகர்களாக ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகதா, டி.எம்.கார்த்திக், பதம் வேணு குமார், அர்ஷத், பிரியதர்ஷினி ராஜ்குமார், மிஸ் சலீமா, அக்ஷயா ஹரிஹரன், அனார்கலி நாசர், திவ்யா விக்ரம், தனுஜா மதுராபந்த் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை இயக்குநர் சிவபாலன் முற்றிலும் நகைச்சுவை கதைக்களத்தை மையமாகக் கொண்டு இயக்கியுள்ளார். இந்த திரைப்படமானது வருகின்ற அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகையை ஒட்டி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் தற்போது இத்திரைப்படத்தில் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ட்ரைலரில் நடிகர் கவின் அச்சு அசல் அப்படியே பிச்சைக்காரன் போல் நடித்துள்ளார் என்பது நாம் இந்த ட்ரைலரை பார்க்கும் போதே தெரிகிறது . தற்போது இந்த ப்ளடி பெக்கர் படத்தின் ட்ரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆர்.ஜெ.பாலாஜியில் சொர்க்கவாசல் திரைப்படத்தின் முதல் போஸ்டர் வெளியீடு..!

தமிழ்த் திரைப்படங்களை நடிகர் விவேக்கிற்கு அடுத்ததாகப் பல கருத்துக்களை உள்ளடக்கி மிக கருத்துமிக்க காமெடி திரைப்படங்களில் நடித்துவருபவர் நடிகர் ஆர்.ஜே பாலாஜி. இவர் முதலில் FM ரேடியோவில் பணிபுரிந்த இவர் முதலில் திரைப்படங்களில் நடிகர்களுக்குத் துணை கதாபாத்திரத்தில் காமெடியனாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து நடிகராக LGK, மூக்குத்தி அம்மன்,வீட்ல விசேஷம் மற்றும் சிங்கப்பூர் சலூன் போன்ற திரைப்படங்களை நடித்து மக்களிடையே மிகவும் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து தற்போது திரைப்படங்களை இயக்க ஆரம்பித்துள்ளார். இவர் சூர்யாவின் நடிப்பில் சூர்யா 45 என்ற திரைப்படத்தை இயக்கவுள்ளார். இதனை அடுத்து இவர் தற்போது இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகிவரும் சொர்க்கவாசல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் “ஸ்வப் ரைட் ஸ்டுடியோ” தயாரிப்பில் உருவாகிவரும் இத்திரைப்படத்தின் முதல் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

 

நடிகை சாய் தன்ஷிகா மற்றும் சந்தோஷ் பிரதாப்பின் ஐந்தாம் வேதம் திரைப்படத்தின் ட்ரைலர்..!

தெலுங்கு திரைப்படத்தின் முன்னை நடிகையாக வலம் வந்தவர் நடிகை சாய் தன்ஷிகா. இவர் 2009ல் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் வெளியான பேராண்மை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தற்போது நீண்டநாள் இடைவேளைக்குப் பிறகு இவரின் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ஐந்தாம் வேதம். இதில் தன்ஷிகாவுடன் முக்கிய கதாபாத்திரமாக சந்தோஷ் பிரதாப் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை இயக்குநர் நாகராஜன் இயக்கத்தில் பிரபல ஓடிடி நிறுவனமான ஜீ ஒரிஜினல் தயாரித்துள்ளது. இந்த ஐந்தாம் வேதம் திரைப்படத்தில் துணை நடிகர்களாக விவேக் ராஜகோபால், ஒய்.ஜி. மகேந்திரன்,மேத்யூ வர்கீஸ், கிரிஷா குருப், ராம்ஜி, பொன்வண்ணன், தேவதர்ஷினி எனப் பல திரை பிரபலங்கள் நடித்துள்ளார். முற்றிலும் மாறுபட்ட அமானுஷ்யம், த்ரில்லர் மற்றும் ஆக்ஷன் போன்ற கதைக்களத்தில் உருவாகிவரும் இத்திரைப்படத்திற்காக ரேவா இசையமைத்துள்ளார். இத்திரைப்படமானது வருகின்ற அக்டோபர் 25ல் ஜீ5 என்ற ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள நிலையில் இப்படக்குழு படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது. அமானுஷ்யம் மற்றும் பழங்கால புராணக்கதைகளை வெளிப்படுத்தும் வண்ணத்தில் இந்த ட்ரைலரில் உள்ளது. தற்போது இந்த ட்ரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!