5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Today’s Cinema News: நடிப்புக்கு காரணம் சொன்ன சூர்யா முதல் அதிரடி முடிவெடுத்த சாய் பல்லவி வரை… டாப் சினிமா செய்திகள்!

இன்றைய சினிமா செய்திகள்: நடிகர் சூர்யா நடிக்க வருதற்கு தெரிவித்த காரணம் முதல் தனது வீடியோ இணையத்தில் வைரலான பிறகு நடிகை சாய் பல்லவி எடுத்த அதிரடி முடிவு வரை அக்டோபர் மாதம் 25-ம் தேதி சினிமாவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் குறித்து சில.

Today’s Cinema News: நடிப்புக்கு காரணம் சொன்ன சூர்யா முதல் அதிரடி முடிவெடுத்த சாய் பல்லவி வரை… டாப் சினிமா செய்திகள்!
டாப் சினிமா செய்திகள்
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 25 Oct 2024 18:29 PM

இன்றைய சினிமா செய்திகள்: நடிகர் சூர்யா நடிக்க வருதற்கு தெரிவித்த காரணம் முதல் தனது வீடியோ இணையத்தில் வைரலான பிறகு நடிகை சாய் பல்லவி எடுத்த அதிரடி முடிவு வரை அக்டோபர் மாதம் 25-ம் தேதி சினிமாவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் குறித்து சில.

சினிமாவில் நடிக்க வந்ததற்கு சூர்யா சொன்ன காரணம்

நடிகர் சூர்யா சினிமாவில் நடிக்க வந்ததற்கு தனது அம்மா தான் காரணம் என பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. கங்குவா மற்றும் சூர்யா 44 என இரண்டு படங்களிலும் பிசியாக வேலை செய்து வருகிறார் சூர்யா. சூர்யாவின் நடிப்பில் தற்போது உருவாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் கங்குவா. இந்த படத்தினை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்குகின்றார். மன்னர் காலக் கதையைக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்த படம்தான் சூர்யாவின் நடிப்பில் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டு வரும் படம். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், கோவை சரளா, யோகிபாபு, ரெட்டின் கிங்ஸ்லி, நடராஜன் சுப்பிரமணியன், ஜெகபதி பாபு, கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்து வருகின்றனர். நடிகர் சூர்யா புரமோஷன் போது பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் தான் நடிக்க வந்ததற்கு காரணம் தனது அம்மா வாங்கிய கடன் தான் என்று தெரிவித்துள்ளார். சூர்யாவின் அம்மா அவரது தந்தைக்கு தெரியாமல் கடன் வாங்கியிருந்ததாகவும் அந்த கடனை தான் அடைக்க நினைத்ததால் சம்பாதிக்கவே படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸில் நாமினேஷன் ஃப்ரீ பாஸை வென்ற பெண்கள்

கடந்த 6-ம் தேதி பிக்பாஸ் தமிழ் 8-வது சீசன் தொடங்கியது. இதில், ரவீந்தர் சந்திரசேகர், அன்ஷிதா, அருண் பிரசாத், தீபக், தர்ஷா குப்தா, தர்ஷிகா, ஜாக்குலின், ஜெப்ரி, முத்துக்குமார், அர்னவ், பவித்ரா ஜனனி, ரஞ்சித், ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, சத்யா, செளந்தர்யா, சுனிதா, வி.ஜே. விஷால் என 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர். முதல் வார நாமினேஷனில் இடம் பிடித்த ரவீந்தர் குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து கடந்த வார நாமினேஷனில் இடம் பிடித்த அர்னவ் குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இந்த வாரத்திற்கான நாமினேஷன் ஃப்ரீ டாஸ்கில் இதுவரை இரண்டு விளையாட்டுகள் முடிந்துள்ளது. இதில் ஆண்கள் அணியினர் முதல் விளையாட்டில் வெற்றிப்பெற்றனர். பெண்கள் அணியினர் இரண்டாவது விளையாட்டில் வெற்றிப்பெற்றனர். மொத்தம் மூன்றில் இதுவரை ஆண்கள் மற்றும் பெண்கள் சமநிலையில் இந்தனர். இந்த நிலையில் இன்று மூன்றாவது டாஸ்க் நடைபெறுகிறது. அதில் பெண்கள் அணியினர் நாமினேஷன் ஃப்ரீ பாஸை வென்றனர்.

’ஒன்ஸ் மோர்’ படத்திலிருந்து வெளியானது ’மிஸ் ஒருத்தி’ பாடல்!

அர்ஜூன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஒன்ஸ் மோர்’ படத்திலிருந்து பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீ காந்த் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் மற்றும் நடிகை அதிதி ஷங்கரின் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் இந்த ‘ஒன்ஸ் மோர்’. ‘குட் நைட் ‘ மற்றும் ‘லவ்வர்’ திரைப்படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. மலையாள பிரபல இசையமைப்பாளரான ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ள இந்த படத்தின் மிஸ் ஒருத்தி பாடல் தற்போது வெளியாகி உள்ளது. பாடல் இணையத்தில் வைராகி வருகின்றது.

வைரலான வீடியோ… அதிரடி முடிவெடுத்த சாய் பல்லவி!

பிரேமம் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. முதல் படத்திலேயே தென்னிந்தி ரசிகர்களை தன்வசம் கட்டி இழுத்துவிட்டார். சமீபத்தில் இவர் நடித்த கார்கி படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்காக, சிறந்த நடிகைக்கான 3 விருதுகளை தட்டிச்சென்றார். இந்த நிலையில் தற்போது சாய் பல்லவி அமரன் படத்தில் நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் நாயகியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு வருகின்ற 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகின்றது. அப்போது பேட்டி ஒன்றில் பேசிய சாய் பல்லவி தான் ஏன் கிளாமராக சினிமாவில் நடிக்கவில்லை என்பது குறித்து பேசியுள்ளார். அதில் படத்தில் நடிப்பதற்கு முன்னதாக ஒரு நடன நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டேன். அந்த நடனத்திற்கு கொஞ்சம் கவர்ச்சியாக உடையணிந்து நடனமாடினால் தான் சரியாக இருக்கும் என ஆடியிருந்தேன். படம் நடித்த பிறகு பலரும் அந்த வீடியோவை வைரலாக்கி மோசமான கமெண்ட்டுகளை போட்டனர். அப்போதுதான் முடிவு செய்தேன் இனிமேல் இப்படி செய்யக் கூடாது என சாய் பல்லவி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

சமந்தா விவாகரத்து குறித்து சர்ச்சை பதிவு… அமைச்சருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

விவாகரத்திற்கு பிறகு பல சர்ச்சைகளை சந்தித்த பின்னரும் சமந்தா – நாக சைத்தன்யா இருவரும் அவர்களது படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர். உடல் நலக்குறைவு காரணமாக சில மாதங்கள் ஓய்வில் இருந்த சமந்தா தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். மேலும் நாக சைதன்யாவுக்கும் நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் நிச்சயதார்த்தமும் நடந்துள்ளது. இந்நிலையில், தெலங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா, சமந்தா – நாகசைதன்யா குறித்து தெரிவித்த கருத்துகள் கடும் சலசலப்பை ஏற்படுத்தின. இருவரது பிரிவுக்கும் தெலங்கானா முன்னாள் அமைச்சர் கே.டி.ராமாராவ்தான் காரணம் என்று கொண்டா சுரேகா தெரிவித்திருந்தார். இதற்கு சமந்தா மற்றும் நாக சைத்தன்யா இருவரும் தங்களது பதிலை தெரிவித்த நிலையில் பிரபலங்கள் பலரும் அமைச்சரின் பேச்சுக்கு  கண்டனத்தை தெரிவித்தனர். இந்த நிலையில் நீதிமன்றம் அமைச்சர் பதிவிட்ட சர்ச்சை கருத்தை உடனடியா நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

கைதி 2 குறித்து லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட்!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினியின் 171-வது படமான ‘கூலி’ படத்தை இயக்கி வருகிறார். முன்னதாக இந்தப் படத்தின் போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து படத்திற்கான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக படத்தில் நடிக்கும் நடிகர்களின் அறிமுக போஸ்டர்களை படக்குழு தொடர்ந்து வெளியிட்டது. அன்பறிவு ஸ்டண்ட் இயக்குநர்களாக பணியாற்றுகின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. கூலி படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ள சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், சௌபின் சாகிர் உள்ளிட்டவர்களின் கேரக்டர் போஸ்டர்களையும் அடுத்தடுத்து லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். இந்த நிலையில் இயக்குநர் லோகேஷ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் முன்னதாக வெளியான கைதி படத்தின் இரண்டாம் பாகம் குறித்து லோகேஷ் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதன்படி லோகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் டில்லி திரும்ப வருவார் என்று வெளியிட்டது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் ரஜினியின் ‘வேட்டையன்’ படம்!

ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த நடித்த படம் வேட்டையன். கூட்டத்தில் ஒருத்தன், ஜெய் பீம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் வெளியான இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. தவறு செய்தால், என்கவுண்டர் தான் ஒரே தீர்ப்பு என்று நினைக்கும் ரஜினி, என்கவுண்டரே இருக்க கூடாது என்று போராடும் அமிதாப் இருவருக்கும் நடக்கும் மோதல் படத்தின் கதை. படம் கடந்த 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இந்த நிலையில் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதனபடி படம் வருகின்ற நவம்பர் 7-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகும் என்று கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது.

சிவகார்த்திகேயனின் அமரன் படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டது படக்குழு

நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் அமரன் படத்தில் நடித்துள்ளார். அவரது 21-வது படமான இதை, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், சோனி பிக்சர்ஸுடன் இணைந்து தயாரிக்கிறது. இதில் அவர் ராணுவ வீரராக நடிக்கிறார். அவர் ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக் இது. பிற மாநிலங்களில் உள்ள தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்கள், காஷ்மீரி வீரர்கள், ‘விஸ்வரூபம்’ வில்லன் ராகுல் போஸ், புவன் அரோரா எனப் பலரும் நடித்துள்ளனர். தமிழில் மீண்டும் ஒரு தேசபக்தி படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படம் வருகின்ற 31-ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் படத்தின் மேக்கிங் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

Latest News