Today’s Cinema News: கங்குவா இசை வெளியிட்டு விழா முதல் அமரன் படம் வரை… டாப் சினிமா செய்திகள்! - Tamil News | Top Cinema News Headlines For October 26th 2024 In Tamil kanguva audio launch amaran movie | TV9 Tamil

Today’s Cinema News: கங்குவா இசை வெளியிட்டு விழா முதல் அமரன் படம் வரை… டாப் சினிமா செய்திகள்!

இன்றைய சினிமா செய்திகள் : நடிகர் சூர்யா நடிக்கும் கங்குவா திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா முதல் நடிகர் விஜய் நடித்த வேலாயுதம் திரைப்படத்தின் 13 ஆண்டுகள் நிறைவு வரை அக்டோபர் 26ம் தேதி இன்று சினிமாவில் நடந்த டாப் செய்திகள் குறித்த சில தகவல்களை பார்ப்போம்.

Today’s Cinema News: கங்குவா இசை வெளியிட்டு விழா முதல் அமரன் படம் வரை... டாப் சினிமா செய்திகள்!

டாப் சினிமா செய்திகள்

Updated On: 

26 Oct 2024 18:20 PM

இன்றைய சினிமா செய்திகள் : நடிகர் சூர்யா நடிக்கும் கங்குவா திரைப்படத்தின் இசை வெளியிட்டு முதல் நடிகர் விஜய் நடித்த வேலாயுதம் திரைப்படத்தின் 13 ஆண்டுகள் நிறைவு வரை அக்டோபர் 26ம் தேதி இன்று சினிமாவில் நடந்த டாப் செய்திகள் குறித்து சில.

நடிகர் சூர்யாவின் கங்குவா இசை வெளியிட்டு விழா

தமிழ் பிரபல நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் கங்குவா. கோலிவுட் பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் மற்றும் பிரபல தயாரிப்பு நிறுவனம் ஸ்டூடியோ கிரீன் மற்றும் யு.வி க்ரியேஷன் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறது. இத்திரைப்படத்தில் பிரபல நடிகர்கள் திஷா பதானி, பாபி தியோல், ரெட்டின் கிங்ஸ்லி, யோகிபாபு, கோவை சரளா, கே.எஸ்.ரவிக்குமார், நட்டி நடராஜன் சுப்பிரமணியன், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். நடிகர் சூர்யா நடிப்பில் மிகப் பிரம்மாண்டமான திரைப்படமாக உருவாகும் இப்படம் சுமார் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக உள்ளது மற்றும் இந்தியாவின் சுமார் 3500 திரையரங்களுக்களில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து நிலையில் படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் நடந்துவருகின்றன. இதனைத் தொடர்ந்து கங்குவா வருகின்ற நவம்பர் 14ம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ள நிலையில் இன்று இந்த திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா நடக்க உள்ளது. இந்த இசை வெளியிட்டு விழாவானது இன்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மாலை 6மணிக்கு ஆரம்பிக்க உள்ளதாகப் படக்குழு தகவல்களை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க :அமெரிக்கா டூ மலையாள சினிமா.. அனு இம்மானுவேல் சினிமாவில் நுழைந்த கதை!

13 வருடங்களைக் கடந்த நடிகர் விஜய்யின் வேலாயுதம்.. வாழ்த்துக் கூறிய இயக்குநர் மோகன் ராஜா..!

தமிழ்த் திரைகளில் முன்னணி நடிகர் விஜய்யின் நடிப்பில் வெளியான திரைப்படம் வேலாயுதம். 2011ம் ஆண்டு பிரபல இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் மற்றும் ஆஸ்கார் பிரைவேட் லிமிட் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் வெளியான திரைப்படம் இது. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடன், நடிகை ஹன்சிகா, ஜெனிலியா மற்றும் சந்தானம் போன்ற தமிழ் முன்னணி பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த வேலாயுதம் திரைப்படம் நடிகர் விஜய்யின் 2007ல் வெளியான போக்கிரி திரைப்படத்தின் வசூலை மிஞ்சிய மிகப் பெரிய வெற்றியைத் தந்தது. இந்நிலையில் இந்த திரைப்படம் வெளியாகி 13 ஆண்டுகள் ஆன நிலையில் இயக்குநர் மோகன் ராஜா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிலுள்ளார். அதில் அவர் எனது அன்பார்ந்த விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள் என்றும் இன்றோடு வேலாயுதம் வெளியாகி 13 வருடங்கள் ஆகியுள்ளது என்றும் நடிகர் விஜய்க்கும் மற்றும் அவரது வரவிருக்கும் அரசியல் பயணத்தில் மட்டுமே சிறந்தவர் எனவும் நாளை போடப்படும் அடித்தளம் ஒரு நீடித்த மரபுக்கு வழிவகுக்கும் என்று நடிகர் விஜய்யும் மற்றும் த.வெ.க கட்சித் தலைவருமான விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் STR 49 திரைப்படத்தில் நடிக்க நடிகை பற்றிய தகவல்

தமிழ் சினிமாவில் விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் வானம் போன்ற பல திரைப்படத்தைத் தந்தவர் நடிகர் சிம்பு. இவர் தற்போது பல திரைப்படங்களில் கமிட்டான நிலையில் நடிகர் கமல் நடிக்கும் “தக் லைப்” என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். இதனைத் தொடர்ந்து இவர் தற்போது “ஓ மை கடவுளே மற்றும் டிராகன்” போன்ற திரைப்படங்களை இயக்கும் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள STR 49 என்ற தற்காலிகமாகப் பெயரிடப்பட்ட திரைப்படத்தில் நடிக்க உள்ளார். தமிழ் திரைத்துறையில் 1984ல் தனது தந்தை டி.ஆர். ராஜேந்திரன் இயக்கிய “காத்த கிளி” என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பட வாழ்க்கையை ஆரம்பித்தார். தொடர்ந்து திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சிறுவயதிலிருந்தே தமிழ் மக்களிடம் முழு தொடர்பிலிருந்த இவர் 2002ல் தனது தந்தை இயக்கிய “காதல் அழிவதில்லை” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். சினிமாவில் பன்முக திறமை கொண்ட நடிகர்களில் முன்னணியாக இவர் தற்போது நடிக்க உள்ள STR 49 என்ற திரைப்படத்தின் முதல் போஸ்டர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புகளைப் பெற்ற நிலையில் இந்த திரைப்படத்தில் நடிக உலா நடிகை யார் என்பதைப் பற்றி கேள்விகள் எழுந்துவரும் நிலையில் இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படத்தில் நடித்த கதாநாயகியான மீனாட்சி சவுத்ரி இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது.

 

சர்ச்சையில் நடிகர் பிரபு தேவாவின் ஜாலியோ ஜிம்கானா திரைப்படத்தின்  முதல் பாடல்

 

தமிழ்த் திரைப்பட இயக்குநர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் நடிகரும் மற்றும் நடனக் கலைஞருமான பிரபு தேவா நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ஜாலியோ ஜிம்கானா. டிரான்ஸ் இந்தியா அண்ட என்டேர்டைமென்ட் தயாரிப்பில் உருவாகிவரும் இதில் துணை நடிகர்களாக மடோனா செபாஸ்டியன், அபிராமி, யாஷிகா ஆனந்த், யோகி பாபு ஆகிய பல பிரபலங்களும் நடித்துள்ளனர். கடந்த வருடமே இந்த திரைப்படத்தின் முதல் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது இந்த திரைப்படத்திலிருந்து முதல் பாடலை இப்படக்குழு வெளியிட்டுள்ளது. இசையமைப்பாளர் அஸ்வின் விநாயக மூர்த்தி இசையமைப்பில் வெளியான “போலீஸ்காரனா கட்டிகிட்ட” என்ற லிரிக்கல் பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை நடிகை ஆண்ட்ரியா பாடியுள்ளார். இந்த பாடல் வெளியாகி இணையத்தில் பரவி வரும் நிலையில் இப்பாடலின் வரிகள் இரட்டை அர்த்தத்தைக் கொண்டதாக இருக்கிறது என்ற சர்ச்சையில் தற்போது இருக்கிறது.

இதையும் படிங்க :Cinema Rewind: ‘பிரச்சனையைக் கண்டால் ஒதுங்கிடுவாங்க’ – நயன்தாரா குறித்து ஆச்சரியப்பட்ட நடிகை சரண்யா

 

பாக் ஆபிஸ் வசூலை வாரிக் குவிக்கும் நடிகர் ஜீவாவின் பிளாக் திரைப்படம்

நடிகர் ஜீவா மற்றும் நடிகை பிரியா பவானி சங்கரின் நடிப்பில் வெளியான திரைப்படம் பிளாக். தமிழ்த் திரைப்பட அறிமுக இயக்குநர் பாலசுப்ரமணியன் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 11ம் தேதி சரஸ்வதி பூஜையை ஒட்டி வெளியாகியுள்ளது. ட்ரியம்ஸ் வாரியர்ஸ் தயாரித்த இந்த திரைப்படமானது ஹாலிவுட் திகில் திரைப்படமான “கோஹரன்ஸ்” என்ற திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும். நடிகர் ரஜினியின் வேட்டையன் திரைப்படம் வெளியாகி மறுநாள் வெளியான இத்திரைப்படம் இன்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புகளைப் பெற்று வருகிறது. அமானுஷ்யம் மற்றும் திகில் நிறைந்த இத்திரைப்படம் வெளியாகி இன்றோடு 15 நாட்கள் ஆனா நிலையில் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா. இந்த திரைப்பட இதுவரை மொத்தம் 9.9 கோடியை வசூல் செய்துள்ளது. குறைந்த முதலீட்டில் வெளியான இத்திரைப்படம் பல கோடிகளை வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் வெற்றித்திரைப்படமாக உள்ளது.

 

“ப்ரீ புக்கிங்கில்” கெத்துக்காட்டும் நடிகர் சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம்

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை சாய் பல்லவியின் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் அமரன். இயக்குநர் இயக்குனர் ராஜ்குமார் பெரிய சாமியின் இயக்கத்தில் வெளியாக உள்ள மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை கதையைக் கொண்ட திரைப்படமாகும். இத்திரைப்படத்தை நடிகரும் தயாரிப்பாளருமான கமல்ஹாசன் ராஜ் கமல் பிலிம்ஸ் இப்படத்தைத் தயாரித்து உள்ளது. இத திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது படத்தின் ப்ரமோஷன் வேலைகள் நடந்துவருகிறது. இந்த திரைப்படத்தின் அறிமுகம் மற்றும் ஆடியோ வெளியிட்டு எனப் பல நிகழ்ச்சிகள் கடந்த வாரம் நடந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இத்திரைப்படம் வருகின்ற அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகையை ஒட்டி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தற்போது அமரன் திரைப்படத்தின் அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங் நடந்துவரும் வேளையில் இந்த திரைப்படம் இதுவரை சுமார் “75 லட்சத்திற்கும்” மேல் ப்ரீ புக்கிங்கில் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இதையும் படிங்க :‘வேட்டையன்’ படம் 3வது வார வசூல் எப்படி? வெளியான தகவல்!

உடலில் வைட்டமின் பி12 அதிகரிக்க என்ன சாப்பிட வேண்டும்?
காலை வெறும் வயிற்றில் இந்த பழங்களை சாப்பிடுங்கள்.. அற்புதமான பலன் கிடைக்கும்
வாசனை திரவியம் பயன்படுத்துவதால் இவ்வளவு பிரச்னையா?
நூடுல்ஸ் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்னையா?