Today’s Cinema News: வேட்டையன் பட பாடல்… ஜானி மாஸ்டருக்கு நீதிமன்ற காவல் – டாப் சினிமா செய்திகள்!
இன்றைய சினிமா செய்திகள்: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படத்திலிருந்து வெளியானது இரண்டாவது சிங்கிள் முதல் பாலியல் வழக்கில் டான்ஸ் மாஸ்டர் ஜானிக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு வெளியான வரை இன்று செப்டம்பர் மாதம் 20-ம் தேதி சினிமாவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் குறித்து சில.
இன்றைய சினிமா செய்திகள்: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படத்திலிருந்து வெளியானது இரண்டாவது சிங்கிள் முதல் பாலியல் வழக்கில் டான்ஸ் மாஸ்டர் ஜானிக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு வெளியான வரை இன்று செப்டம்பர் மாதம் 20-ம் தேதி சினிமாவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் குறித்து சில.
விஜயின் ‘கோட்’ படம் 15 நாள் வசூல் இவ்வளவா?
நடிகர் விஜயின் நடிப்பில் கடந்த 5-ம் தேதி உலகம் முழுவதும் வெளியான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் 15 நாள் வசூல் குறித்து தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. உலகம் முழுவதும் சுமார் 5000 திரையரங்குகளில் படம் ரிலீஸ் செய்யப்பட்டது. படம் முதல் 13 நாட்களில் ரூபாய் 413 கோடிகளை வசூல் செய்ததாக படக்குழு தெரிவித்தது. 13 நாட்களில் விஜய் படத்தின் வசூல் வெறும் 413 கோடி என்பது குறைவான வசூல் என்று ரசிகர்கள் கவலை தெரிவித்து வந்தனர். படம் இன்னும் ஒரு வாரத்திற்கு கட்டாயம் ஓடும் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் படம் முதல் 15 நாளில் ரூபாய் 420 கோடிகள் முதல் 425 கோடிகள் வரை வசூல் செய்திருக்க வாய்ப்புள்ளது என பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்தின் மொத்த வசூல் குறித்து படக்குழு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஹேப்பி பர்த்டே சௌந்தர்யா ரஜினிகாந்த்
தமிழ் சினிமா மட்டும் இன்றி இந்திய சினிமாவின் அடையாளமாக திகழ்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த. சினிமாவில் கொடிகட்டி பறக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு இரண்டு மகள்கள் உள்ளனர். முதல் மகள் ஐஸ்வர்யா, இரண்டாவது மகள் சௌந்தர்யா. இருவரும் ரஜினி போல நடிக்கவில்லை என்றாலும் சினிமா துறையில் இயக்குநர்களாக தங்களை அடையாளப்படுத்திக்கொண்டனர். இந்த நிலையில் இன்று சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது 40-வது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
’வேட்டையன்’ படத்திலிருந்து வெளியானது ‘ஹண்டர் வண்டார்’
நடிகர் ரஜினியின் வேட்டையன் படத்தின் இரண்டாவது சிங்கிளான ‘ஹண்டர் வண்டார்’ லிரிக்கள் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. ஜெய் பீம் படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கும் அந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது. வேட்டையன் திரைப்படம், வரும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இப்படத்தின் இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘ஹண்டர் வண்டார்’ என்ற இந்தப் பாடலை அறிவு எழுதியுள்ளார். சித்தார்த் பஸ்ரூர் இந்தப் பாடலைப் பாடியுள்ளார். பாடல் ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகின்றது.
ஜானி மாஸ்டருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
பாலியல் புகாருக்கு உள்ளான திரைப்பட நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து உப்பரப்பள்ளி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2019ல் இவருடன் பணிப்புரிந்தபோது தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 21 வயது இளம்பெண் போலீஸில் புகார் கொடுத்துள்ளதார். அதன்பேரில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின்பேரில் தெலங்கானா போலீசார் டான்ஸ் மாஸ்டர் ஜானி மீது வழக்கு பதிந்துள்ளனர். ஹைதராபாத் ராய்துர்கம் காவல் நிலையத்தில் இவர் ஜானி மாஸ்டர் மீது புகாரளித்துள்ளார். சென்னை , மும்பை , ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு படப்பிடிப்பிற்கு சென்றபோது ஜானி மாஸ்டர் தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் பேரில் ஜானியை நேற்று போலீஸார் கைது செய்தனர். இந்த நிலையில் இன்று நடந்த விசாரணையில் ஜானிக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
சைந்தவி திரும்ப வீட்டுக்கு வரவேண்டும் – ஏ.ஆர்.ரைஹானா உருக்கம்
“ஜி.வி.பிரகாஷ்,சைந்தவி இருவருமே வாழ்க்கையில் இணைய வேண்டும் என்று அவர்கள்தான் முடிவு செய்தனர். இப்போது பிரிய வேண்டும் என்றும் அவர்கள்தான் முடிவு செய்தனர். அவர்கள் சேர்ந்து இருக்கும்போது என்னால் பிரிக்க முடியுமா? விதி என்று ஒன்று இருக்கிறது. இப்போது நான் போய் இருவரும் சேர வேண்டும் என்று சொன்னால் சேரப் போகிறார்களா? சைந்தவி ஒரு அற்புதமான பெண். சைந்தவி திரும்ப வீட்டுக்கு வரவேண்டும் என்று உண்மையிலேயே நான் விரும்புகிறேன். என் மகளை காட்டிலும் சைந்தவியிடம் நான் அதிகம் மனம் விட்டு பேசுவேன்” என்று இசையமைப்பாளரும் ஜி.வி.பிரகாஷின் தாயாருமான ஏ.ஆர்.ரைஹானா தெரிவித்துள்ளார்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் படத்தின் பிரபல வில்லன்
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவரது ஸ்டோன் பென்ச் நிறுவனத்தின் மூலம் படங்களைத் தயாரித்து வருகின்றார். தற்போது சூர்யாவின் 44வது படத்தை இயக்கி வருகிறார். இதுதவிர சத்தமின்றி புதிய வெப் தொடர் ஒன்றை தனது தயாரிப்பில் எடுத்து வருகிறார். அசோக் வீரப்பன், பரத் முரளிதரன், கமலா என மூவரும் இணைந்து இந்த தொடரை இயக்குகின்றனர். திரில்லர் ஜானரில் உருவாகும் இந்த வெப் தொடருக்கு ‘ஸ்நேக்ஸ் அண்ட் லேடர்ஸ்’ என தலைப்பு வைத்துள்ளனர். இதில் கதாநாயகனாக தெலுங்கு பட நடிகர் நவீன் சந்திரா நடித்துள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் தனுஷின் ‛பட்டாஸ்’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வேட்டையன் படத்திலிருந்து ரஜினியின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது தனது 170-வது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். அமிதாப் பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படம் வருகின்ற அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்தில் நடித்த நடிகர்களின் அறிமுக வீடியோக்களை தொடர்ந்து படக்குழு வெளியிட்டு வந்தது. அந்த வகையில் தற்போது ரஜினியின் அறிமுக வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
அடுத்த ஏ.ஆர்.ரகுமான் அனிருத்… புகழ்ந்து தள்ளிய ஜூனியர் என்.டி.ஆர்!
நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தனது 30-வது படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கும் இப்படத்துக்கு ‘தேவரா பாகம்-1’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார். வருகிற 27-ந் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளநிலையில், படக்குழு புரொமோசன் பணிகளில் ஈடுபட்டுள்ளது. அப்போது பேட்டி ஒன்றில் பேசிய ஜூனியர் என்.டி.ஆர் இசையமைப்பாளர் அனிருத்தின் திறமை அற்புதமானது. அடுத்த ஏ.ஆர். ரகுமானாக அனிருத் மாறிவருகிறார் என்று பாராட்டியுள்ளார்.
ஆலியா பட்டுக்கு இப்படி ஒரு நோய் இருக்கா?
ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆலியா பட். மிக இளம் வயதிலேயே நடிக்க வந்துவிட்ட ஆலியா பட் தன்னை விட 10 வயது மூத்த நடிகர் ரன்பீர் கபூரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு தற்போது ஒரு மகளும் இருக்கிறார். ஆலியா பட் சமீபத்திய பேட்டியில் தனக்கு Attention Deficit Disorder (ADD) என்ற நோய் இருப்பதாக கூறி இருக்கிறார். இது இருப்பதால் தன்னை ஒரு விஷயத்தில் 45 நிமிடங்களுக்கு மேல் கவனம் செலுத்த முடியாது என்றும் நடிகை ஆலியா பட் தெரிவித்துள்ளார்.