விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’… சென்சார் போர்ட் கொடுத்த சான்றிதழ்! - Tamil News | U A certificate for Vijay Antony starrer Mazhai Pidikkatha Manithan movie | TV9 Tamil

விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’… சென்சார் போர்ட் கொடுத்த சான்றிதழ்!

Mazhai Pidikatha Manithan: தற்போது ‘மழை பிடிக்காத மனிதன்’ என்ற படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் சரத்குமார், சத்யராஜ், டாலி தனஞ்செயா, முரளி ஷர்மா, மேகா ஆகாஷ், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பிரித்வி அம்பேர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். கமல் போஹ்ரா, லலிதா, பிரதீப் மற்றும் பன்கஜ் போஹ்லரா இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனர்.

விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’... சென்சார் போர்ட் கொடுத்த சான்றிதழ்!

‘மழை பிடிக்காத மனிதன்’

Published: 

26 Jun 2024 12:53 PM

நடிகர் விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்திற்கு சென்சார் போர்ட் கொடுத்த சான்றிதழ் விவரம் வெளியாகியுள்ளது. இடைவெளி இல்லாமல் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ரோமியோ’ படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில் தற்போது ‘மழை பிடிக்காத மனிதன்’ என்ற படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் சரத்குமார், சத்யராஜ், டாலி தனஞ்செயா, முரளி ஷர்மா, மேகா ஆகாஷ், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பிரித்வி அம்பேர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். கமல் போஹ்ரா, லலிதா, பிரதீப் மற்றும் பன்கஜ் போஹ்லரா இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனர்.

விஜய் ஆண்டனியின் படங்களில் எப்போதும் அழகான மற்றும் மறக்க முடியாத பாடல்கள் இருக்கும். ‘மழை பிடிக்காத மனிதன்’ படம் அதன் தலைப்பைப் போலவே மனதைக் கவரும் மெல்லிசை மற்றும் பெப்பி பாடல்கள் என சுவாரஸ்யமான கலவையைக் கொண்டுள்ளது. இசையமைப்பாளர் ராயின் இசையமைப்பில் படத்தில் இருந்து வெளியான ‘தீரா மழை’ மற்றும் இசையமைப்பாளர் ஹரி டஃபுசியாவின் ’தேடியே போறேன்’ ஆகிய இரண்டு பாடல்களுக்கும்  ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Also read… ’கல்கி 2898 AD’ படத்திற்காக கமல் டப்பிங் பேசிய மொழிகள் எத்தனை தெரியுமா?

இந்நிலையில் கடந்த மாதம் வெளியான படத்தின் டீசர் ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றது. “சில உயிர்கள் அற்பமானவை எனும் எண்ணமே உலகின் அனைத்து தீமைகளுக்கும் காரணம்” என டீசரின் தொடக்கத்தில் வரும் வசனமும், விஜய் ஆண்டனியின் ஆக்‌ஷன் அவதராமும் ரசிகர்களிடையே இந்த படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது. குறிப்பாக இறுதியில் மழை பெய்யும் காட்சியும், அதற்கான விஜய் ஆண்டனியின் ரியாக்‌ஷனும், கவனம் பெற்றது.

இதையடுத்து இந்த படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!