பாக்கியலட்சுமி சீரியலில் ஈஸ்வரிக்காக சாட்சி சொல்லும் மயூ… அதிர்ச்சியில் ராதிகா - Tamil News | vijay tv Baakiyalakshmi serial Promo update today on 16th July 2024 | TV9 Tamil

பாக்கியலட்சுமி சீரியலில் ஈஸ்வரிக்காக சாட்சி சொல்லும் மயூ… அதிர்ச்சியில் ராதிகா

Published: 

16 Jul 2024 13:37 PM

Baakiyalakshmi Serial Update: அம்மாவை வீட்டை விட்டு வெளியே அனுப்பிய சோகத்தில் கோபி தொடர்ந்து குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தது ராதிகா மற்றும் கமலாவிற்கு எரிச்சலை உண்டாக்க அவர்கள் கோபியிடம் சண்டை போடுகின்றனர். இந்த சண்டை முற்ற கோபி தனது மாமியாரான கமலாவை அடிக்க கை ஓங்குகிறார். இதனைத் தொடர்ந்து கமலா கோபியின் அம்மா ஈஸ்வரிக்கு எதிராக போலிஸ் ஸ்டேசனில் புகார் கொடுத்து ஈஸ்வரி கைது செய்யப்பட்டார். சாட்சிகள் ஆதாரங்கள் எல்லாம் ஈஸ்வரிக்கு எதிராக இருந்தது.

பாக்கியலட்சுமி சீரியலில் ஈஸ்வரிக்காக சாட்சி சொல்லும் மயூ... அதிர்ச்சியில் ராதிகா

பாக்கியலட்சுமி சீரியல்

Follow Us On

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் ஈஸ்வரிக்காக கோர்ட்டில் வந்து மயூ சாட்சி சொல்வதைக் கண்டு ராதிகா அதிர்ச்சி அடைந்துள்ளார். விஜய் டிவி-யில் திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 முதல் 9 மணி வரை ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்கியாவின் மாமனாராக, ராமமூர்த்தி கேரக்டரில் நடிகர் எஸ்டிபி ரோசரி, மாமியார் ஈஸ்வரியாக பிரபல நடிகை ராஜலக்ஷ்மி, மூத்த மகன் செழியனாக விகாஷ் சம்பத், இளையமகன் எழிலாக விஜே விஷால் நடித்து வந்த நிலையில் அவருக்கு பதிலாக தற்போது நடிகர் நவீன் நடிக்கிறார், மகள் இனியாவாக நடிகை நேஹா மேனன், மருமகள் ஜெனியாக திவ்யா கணேஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

சினிமா படங்களுக்கு ரசிகர்கள் லட்சக்கணக்கில் இருப்பதைப் போன்று டிவிகளில் ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதோடு சீரியல்களில் நடிக்கும் நடிகர்களை தங்களுக்கு மிகவும் பரிச்சயமானவர்கள் போல அன்பு செலுத்தி வருகிறார்கள் பார்வையாளர்கள்.

3 பிள்ளைகளுக்கு அப்பாவான கோபி பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்துகொண்டார். ராதிகாவுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில் கோபியின் மகன் செழியனுக்கு குழந்தை பிறந்து கோபி தாத்தா ஆகிவிட்டார்.

இந்த சீரியலில் கடந்த சில தினங்களாக ராதிகா கர்ப்பமாக இருந்த கதை ஓடிக்கொண்டிருந்த நிலையில் கடந்த வாரம் அவரது கர்ப்பம் கலைந்தது குறித்த கதை ஒளிபரப்பப்பட்டது. ராதிகா மற்றும் கமலா இருவரும் ராதிகாவின் கரு கலைந்ததற்கு ஈஸ்வரி தான் காரணம் என்று தொடர்ந்து குற்றம் சாட்டினர். இதை மறுத்து பேசிய கோபி ஒரு கட்டத்தில் நம்பி, தன்னுடைய அம்மாவிடம் ஆத்திரத்துடன் பேசுகிறார். தன்னுடைய குழந்தை கருவிலேயே இல்லாமல் போனதற்கு காரணம் ஈஸ்வரி தான் என்று அவரும் குற்றம் சாட்டுகிறார். இதையடுத்து கமலா மற்றும் ராதிகா இருவரும் ஈஸ்வரியை வீட்டை விட்டு வெளியேற வற்புறுத்துகின்றனர். இதனால் பெட்டி படுக்கையுடன் ஈஸ்வரி அந்த வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

Also read… Sirai Movie: சூர்யா 44 படத்தின் பெயர் இதுதானா? கோலிவுட்டை சுற்றும் தகவல்!

அம்மாவை வீட்டை விட்டு வெளியே அனுப்பிய சோகத்தில் கோபி தொடர்ந்து குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தது ராதிகா மற்றும் கமலாவிற்கு எரிச்சலை உண்டாக்க அவர்கள் கோபியிடம் சண்டை போடுகின்றனர். இந்த சண்டை முற்ற கோபி தனது மாமியாரான கமலாவை அடிக்க கை ஓங்குகிறார். இதனைத் தொடர்ந்து கமலா கோபியின் அம்மா ஈஸ்வரிக்கு எதிராக போலிஸ் ஸ்டேசனில் புகார் கொடுத்து ஈஸ்வரி கைது செய்யப்பட்டார். சாட்சிகள் ஆதாரங்கள் எல்லாம் ஈஸ்வரிக்கு எதிராக இருந்தது.

இந்த நிலையில் எதிர்பாராத விதமாக ராதிகாவின் மகள் மயூராவை பாக்கியா பார்க்கில் சந்தித்து பேசுகையில் மயூரா ராதிகாவின் கர்ப்பம் கலைந்ததற்கு ஈஸ்வரி பாட்டி காரணம் இல்லை அவர் அம்மாவை தள்ளிவிடவில்லை என்று கூற இதனை கோர்ட்டில் சொல்ல மயூவிடம் கேட்க மயூவும் சம்மதித்து கோர்ட்டிற்கு வந்து ஈஸ்வரிக்கு ஆதரவாக சாட்சி சொல்கிறார். இதனை பார்த்த ராதிகாவும், கமலாவும் அதிர்ச்சியடைகின்றனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
கோலிவுட்டில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் லிஸ்ட்
இந்த குழந்தை பிரபல சினிமா குடும்பத்திற்கு மருமகள் ஆக போறாங்க...
கல்லீரலை சுத்தப்படுத்த இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
Exit mobile version