5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

பாக்கியலட்சுமி சீரியலில் ஈஸ்வரிக்கு எதிராக போலீஸில் புகார் கொடுக்கும் கமலா!

Baakiyalakshmi Serial Update: அம்மாவை வீட்டை விட்டு வெளியே அனுப்பிய சோகத்தில் கோபி தொடர்ந்து குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தது ராதிகா மற்றும் கமலாவிற்கு எரிச்சலை உண்டாக்க அவர்கள் கோபியிடம் சண்டை போடுகின்றனர். இந்த சண்டை முற்ற கோபி தனது மாமியாரான கமலாவை அடிக்க கை ஓங்குகிறார்.

பாக்கியலட்சுமி சீரியலில் ஈஸ்வரிக்கு எதிராக போலீஸில் புகார் கொடுக்கும் கமலா!
பாக்கியலட்சுமி
Follow Us
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 02 Jul 2024 15:50 PM

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாக்யலட்சுமி தொடரில் வரும் நாட்களில் பரபரப்பான திருப்பங்கள் நிகழப்போகிறது. ஈஸ்வரிக்கு எதிராக போலீஸில் கமலா புகார் கொடுத்துள்ளார். விஜய் டிவி-யில் திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 முதல் 9 மணி வரை ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்கியாவின் மாமனாராக, ராமமூர்த்தி கேரக்டரில் நடிகர் எஸ்டிபி ரோசரி, மாமியார் ஈஸ்வரியாக பிரபல நடிகை ராஜலக்ஷ்மி, மூத்த மகன் செழியனாக விகாஷ் சம்பத், இளையமகன் எழிலாக விஜே விஷால் நடித்து வந்த நிலையில் அவருக்கு பதிலாக தற்போது நடிகர் நவீன் நடிக்கிறார், மகள் இனியாவாக நடிகை நேஹா மேனன், மருமகள் ஜெனியாக திவ்யா கணேஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

3 பிள்ளைகளுக்கு அப்பாவான கோபி பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்துகொண்டார். ராதிகாவுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில் கோபியின் மகன் செழியனுக்கு குழந்தை பிறந்து கோபி தாத்தா ஆகிவிட்டார்.

கடந்த வார எபிசோடில்  ராதிகா மற்றும் கமலா இருவரும் ராதிகாவின் கரு கலைந்ததற்கு ஈஸ்வரி தான் காரணம் என்று தொடர்ந்து குற்றம் சாட்டினர். இதை மறுத்து பேசிய கோபி ஒரு கட்டத்தில் நம்பி, தன்னுடைய அம்மாவிடம் ஆத்திரத்துடன் பேசுகிறார். தன்னுடைய குழந்தை கருவிலேயே இல்லாமல் போனதற்கு காரணம் ஈஸ்வரி தான் என்று அவரும் குற்றம் சாட்டுகிறார். இதையடுத்து கமலா மற்றும் ராதிகா இருவரும் ஈஸ்வரியை வீட்டை விட்டு வெளியேற வற்புறுத்துகின்றனர். இதனால் பெட்டி படுக்கையுடன் ஈஸ்வரி அந்த வீட்டை விட்டு வெளியேறுகிறார். பாக்கியா வீட்டிற்கு வந்த ஈஸ்வரி அங்கு உள்ளவர்களிடம் கோபி தன்னை கொலைகாரினு சொல்லிட்டான் என்று புலம்புகிறார். அதனை பார்த்து வருத்தம் அடைந்த பாக்கியா ஈஸ்வரியை வேறு ஊருக்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்து அவர்கள் செல்கின்றனர்.

இந்த நிலையில் இந்த வார எபிசோட்டில் இதுவரை, அம்மாவை வீட்டை விட்டு வெளியே அனுப்பிய சோகத்தில் கோபி தொடர்ந்து குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தது ராதிகா மற்றும் கமலாவிற்கு எரிச்சலை உண்டாக்க அவர்கள் கோபியிடம் சண்டை போடுகின்றனர். இந்த சண்டை முற்ற கோபி தனது மாமியாரான கமலாவை அடிக்க கை ஓங்குகிறார்.

இந்நிலையில்தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில்எந்த வேலையும் இல்லாமல் குடித்துக்கொண்டிருக்கும் புருஷன்கொலை செய்ய தயங்காத மாமியார் என்று சொல்லும் கமலாஉடனடியாக காவல்நிலையத்திற்கு சென்று என் மகளை கொன்றுவிடுவார்களே என்று பயமாக இருக்கிறது என்று கம்ளைண்ட் கொடுக்கஈஸ்வரியை தேடி பாக்யா வீட்டுக்கு போலீஸ் வருகிறது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.