ஐஸ்வர்யா ராயின் கையில் ஏற்பட்ட காயத்திற்கு இதுதான் காரணமா? - Tamil News | what really Happened To Aishwarya Rais Arm reason viral on social media | TV9 Tamil

ஐஸ்வர்யா ராயின் கையில் ஏற்பட்ட காயத்திற்கு இதுதான் காரணமா?

Aishwarya Rai: கையில் அடிபட்டு கட்டு போட்டிருந்தாலும் அதோடு கேன்ஸ் பட விழாவின் ரெட் கார்பெட்டில் ரேம்ப் வாக் வந்துள்ளார் ஐஸ்வர்யா ராய். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று பதிவுகளை போட்டு வந்தனர். இந்நிலையில் ஐஸ்வர்யா ராயிற்கு எப்படி கையில் எழும்பு முறிவு ஏற்பட்டது என்று தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஐஸ்வர்யா ராயின் கையில் ஏற்பட்ட காயத்திற்கு இதுதான் காரணமா?

ஐஸ்வர்யா ராய்

Published: 

03 Jun 2024 13:40 PM

நடிகை ஐஸ்வர்யா ராய் எதிர்பாராத விதமாக தடுக்கி விழுந்ததால் தான் அவரது கையில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகை ஐஸ்வர்யா ராய் கடைசியாக தமிழில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இரண்டு பாகங்களிலும் நடித்திருந்தார். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் நந்தினி மற்றும் ஊமைராணி ஆகிய இரண்டு கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருந்தார் நடிகை ஐஸ்வர்யா ராய். இந்த படங்களை தவிர்த்து அவர் அடுத்ததாக வேறு எந்த படங்களிலும் ஒப்பந்தமாகவில்லை. இந்நிலையில் கேன்ஸ் பட விழாவில் கலந்துகொள்வதற்காக அடிபட்ட கையோடு வந்த நடிகை ஐஸ்வர்யா ராய், ரெட் கார்பெட்டில் ரேம்ப் வாக் செய்தபோது எடுத்த புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் வைரலானது.

பிரான்ஸ் நாட்டில் 77-வது ‘கான் திரைப்பட விழா’ 14-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை மொத்தம் 10 நாட்கள் நடைபெறது. இதில் உலகின் பல்வேறு பகுதிகளில் வெளியான திரைப்படங்கள், ஆவணப்படங்கள் திரையிடப்பட்டன. புகழ்பெற்ற இந்த திரைப்பட விழாவில் இந்தியா சார்பில் 7 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. ஆண்டுதோறும் இந்த விழாவில் இந்திய நடிகைகள் கலந்துகொண்டு சிவப்புக் கம்பள அணிவகுப்பை அலங்கரித்து வருகின்றனர்.

இந்த திரைப்பட விழாவில் உலகம் முழுவதும் இருந்து வரும் நடிகர், நடிகைகள் பிரமாண்டமாகவும், வித்தியாசமாகவும் உடைகளை அணிந்து, சிவப்பு கமபலத்தில் நடந்து வந்து தங்களை வெளிப்படுத்துவது வழக்கம். அந்த வகையில் ஐஸ்வர்யா ராய் சிவப்பு கம்பளத்தில் மகள் ஆராத்யாவுடன் தோன்றிய புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் தீயாக பரவியது.

கையில் அடிபட்டு கட்டு போட்டிருந்தாலும் அதோடு கேன்ஸ் பட விழாவின் ரெட் கார்பெட்டில் ரேம்ப் வாக் வந்துள்ளார் ஐஸ்வர்யா ராய். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று பதிவுகளை போட்டு வந்தனர். இந்நிலையில் ஐஸ்வர்யா ராயிற்கு எப்படி கையில் எழும்பு முறிவு ஏற்பட்டது என்று தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Also read… விரைவில் முடிவுக்கு வரும் எதிர்நீச்சல் சீரியல்? வருத்தத்தில் ரசிகர்கள்!

அதன்படி ஐஸ்வர்யா ராய் வீட்டிலிருந்தபோது எதிர்பாராத விதமாகத் தடுக்கி விழுந்துவிட்டாராம். இதில் அவரது கையில் முறிவு ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடந்து இரண்டு நாள் கழித்துத்தான் திரைப்படவிழாவில் கலந்து கொள்வதற்கான காஸ்டியூம் குறித்து முடிவு செய்யப்பட்டதாம். மேலும் கவனமாக இருக்கும் படியும், மேற்கொண்டு ஒரு காயம் ஏற்படும் வகையில் நடந்து கொள்ளவேண்டாம் என்றும் மருத்துவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

12 வயதுக்குள் உங்கள் குழந்தை கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்!
உங்கள் பயணங்களை சிறப்பான மாற்ற சில டிப்ஸ்!
கீரை ஃப்ரெஷாக இருக்க சில டிப்ஸ்
காலையில் எழுந்தவுடன் செல்போன் பார்ப்பதால் இவ்வளவு பிரச்னையா?