5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

‘கார்த்திகை தீபம்’ சீரியலில் கார்த்திக்கு காத்திருந்த ஏமாற்றம் – காரணம் என்ன?

கால் உடைந்து தவிக்கும் ரம்யா, கார்த்திக்கு காத்திருந்த ஏமாற்றம், காரணம் என்ன என தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான கார்த்திகை தீபம்  சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.

‘கார்த்திகை தீபம்’ சீரியலில் கார்த்திக்கு காத்திருந்த ஏமாற்றம் – காரணம் என்ன?
‘கார்த்திகை தீபம்’
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 26 Jul 2024 14:08 PM

கார்த்திகை தீபம் இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரம்யா ஆமாம் தாலி என்கிட்ட தான் இருக்கு, தீபாவுக்கு அவளுக்கு கல்யாணம் நடந்த மாதிரியே எல்லாம் ஆரம்பத்தில் இருந்து நடக்கணும்னு ஆசைப்பட்டா அதனால் தான் இப்படி செய்ததாக சொல்கிறாள். பிறகு அபிராமி தீபா ஆசைப்படியே செய்து விடலாம் என்று முடிவெடுக்கிறாள். இதை தொடர்ந்து தர்மலிங்கம் எதுக்கு இதெல்லாம், தீபா இப்படியே இருக்கட்டும் என்று பேச ஐஸ்வர்யா ஏன் பணம் இல்லனு வேண்டாம்னு சொல்றீங்களா என்று கேள்வி கேட்கிறாள், அபிராமி எல்லா செலவையும் நான் பார்த்துக்கிறேன் என்று சொல்கிறாள். அதன் பிறகு தர்மலிங்கம் மீண்டும் ஜோசியரை வந்து பார்க்க அவர் தீபா செய்தது யார் செய்யாத ஒன்னு, அவ தாலியை கழட்டியதால் தான் அபிராமி உயிர் தப்பித்தது. அப்படி இருக்கும் போது திரும்பவும் தாலி ஏறினா அவங்க உயிர் போய்டும் என்று சொல்ல வீட்டிற்கு வந்த தர்மலிங்கமும் ஜானகியும் கார்த்தியிடம் விஷயத்தை சொல்லி கல்யாணத்தை நிறுத்திடலாம் என்று முடிவெடுக்கின்றனர்.

இவர்கள் பேசுவதை கேட்ட அபிராமி கார்த்திக் கிட்ட எதுக்கு சொல்லி கல்யாணத்தை நிறுத்த போறீங்க? பயப்படும் மாதிரி எதுவும் நடக்காது, நல்லது தானே செய்ய போறோம் என்று பேசி கார்த்திக்கிடம் சென்று இந்த கல்யாணத்தில் நிறைய தடைகள் வரும்னு எனக்கு தோணுது. என்ன நடந்தாலும் இந்த கல்யாணம் நல்லபடியாக நடக்கணும். நீ நடத்தி கொடுப்பேன்னு எனக்கு சத்தியம் பண்ணு என்று சத்தியம் வாங்குகிறாள். அடுத்து தீபா கார்த்திக் கொண்டு வந்த பேக்கில் சாமியார் கெட்டப் விக், தாடி ஆகியவை இருப்பதை பார்த்து கையில் எடுக்க அதை எல்லாரும் பார்த்து விடுகின்றனர்.

இந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது இந்த பேக் எப்படி வந்தது என்று விசாரிக்கும் போது அருண் காரில் இருந்தது நான் தான் கொண்டு வந்தேன் என்று சொல்ல கார்த்திக் இளையராஜா சட்டையை பிடித்து என்னடா இது என்று கேட்க அவன் இது என்னுடைய பேக் இல்ல அந்த சேகர் பேக்காக இருக்கும் என்று சொல்கிறான்.

Also read… இந்த கொழு கொழு பாப்பா பொன்னியின் செல்வன் பட நடிகை… யார் தெரியுதா?

உடனே இரண்டு பேரும் சேகர் வீட்டிற்கு வருகின்றனர், வீடு பூட்டி இருக்க இளையராஜா அப்போ அந்த சேகர் தான் போலி சாமியாராக இருப்பான் என்று சொல்லி திரும்ப சேகர் அங்கு நிற்கிறான். இது உன்னுடைய பேக் தானே என்று விசாரிக்க அவன் என்னுடையது இல்ல என்று சொல்லி வீட்டு கதவை திறந்து என் பேக் இங்க இருக்கு என்று சொல்லி கன்பியூஸ் செய்கிறான்.

அடுத்து போலீஸ் ஸ்டேஷனில் இருந்து போன் செய்து நாடக காரர் ஒருவருடைய பேக் என்று சொல்ல கார்த்திக்கு குழப்பம் அதிகமாகிறது. இருந்தாலும் எதுவும் செய்ய முடியாமல் கார்த்திக் அமைதியாகி விடுகிறான். அடுத்து ரம்யா கான்ஸ்டபிள் மற்றும் அவருடன் சேர்ந்து நடித்தவனுக்கு பணத்தை கொடுத்து அங்கிருந்து கிளம்பி தீபா வீட்டிற்கு வருகிறாள்.

அடிக்கடி ரம்யா வீட்டிற்கு வருவது தப்பாக இருப்பதாக யோசிக்கும் மைதிலி மற்றும் மீனாட்சி படிக்கட்டில் சோப் தண்ணியை ஊற்றி ரம்யாவை விழ வைக்க அவளுக்கு காலில் அடிபடுகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

Latest News