கார்த்திகை தீபம் சீரியலில் தீபாவை தேடும் கார்த்திக்கை திசை திருப்பிய ரம்யா!
Karthigai Deepam serial update: தீபாவை தேடும் கார்த்திக்கை திசை திருப்பிய ரம்யா, அடுத்து நடக்க போவது என்ன என தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோட் அப்டேட்.
கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் ஒரு பக்கம் ரம்யா தீபாவை காணவில்லை என்று தேடுகிறாள். இன்னொரு பக்கம் அபிராமிக்கு ட்ரீட்மெண்ட் நடந்து கொண்டிருக்க அருண் ஐஸ்வர்யாவுக்கு போன் செய்து தீபா குறித்து விசாரிக்கிறான். தீபா வீட்டில் இல்ல, நான் மட்டும் தனியா தான் இருக்கேன் என்று அருணை வீட்டிற்கு கூப்பிட அவன் ஐஸ்வர்யாவை திட்டி போனை வைக்கிறான். அதன் பிறகு கார்த்திக் தீபாவை தேடி செல்லும் போது வழியில் மாணிக்கத்தை பார்க்கிறான், மாணிக்கம் ரம்யாவின் கம்பெனியில் வேலையை விட்டுட்டேன் என்று சொல்கிறான். மேலும் நீ எங்க போற என்று கேட்க கார்த்திக் அம்மாவுக்கு உடம்பு சரியில்லாத விஷயத்தையும் தீபா காணாமல் போன விஷயத்தையும் சொல்கிறான். மாணிக்கம் நானும் வேலையில்லாமல் சும்மா தான் இருக்கேன். உனக்கு உதவியா உன்கூட வரேன் என்று சொல்ல கார்த்திக் மாணிக்கத்துடன் மீனாட்சியை கடத்தி வைத்திருந்த ரவுடியை பார்க்க செல்கிறான். அந்த ரவுடியை பார்த்து மிரட்டி தீபா குறித்து விசாரிக்க நாங்க கடத்தல என்று உண்மையை சொல்கிறான்.
இதை தொடர்ந்து ஐஸ்வர்யா அருணாச்சலத்திற்காக விதவிதமாக சமைத்து கொடுத்து அசத்த அவர் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க கொத்து சாவியை கேட்க அருணாச்சலம் மீனாட்சியிடம் இருந்து சாவியை வாங்கி தர ஐஸ்வர்யா சந்தோசப்படுகிறாள். இறுதியாக இது கனவு என தெரிய வருகிறது.
இதை அப்படியே உண்மையாக்க ஆசைப்படும் ஐஸ்வர்யா அதே போல் விதவிதமாக சமைத்திருக்க இதை பார்த்த அருணாச்சலம் உனக்கு அறிவு இல்லையா.. அபிராமி ஹாஸ்பிடலில் இருக்கா, அதுவும் இல்லாமல் இன்னைக்கு அமாவாசை அப்படி இருக்கும் போது அசைவம் சமைத்து இருக்க என்று ஆவேசப்படுகிறார்.
இந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, கார்த்திக் கோவிலுக்கு வந்து தேட அங்கு அவனது நண்பன் இளையராஜாவை பார்க்க அவன் என்ன மாப்ள கோவிலுக்கு வந்திருக்க என்று கேட்க தீபா காணாமல் போன விஷயத்தை சொல்கிறான். பிறகு மூவரும் சேர்ந்து தேட தொடங்குகின்றனர். இதையடுத்து கார்த்திக் ரம்யாவுக்கு போன் செய்து தீபாவை பார்த்தீங்களா என்று விசாரிக்க அவள் இல்லை என்று பொய் சொல்கிறாள், மேலும் ரியா ஏன் தீபாவை கடத்தி இருக்க கூடாது, அந்த கோணத்தில் விசாரித்து பாருங்க என்று சொல்லி போனை வைக்கிறாள்.
Also read… நடிகை அதுல்யாவின் பாஸ்போர்ட்டை கிழித்து எறிந்த பணிப்பெண் கைது – என்ன காரணம்?
உடனே ரம்யா ஆனந்திற்கு போன் செய்து தீபாவை ரியா கடத்தி இருக்க வாய்ப்பிருக்கு, அவ வேற உங்களுக்கு போன் செய்து தீபாவை கடத்துவேனு சொல்லி இருக்கா என்று சொல்ல ஆனந்திற்கும் சந்தேகம் வருகிறது. அதன் பிறகு ரம்யா ஐஸ்வர்யா வீட்டிற்கு வந்து ராஜேஸ்வரியிடம் பேச்சு கொடுத்து அப்படியே ரூமிற்குள் உள்ளே சென்று ரியாவை தேட அவள் பாத்ரூமுக்குள் ஒளிந்து கொள்கிறாள். பாத்ரூமில் ஒளிந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தில் ரம்யா நெருங்கி செல்ல ரியா கரப்பான் பூச்சியை தூக்கி போட ரம்யா அதை பார்த்து பயந்து அங்கிருந்து நகர்ந்து வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.