கார்த்திகை தீபம் சீரியலில் தீபா குறித்து கார்த்திக்கு கிடைத்த தகவல்! - Tamil News | Zee Tamil Tv Karthigai Deepam serial update today on 7th July 2024 | TV9 Tamil

கார்த்திகை தீபம் சீரியலில் தீபா குறித்து கார்த்திக்கு கிடைத்த தகவல்!

Karthigai Deepam serial update: தீபா குறித்து கார்த்திக்கு கிடைத்த தகவல், போன் காலால் கதி கலங்கும் ரம்யா என தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான கார்த்திகை தீபம் சீரியலின் வீகென்ட் எபிசோட் அப்டேட்.

கார்த்திகை தீபம் சீரியலில் தீபா குறித்து கார்த்திக்கு கிடைத்த தகவல்!

கார்த்திகை தீபம்

Published: 

07 Jul 2024 13:18 PM

கார்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் கோவிலுக்கு வந்து தேட அங்கு அவனது நண்பன் இளையராஜாவை பார்க்க அவன் என்ன மாப்ள கோவிலுக்கு வந்திருக்க என்று கேட்க தீபா காணாமல் போன விஷயத்தை சொல்கிறான். பிறகு மூவரும் சேர்ந்து தேட தொடங்குகின்றனர். இதையடுத்து கார்த்திக் ரம்யாவுக்கு போன் செய்து தீபாவை பார்த்தீங்களா என்று விசாரிக்க அவள் இல்லை என்று பொய் சொல்கிறாள், மேலும் ரியா ஏன் தீபாவை கடத்தி இருக்க கூடாது, அந்த கோணத்தில் விசாரித்து பாருங்க என்று சொல்லி போனை வைக்கிறாள். உடனே ரம்யா ஆனந்திற்கு போன் செய்து தீபாவை ரியா கடத்தி இருக்க வாய்ப்பிருக்கு, அவ வேற உங்களுக்கு போன் செய்து தீபாவை கடத்துவேனு சொல்லி இருக்கா என்று சொல்ல ஆனந்திற்கும் சந்தேகம் வருகிறது.

அதன் பிறகு ரம்யா ஐஸ்வர்யா வீட்டிற்கு வந்து ராஜேஸ்வரியிடம் பேச்சு கொடுத்து அப்படியே ரூமிற்குள் உள்ளே சென்று ரியாவை தேட அவள் பாத்ரூமுக்குள் ஒளிந்து கொள்கிறாள். பாத்ரூமில் ஒளிந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தில் ரம்யா நெருங்கி செல்ல ரியா கரப்பான் பூச்சியை தூக்கி போட ரம்யா அதை பார்த்து பயந்து அங்கிருந்து நகர்ந்து வருகிறாள்.

இந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, ரியா சாமியார் வேடத்தில் இருக்க அங்கு வந்த ஐஸ்வர்யா நீ சூப்பர் வேலை பண்ண, தீபாவை தூக்கின மாதிரி அடுத்து மீனாட்சியை தூக்கி காலி பண்ணு.. அப்படியே ஒவ்வொருத்தரா தீர்த்து கட்டிடு, என் புருஷனை மட்டும் விட்டுடு என்று சொல்ல ரியா நான் எல்லாரையும் கொன்னுட்டு ஜெயிலுக்கு போகணும், நீ இங்க சொகுசா வாழணுமா என்று கேட்டு ஷாக் கொடுக்கிறாள்.

Also read… விறுவிறுப்பாக நடைபெறும் வேட்டையன் பட பணிகள்… டப்பிங் தொடங்கிய ஃபகத் பாசில்!

மேலும் நான் தீபாவை கடத்தல என்று சொல்ல ஐஸ்வர்யா யாரோ ஒரு சாமியாரை நம்பி தான் தீபா போய் இருக்கா என்ற விஷயத்தை சொல்ல ரியா சந்தோசப்படுகிறாள். இதையடுத்து காட்டம்மன் கோவிலில் தீபா காட்டப்படுகிறாள். சாமியார் அவளது கையை பிடித்து மந்திரத்தை சொன்னதும் அவளுக்குள் ஏதோ ஒரு எனெர்ஜி உருவானது போல் பீல் பண்ணுகிறாள்.

இதையடுத்து சாமியார் பரிகாரத்தை செய்ய தொடங்கலாம் என்று சொல்ல தீபா ரம்யாவுக்கு போன் போட்டு எங்க இருக்க? என்று விசாரிக்க நீ எங்க இருக்க என்று கேட்க தீபா கோவிலில் இருக்கும் விஷயத்தை சொல்ல ரியா கோவிலுக்கு கிளம்பி வருகிறாள். தீபாவை கூட்டி கொண்டு பரிகாரம் செய்யும் இடத்திற்கு கிளம்பி செல்கிறாள்.

மறுபக்கம் கார்த்திக் மைதிலிக்கு போன் செய்து தீபா குறித்து விசாரிக்க செங்கல்பட்டு பக்கத்தில் இருக்க சாமியாரை பார்க்க போய் இருக்கா, ஆனால் பரிகாரம் பத்தி எனக்கு எதுவும் தெரியாது என்று சொல்ல கார்த்திக் இளையராஜாவிடம் செங்கல்பட்டு சாமியார் குறித்து கேட்க எனக்கு அங்க இருக்க முனீஸ்வரன் கோவில் பூசாரி ஒருத்தரை தெரியும். அவரை போய் பார்த்தா நமக்கு தகவல் கிடைக்கும் என்று சொல்கிறான்.

இதையடுத்து கார்த்திக் ரம்யாவுக்கு போன் செய்ய காரில் தீபாவுடன் இருக்கும் அவள் வாந்தி வருவதாக சொல்லி வெளியே வந்து போனை அட்டென்ட் செய்து பேச அவன் தீபாவை பற்றி விசாரிக்கிறான், எனக்கு எதுவும் தெரியல என்று ரம்யா சொல்ல செங்கல்பட்டு சாமியார் குறித்து விசாரிக்க ரம்யா ஷாக் ஆகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!